Thursday, September 10, 2009

ஆப்பிரிக்காவின் உலக யுத்தம்






அயன் படத்தில் சூர்யா காங்கோவில் வைரம் கடத்தும் காட்சி நினைவிருக்கிறதா. அந்த வைரங்கள் எத்தனை மக்களின் உயிர்களை வாங்கியிருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா

ஒன்பது நாடுகள் சேர்ந்து ஒரு உள் நாட்டு யுத்தத்தை நடத்தியிருக்கிறது. சுமார் 57 லட்சம் மக்கள் கொல்ல பட்டிருக்கிறார்கள், முடமானவர்கள்,அனாதையான குழந்தைகள், இடம் பெயர்ந்த அகதிகள், வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்கள் ஏராளம். உலகில் தீவிரவாதம் அல்லது போர் நீடிப்பது சில நாடுகளுக்கு நல்லது. சமாதானத்தை தீவிரமாக விரும்பும் ஜப்பான்தான் துப்பாக்கி உற்பத்தியில் முதல் இடம். இருண்ட கண்டத்திலிருந்து சில நிகழ்வுகள் ஊடகங்கள் பார்வையிலிருந்து இருட்டடிக்க பட்டிருக்கிறது. அந்த நாடு ஜனநாயக குடியரசு காங்கோ( Democratic Republic of Congo).

காங்கோ ஆப்ரிக்காவின் முன்றாவது பெரிய நாடு. காங்கோ முன்பு ஸையர்(Zaire) என்ற நமகரணத்துடன் இருந்தது. ஆறு கோடி மக்கள் தொகை. மத்திய ஆப்பிரிக்காவில் அங்கோலா, குடியரசு காங்கோ( இது வேற காங்கோ), மத்திய ஆப்ரிக்கா குடியரசு, சூடான், உகண்டா, ருவாண்டா, ப்ருண்டி, தான்சானியா, சாம்பியா இவ்வளவு நாடுகள் சூழ ஒரு பக்கம் அட்லாண்டிக் பெருங்கடலுடன் வளமான நாடக இருந்தது. கனிம வளத்தில் மிகுந்த நாடு.

செப்பு, மாங்கநீஸ், தங்கம், வெள்ளி, யுரேநியம், நிலகரி, தகர தாது, ஈயம், கோபால்ட் போன்ற கனிமங்கள் கட்டங் என்னும் இடத்திலும், வைரம் கசின் என்னும் இடத்திலும் கிடைக்கிறது. இதை தவிர கச்சா எண்ணையும் காங்கோ ஆறும் அட்லண்டிகிம் கலக்கும் இடத்தில ஈரலமாக கிடைக்கிறது. காங்கோவின் 75% நிலம் காடு. தேக்கும் எபோனி மரமும் கொட்டிகிடக்கிறது.
கடந்த பதினொரு ஆண்டுகளில், நிலத்திற்க்காக அங்குள்ள கனிம வளத்திற்காக ஒரு மாபெரும் யுத்தம் நடந்திருக்கிறது. இந்த போர்களுக்கு சூத்திரதாரிகளுள் ஒருவர் ருவண்டாவின் அதிபர் பால் ககாமே. ககாமேவின் டூட்சி இனத்தை சேர்ந்தவர். அவரின் டூட்சி படையும் காங்கோவில் உள்ள சிறு சிறு போராளி குழுக்களுடன் இணைந்து ஒரு மாபெரும் யுத்தத்தை நடத்தி முடித்திருக்கிறார். இதற்க்கு காகமே கூறும் காரணம் ருவண்டவிற்கு ஹூட்டு போராளி குழுக்களால் ஆபத்து, ஹூட்டு இன தீவிரவாதிகள் 1994-இல் ருவண்டாவில் இன படுகொலைகளை நடத்தினார்கள் என்று. இன்று வரை அமெரிக்காவும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் ருவாண்டவிர்க்கு சாதகமாகத்தான் நடந்து வருகிறார்கள், காரணம் காங்கோவில் உள்ள கனிமவளம். இன்று வரை ஹூட்டு தீவிரவதிகளால் ருவாண்டவிர்க்கு அச்சுறுத்தல் என்பது விவாதத்திற்கு உட்பட்டதே.

காங்கோவில் ருவாண்டாவின் தலையீடு 1996 இல் ஆரம்பமானது. 1994 இல் ககாமாவின் ருவண்டா விடுதலை முன்னணி உகண்டாவிலிருந்து முன்னேரி டூட்சிக்கும் ஹூடுவிர்க்கும் நடந்த போரை. இந்த உள்நாட்டு போரில் ஒன்பது லட்சம் மக்கள் மடிந்தனர். ஹூட்டு இன மக்கள் இருபது லட்சம் பேர் ஐக்கிய நாட்டு கிழக்கு காங்கோ அகதிகள் முகாமிற்கு ஓடினார்கள். அங்கேயும் ருவண்டவிலிருந்து குண்டுகள் வீசி ஹூட்டுக்களை ஓட ஓட விரட்டியது ககாகமெவின் படை.

இப்போது காங்கோவின் சரித்திரத்தை சற்று புரட்டி பார்ப்போம். பிறகு ருவண்டாவின் கதையை தொடர்வோம்.

காங்கோ 1960 ஜூன் வரை 75 ஆண்டு காலம் பெல்ஜிய காலனி ஆதிகத்தின்கீழ் இருந்தது. பெல்ஜியம் அம்போவென விட்டு போன பிறகு நடந்த தேர்தலில் பாட்டரிக் லும்மும்பா பிரதமராகவும் ஜோசப் கஸாவோபூ தலைமை பொறுப்பும் ஏற்றார்கள். இரண்டு மாதத்தில் கஸாவோபூ தலைமையிலான படை பெல்ஜிய கூலி படையுடன் இணைந்து பிரதமர் லும்மும்பாவை போட்டு தள்ளியது. இதற்க்கு அமெரிக்காவும் உடந்தை.

“More evidence has emerged that when United States president Dwight Eisenhower met his national security advisers to talk about the situation in Congo two months after the June 1961 independence he said Lumumba, the country’s first prime minister, should be eliminated."— Derek Ingram, 40 years on—Lumumba still haunts the West, Gemini News Service, 1 September 2000”

சில மாதங்களுக்கு பிறகு அமெரிக்க நாடுகளின் ஆசியுடன் மொபுட்டு செஸ் சோகோ. கலவரங்களுக்கு பிறகு காங்கோவின் அதிபரனான். ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் காங்கோவின் பெயரை ஸயர்(zaire) என்று மாற்றினான். (தன்னுடைய ஜோசப் டிசயர் மொபுடோ என்னும் பெயரையும் மொபுடோ சேசே சோகோ என்று மற்றிக்க் கொண்டான்.) மொபுடோவின் ஆட்ச்சியில் பொருளாதாரம் அதலபதளம் போனது. லஞ்சம் தலை விரித்து ஆடியது. நாட்டின் இயற்க்கை வளங்கள் சூறையாடப்பட்டன. கனிமங்களை வந்தவிலைக்கு சல்லிசாக விற்றான். இவையனைத்தும் அமெரிக்காவின் துணை கொண்டு. காரணம் காங்கோ ஆப்ரிக்காவில் ஸோவியத் யூனியனை எதிர் கொள்ள ஒரு சிறந்த களம். மேலும் ஏற்கனவே சொன்னது போல் காங்கோவின் இயற்க்கை வளம்.

“U.S. policy toward Mobutu was rationalized on the grounds of fighting “communism” and Soviet influence in Africa, but the U.S. was clearly more concerned with securing its own interests in the region than helping foster a stable, secure, and peaceful future for the people of Central Africa. Lying at the center of the continent, Zaire could provide the U.S. with access to important resources, transportation routes, and political favors. Over the years, U.S. rhetoric changed slightly, placing greater emphasis on democratic reform of the regime and increased attention to human rights, but in reality policy continued to focus on promoting narrowly defined U.S. economic and strategic interests.… The U.S. prolonged the rule of Zairian dictator Mobutu Sese Soko by providing more than $300 million in weapons and $100 million in military training. Mobutu used his U.S.-supplied arsenal to repress his own people and plunder his nation’s economy for three decades, until his brutal regime was overthrown by Laurent Kabila’s forces in 1997. When Kabila took power, the Clinton administration quickly offered military support by developing a plan for new training operations with the armed forces."William D. Hartung and Bridget Moix, Deadly Legacy: U.S. Arms to Africa and the Congo War, Arms Trade Resource Center, World Policy Institute, January 2000”

மே 1997 இல் லாரட் கபிலாவின் கொரில்லா படை ருவாண்டா, உகண்டா, அங்கோலா மற்றும் எரிட்ரியா உதவியுடன் மொபுடுவின் ஆட்சிக்கு சமாதி கட்டியது. மொபுட்டு காங்கோவிற்கு விட்டு சென்றது $12 பில்லியன் கடன்.

லாரட் கபிலா ஆட்சிக்கு வந்தவுடன் ஸயர் என்னும் பெயர் மீண்டும் காங்கோ(DRC) என்று மாறியது. லாரட் கபிலாவின் சர்வதிகார ஆட்சியும் நாட்டின் சீர்கேட்டிற்கு முயற்சி ஏதும் எடுக்க வில்லை. இதை காரணம் கட்டி 1998 ஆகஸ்ட் காங்கோபுரட்சி படை ருவாண்டா, உகண்டா மற்றும் புருண்டி அரசு படையுடன் இணைந்து காங்கோவின் பெரும் பகுதியை ஆக்ரமித்தது. இந்த ஆக்ரமிப்பை லாரட் கபிலாவின் அரசுப்படை, அங்கோலா, நமிபியா மற்றும் ஜிம்பாப்வே படையுடன் சேர்ந்து எதிர்த்தது. இந்த யுத்தம் தான் ஆப்பிரிக்காவின் உலக யுத்தம்.

1997 இல் லுசாகாவில் ஆறு நாடுகள் கையப்பமிட்ட ஒப்பந்தம் யுத்தத்தை நிறுத்த முடியவில்லை. 2001 இல் லாரட் கபிலா கொல்லப்பட்டு ஆட்சி மகன் ஜோசப் கபிலாவின் கைகளுக்கு வந்தது. ஜோசப் ஏப்ரல் 2002 இல் உள்நாட்டு பூரி முடிவுக்கு கொண்டுவர உகண்டா மற்றும் ருவாண்டாவுடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்குள் இருபத்தி ஐந்து லட்சம் மக்கள் மடிந்திருந்தனர். மீண்டும் ருவண்டா கண்கோளிச பூரளிகளுக்கு உதவி செய்தது இதில் சாவு எண்ணிக்கை 38 லட்சமாக உயர்ந்தது.

1970 க்கு பின் ஜூலை 2006 இல் நடந்த பொது தேர்தலில் ஜோசப் கபிலா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இப்போது ருவண்டாவில் விட்ட கதைக்கு வருவோம். ஹூட்டு இன மக்கள் அகதிகளா காங்கோவில் கிழக்கு பகுதியில் கிவு பிராந்தியத்தில் உள்ள ஐக்கிய நடுகல் முகம்கல்லுகு சென்றார்களா. இந்த கிவு மாநிலத்தில்தான் ஏராளமான கனிமங்கள் கிடைக்கின்றது. இங்கு ருவண்டாவின் டூட்சி இனத்தவர்கள் கனிம சுரங்கங்களுக்கு அதிபர்களாகவும் நிலசுவாந்தார்களாகவும் இருந்தார்கள்.

மொபுட்டு (காங்கோவை ஸயர் என்று பெயர் மாியவர் ) ஹூட்டு இன போராளிகளுக்கு அடைக்கலம் தருவதாக கூறி, ககாமே படைலாரட் கபிலவுடன் இணைந்து ஆட்சியை கை பற்றியது. இதற்க்கு அமெரிக்காவும் உதவி செய்தது. இதற்க்கு பின் கபிலா ககாகமெவின் படையை வெளியேற சொன்னபின் வீறு கொண்டு எழுந்ததுதான் ஆப்பிரிக்காவின் உலக யுத்தம். இந்த கதையை கங்காவின் கதையில் சொல்லியயிு.

இந்த யுத்தத்தில் மிகவும் பயனடைந்தது ருவாண்டா மூலமாக முன்னேறிய நாடுகள்.

The United States military has been covertly involved in the wars in the Democratic Republic of Congo, a US parliamentary subcommittee has been told. Intelligence specialist Wayne Madsen, appearing before the US House subcommittee on International Operations and Human Rights, also said American companies, including one linked to former President George Bush Snr, the father of the current US President, are stoking the Congo conflict for monetary gains.
— John Kakande, US Army Operated Secretly in Congo, allAfrica.com, June 17,
கங்கோவின் ஏராளமாண கனிம வளத்தை ககாகமெவின் படை சூறையாடியது. ஆப்ரிக்கா உலக போர் முடிவுக்கு வரும் வேளையில் ககாகமெவின் அதரவு லுரெட் நகுண்டு என்னும் ஒரு டூட்சி தீவிரவாத படையை காங்கோவின் ஹூட்சி வசிக்கும் (அகதிகளாக) பகுதியில் இறக்கி படுபாதக செயல்களை கட்டவிழ்த்துவிட்டது ககாமேவின் ஆட்சி.

