Tuesday, August 5, 2008

அதிகாரமும் பொறுப்பும்



“The Incredibles” என்னும் கார்ட்டூன் படத்தில் ஒரு காட்சி திருமதி இன்கிரெடிபிள் தன் கணவனை தேடி செல்கையில் தனது மகன் டாஷ் மகள் வயலடையும் ஒரு குகையில் விட்டு செல்கிறாள். நல்ல அம்மாவாக வயலட்டிடம் பாதுகாப்பாக இருக்கும்படியும் டாஷை பார்த்து கொள்ளும் பொறுப்பையும் கொடுத்துவிட்டு அவளுக்கு எந்த அதிகாரமும் கொடுக்காமல் செல்கிறாள். டாஷ் அம்மா சென்றதும் குகையை சுற்றி பார்க்க கொள்ளிகட்டையுடன் செல்கிறான். வயலட் எவ்வளவு கதறி பார்த்தும் அவள் பேச்சுக்கு மதிப்பில்லை. கடைசியில் எதிரிகளிடம் இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள். பிறகு இன்கிரெடிபிள் குடும்பம் தப்பிக்கிறது அது வேறு கதை.
இந்த போக்கை இந்திய நிறுவனங்களிட்ம் அதிகம் பார்கிறேன். அவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு பொறுப்புக்கு ஏற்ற அதிகாரம் கொடுப்பதில்லை. உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில் ஒருவர் வியாபார துறைக்கு தலைவர், அவரது பொறுப்பு அவருக்கிடப்பட்ட வியாபார இலக்கை அடைவது. இதற்கு தேவையான அதிகாரம் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் ஆர்டர்களை பரிசீலித்து பார்த்து பொருட்களை அனுப்ப வேண்டும், தன் கீழ் வேலை செய்யும் ஊழியர்களை உற்சாகபடுத்தி, தேவையாதை அளித்து வியாபாரத்தை பெருக்க வேண்டும். இதில் எந்த அதிகாரமுமே அவரிடம் இல்லை. இதனால் முடிவு எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்களிடம் அவப்பெயர் ,அவர் கீழ் வேலை செய்யும் ஊழியர்களிடம் அவமதிப்பு. இதற்கு காரணம் முதளாளிகளின் சந்தேகம், பயம். அதிகாரமில்லை ஆனால் இலக்கை மட்டும் அடைய வேண்டும். இதற்கு மேலைநாடுகளில் NAG Syndrome (No Authority Gauntlet) என்கிறார்கள்.
பொறுப்புக்கேற்ற அதிகாரம் இல்லை என்றால் அதன் விளைவுகள் அவமானம், மனச்சோர்வு, நம்பிக்கையில்லா நிலை, உற்சாகமின்மை மற்றும் எதேதோ, இதனால் நிறுவனங்களில் நல்ல அதிகாரிகள் வேலையை விட்டு செல்லும் நிலை ஏற்படுகிறது. இது நிறுவனங்களுக்கு நல்லதா என்று முதளாளிகள் சிந்திக்க வேண்டும்.
“பொறுப்புக்கேற்ற” “அதிகாரம்” இல்லை என்றால் அது “அநீதி”!!!

No comments: