


முன்பு கொத்தவால் சாவடியில் இருந்த காய்கறி மார்க்கெட் கோயம்பேடுக்கு மாற்றாப்பட்டது நாமெல்லாம் அறிந்ததே. தென்சென்னையில் இருக்கும் காய்கறி வியாபாரிகள் கோயம்பேடு வரை சென்று வருவது கடினமாக இருப்பதால் தென்சென்னையிலேயே கோயம்பேடுப் போல் ஒரு வணிக வளாகம் தங்களுக்கு தேவை என்று வியாபாரிகள் சங்கத்தினர் முறையிட்டிருந்தனர். இதைப் பற்றி ஜெயலலிதாவிடம் ஆறு மாதங்களுக்கு முன் மனு கொடுக்கப்பட்டது. தான் முதல்வரானால் முதல் காரியமாக 1000 கோடி செலவில் ஒரு நவீன காய்கறி சந்தையை அவர்களுக்கு வாக்களித்திருந்தார். அதன் பெயரில் நாளை முதல்வராக பதவியேற்றவுடன் ஏற்கனவே கட்டப்பட்ட நவீன காய்கறி மற்றும் பல்போருள் அங்காடியை தென்சென்னை காய்கறி வியாபாரிகளுக்கு கொடுக்கப்படும் என்று PTI செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கிறது. இந்தக் கட்டிடத்தை ஏற்க்கனவே பிரதமமந்திரி மன்மோகன் சிங் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.புதிய கட்டிடத்தின் படங்கள் மேலே.
No comments:
Post a Comment