காங்கோவில் இயற்க்கை வளம் யுத்தத்தை கொழுந்து விட்டு எரிய வைத்தது. colton என்னும் தாது மின்னணு இயந்திரங்கள் தயாரிப்பதற்கு ஒரு மூலப்பொருள். அது காங்கோவின் கிழக்கு பகுதியில் ஏராளமாக கிடைக்கும். 1999-2000 இல் இந்த கோல்டன் க்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்ப்பட்டது. டூட்சி படை( காகமே) அங்கிருந்த விவசாயிகளின் நிலங்களை ஆக்ரமித்து அங்கிருந்த விவசாயிகளை அடிமையாகி அவர்கள் நிலங்களிலிருந்தே அவர்களை கொண்டு கோல்டன் யை உலக சந்தையில் விற்றது ஆதாரத்துடன் பதிவாகியிருக்கிறது.
Given the substantial increase in the price of coltan between late 1999 and late 2000, a period during which the world supply was decreasing while the demand was increasing, a kilo of coltan of average grade was estimated at $200. According to the estimates of professionals, the Rwandan army through Rwanda Metals was exporting at least 100 tons per month. The Panel estimates that the Rwandan army could have made $20 million per month, simply by selling the coltan that, on average, intermediaries buy from the small dealers at about $10 per kg. According to experts and dealers, at the highest estimates of all related costs (purchase and transport of the minerals), RPA must have made at least $250 million over a period of 18 months. This is substantial enough to finance the war. Here lies the vicious circle of the war. Coltan has permitted the Rwandan army to sustain its presence in the Democratic Republic of the Congo. The army has provided protection and security to the individuals and companies extracting the mineral. These have made money which is shared with the army, which in turn continues to provide the enabling environment to continue the exploitation.— Report of the Panel of Experts on the Illegal Exploitation of Natural Resources and Other Forms of Wealth of the Democratic Republic of the Congo, United Nations Security Council, April 12, 2001.

இதை தவிர தங்கம், தகரம், வைரம் என ஏகப்பட்டதை ககாமே படை கங்கோவிலிருந்து சூறையாடினர். சரி இதனால் ருவண்டவிற்கு ஏதேனும் லாபமா என்றால் அதுதான் இல்லை. அங்குள்ள மக்களின் வாழ்க்கைதரம் அப்படியேதான் இருக்கிறது. இவர்கள் கையில் துப்பாக்கி கொடுத்து தங்களுக்கு வேண்டியதை மேலை நாடுகள் எடுத்து கொள்கின்றன.
The United States military has been covertly involved in the wars in the Democratic Republic of Congo, a US parliamentary subcommittee has been told. Intelligence specialist Wayne Madsen, appearing before the US House subcommittee on International Operations and Human Rights, also said American companies, including one linked to former President George Bush Snr, the father of the current US President, are stoking the Congo conflict for monetary gains.— John Kakande, US Army Operated Secretly in Congo, allAfrica.com, June 17, 2001

காங்கோவில் நடந்த ஆப்ரிக்கா உலக யுத்தம் ஒரு சிக்கலான உள்நாட்டு போர். இதில் ஏழு நாடுகள் நேரடியாக பங்கு கொண்டன.
· தண்ணீருக்காக, கனிமங்களுக்காக, பல்வேறு அரசியல் நிகழ்வுகளுக்காக, பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 1998 முதல் நடந்த இந்த யுத்தத்தில்
o 54 லட்சம் மக்கள் கொல்லப்படிருக்கிறார்கள்.
o இரண்டாம் உலக போருக்கு பிறகு நடந்த மிக கோரமான யுத்தம்.( இது எத்தனைபேருக்கு தெரியும்)
o பெரும்பாலான மக்கள்( 80%) யுத்த தாக்குதல்களை விட மலேரியா, நிமோனியா, போஷாக்கின்மை போன்ற நோயகள் தாக்கி இறந்தனர். சாதரண சூழலில் நிச்சயம் சாவு எண்ணிக்கை குறைந்திருக்கும்.
o இறந்ததில் பாதிக்கு பாதி குழந்தைகள்.
o இன்னமும் 15 லட்சம் பேர் அகதிகளாய் இருக்கிறார்கள்.
இந்த அதிர்ச்சி எண்ணிக்கை ஊடகங்களுக்கும், உலக நாடுகளுக்கும் காங்கோ பக்கம் திரும்ப போதுமானது. ஆனால் மேலை நாடுகள் காங்கோவின் வளங்களால் கண்மூடி, வை பொத்தி, காதடைத்து நிற்கின்றன.

இப்போதும் காங்கோவில்அமைதி ஒரு கண்ணாடி போலிருக்கிறது எந்நேரமும் சுக்கல் சுக்கலாக உடையலாம்.

1 comment:

Anonymous said...

கலக்கிட்டீங்க தலைவர்.

தொடர்ந்து கலக்குங்க.

உங்கள் விசிறி...
கானோ கணேஷ்.