

நேற்று ஒரு செய்தி படித்தேன், சந்திரசேகர் என்னும் 17 வயது சிறுவன்(!) சென்னை IITயில் M.Tech பட்டம் பெற்றிருக்கிறான். 2 வருடங்களுக்கு முன்னால் 15 வயதில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறான். பையனின் மேதமையை அறிந்த குடும்ப நண்பரால் 11 வயதில் Microsoft Certified Engineer மற்றும் CISCO வில் Associate பெற்றான் இதை தவிர அந்த வயதில் Technology Information Forecasting and Assessment Council Center of Relevance and Excellence in network engineeringல் இயக்குனர் பட்டம். எல்லாம் சரி இந்த மேதாவிலாஸமெல்லாம் இயற்கையிலேயே சரியா. அந்த சிறுவன் சிறு வயதிலேயே தன் குழந்தைதன்மையை இழந்துவிட்டதாக எனக்கு படுகிறது. இந்த காலங்களில் குழந்தைகளின் மண்டைக்குள் நிறைய திணிக்கிறோம். என் மகனை பள்ளியில் LKG சேர்க்க அந்த மூன்று வயது குழந்தைக்கு தெரிந்திருக்க வேண்டியது என்ன தெரியுமா ஆங்கிலத்தில் பெரிய A-Z, சிறிய a-z அதுவும் சேர்த்து சாய்த்து எழத வேண்டும்(Cursive Writing)., கணித்தில் 0-100, இது தவிர இந்தி வேறு. எனக்கு இந்தி சுத்தமாக வராது. இன்னும் கொஞ்சம் காலம் முன்னால் பிறந்திருந்தால் திராவிட கட்சிகளுடன் சேர்ந்து இந்தி எழத்துக்களுக்கு தார் பூசியிருப்பேன். சரி இதை விட கொடுமை என்னவென்றால் குழந்தைகள் நுழைவு தேர்வு எழத தயார் செய்ய ஒரு பள்ளியிருக்கிறது. அதில் ஒன்றாரை வயது குழந்தை பாடம் படிக்க வருகிறது. தவழ ஆரம்பித்தவுடன் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள்(என்னையும் சேர்த்துதான் வேறுவழி! பள்ளியில் இடம் கிடைக்க வேண்டுமே). இதை தவிர பள்ளிகள் விடுமுறை விட்டிருக்கும் போது கூட குழந்தைகளை கோடை பயிற்சி மையங்களுக்கு அனுப்பி படிக்க செய்கிறோம். இதற்கெல்லாம் காரணம் என்னவென்று யோசித்தால் நமது பேராசைகளுக்காக அல்லது சமுதாய கட்டாயத்திற்க்காக நம் குழந்தைகளின் குழந்தை பருவத்தை பலிகொடுக்கிறோம் (கொடுக்கிறோமா அல்லது வாங்குகிறோமா தெரியவில்லை). இது நியாயமா!.
ஆண்டாள் நோன்பிருந்து திருப்பாவை பாடியபோது அவளுக்கு வயது ஐந்தாம். மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தினமாலையில் ஒரு பாடல்
அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்க்கும் தன்மையளாய் –பிஞ்சாய்
பழத்தாளை ஆண்டாளை பத்தியுடன் நாளும்
வாழ்த்தாய் மனமே மகிழ்ந்து.
எல்லாக் குழந்தைகளும் பிஞ்சிலேயே பழத்தால் என்னவாகும் போன்ஸாய் மரங்களைப் போல் போன்ஸாய் பழங்களையா உருவாக்குகிறோம் என்று யோசிக்க வேண்டாமா! எனினும் சந்திரசேகருக்கு என் வாழ்த்துக்கள்.
ஆண்டாள் நோன்பிருந்து திருப்பாவை பாடியபோது அவளுக்கு வயது ஐந்தாம். மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தினமாலையில் ஒரு பாடல்
அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்க்கும் தன்மையளாய் –பிஞ்சாய்
பழத்தாளை ஆண்டாளை பத்தியுடன் நாளும்
வாழ்த்தாய் மனமே மகிழ்ந்து.
எல்லாக் குழந்தைகளும் பிஞ்சிலேயே பழத்தால் என்னவாகும் போன்ஸாய் மரங்களைப் போல் போன்ஸாய் பழங்களையா உருவாக்குகிறோம் என்று யோசிக்க வேண்டாமா! எனினும் சந்திரசேகருக்கு என் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment