Tuesday, February 15, 2011

கலைமாமணியா அவல் பொறியா


கலைமாமணி,சுப்புலட்சுமி,பாரதி விருதுகள் மொத்தம் 125 விருதுகள் , அதுல 75 எருதுகள் சினிமா சம்ந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது (சின்னத்திரையும் சேர்த்து) . மீதி இருக்கிற 45 விருதுல 2 விருது தகுதியானவங்களுக்கு போயிருக்கு ஒண்ணு நாஞ்சில் நாடானுக்கு இன்னொண்ணு அவ்வை நடராசனுக்கு., தமன்னாவுக்கும்,அனுஷ்காவுக்கும் என்ன கலை சேவை செஞ்சாங்கன்னு கலைமாமணி கொடுத்திருக்காரு கலைஞருன்னு அவருக்கு தான் தெரியும். பாருங்க தமன்னாவுக்கு கொடுக்கும் போது கலைஞர் முகத்துல பரவசத்தை. கலைமாமணி அவல் பொறி ரேஞ்சுக்கு வந்திருச்சு. நோபல் பரிசு ஒபாமாவுக்கு கொடுத்து கலைமாமணி ரேஞ்சுக்கு வரும் போது இது ஒண்ணும் தப்பில்லதான். தமிழ் நாட்டுல சினிமா துறையை தவிர வேற துறையெல்லாம் வீணாப்போன துறைங்க.

சென்னை பையனூரில், திரைத்துறையினர் வீடுகளை கட்டிகொடுக்க 492 கோடி ருபாய் கடனும், சுமார் 90 ஏக்கர் அரசின் நிலத்தையும் ஒதுக்கி உள்ளார் கருணாநிதி.இதர செலவுகள் உட்பட மொத்தம் ரூ.674 கோடியே 84 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் 10 ஆயிரத்து 323 குடியிருப்புகளை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது தமிழக அரசு. ஆனால், இதே சினிமாவில்தான் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார். எத்தனை கோடி வேண்டுமானாலும் முதலீடு செய்யக்கூடிய சன் பிக்சர்ஸ் நிறுவனம் இருக்கிறது. ஆஸ்கார் பிலிம்ஸ் இருக்கிறது. கருணாநிதியின் கோடிஸ்வர பேரன்கள் உதயநிதி ஸ்டாலின்,தயாநிதி அழகிரி போன்ற தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். மேலும், சம்பளமாக கோடிகளை வாங்கும் கமல், .ஆர்.ரகுமான், ஷங்கர் இன்னும் பலர் இருக்கிறார்கள். இவர்கள் மனது வைத்தால் சினிமாத்துறையினரின் தேவைகளை நிறைவேற்றலாம்தானே? அதை விடுத்து, கட்டிடம் கட்டுவது முதல் கக்கூசுக்கு கதவு போடுவது வரை சினிமாக்காரர்கள் கருணாநிதியிடம் போய் நிற்பதும், அவரும் சிரித்துகொண்டே அதை நிறைவேற்றுவதும், அதன்பின்னர் பல லட்சம் செலவில் நடிகைகள் குத்தாட்டதொடு பாராட்டு விழா நடத்துவதும்....சகிக்க முடியவில்லை.

இது கடன் தொகைதான் என்றாலும், அதை சினிமாத்துறைக்கு வழங்கியது போல, ஏன் நாட்டுபுற நல வாரியத்திற்கு,நாட்டுபுற கலைகளின் மேம்பாட்டிற்கு, போகட்டும் வேறு ஏதாவது துறைக்கு இது போன்ற கடன் மற்றும் சலுகைகளை கருணாநிதி வழங்குவதில்லை ஏன்?

இந்த ஐந்து ஆண்டுகளில் வெளிவந்த படங்களின் மூலம் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டிய வரி நிச்சயம் 2000 கோடிய தாண்டும்,தமிழில் தான் பெயர் சுட்ட வேண்டும் என்று கட்டளை இட்டால் இதை அனைது திரையினரும் செய்திருப்பார்கள் (இதுல இவரோட பேர புள்ள எடுத்த படம் ன்னு தூய தமிழ்ல பேறு வெச்சாரு , அப்படின்னா குவட்டர்ன்னு அர்த்தமாம் )அதை செய்யாமல் வரி விலக்கு செய்த முதலமைச்சர் கருணாநிதியை தமிழில் வாழ்த்த வார்த்தையில்லை.வணங்குகிறோம்.

பி.கு.

1 அடுத்த ஆண்டு 125 விருகளிலிருந்து 225 ஆக உயர்த்துவதாக அறிவித்திருக்கிறார் அய்யன் கலைஞர் கருணாநிதி.

2.தமிழ் நாட்டின் கடன் ஒரு லட்சம் கோடியை தாண்டிவிட்டது.

3.ஐஸ்வர்யா தனுஷுக்கும் ஒரு கலைமாமணி, பரதத்துக்காக. (மானாட மயிலாடவில் நடுவராக இருந்து கலைச்சேவை செய்தத்ற்க்காக.

No comments: