வணக்கம், என் வலைப்பதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி. உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்யவும், இது பதிவுகளை மேம்படுத்த உதவும். பாலா
Monday, August 11, 2008
அது ஒரு கனா காலம்!
லயோலா கல்லூரி எங்கள் குடும்ப கல்லூரி.என் அண்ணண் என் ஒன்று விட்ட அண்ணண்கள்(என் சித்தப்பா பசங்கள் மூவர்) பிறகு நான் எல்லோரும் லயோலைட்ஸ். இதில் ஒரு அண்ணண் தவிர மீதி அனைவரும் கணிதம் தான் படித்தோம்.
லயோலா என்னும் பெயர் புனிதர் இக்னீஷியஸின் குடும்ப பெயர். 1491ல் ஸ்பெயினில் பிறந்த இக்னீஷியஸ் அரசரின் பாதுகாவலராக பணிபுரிந்தார். ஒரு போரில் அடிபட்டு எதிரி சிறையில் இருந்த போது யேசுவிடம் ஞானம் ஏற்பட்டு `The Spiritual Exercises' என்னும் புத்தகத்தை எழதினார். புனிதர் ஃபாரான்ஸிஸ் சேவியருடன் 1540 இந்தியா வந்து யேசுவின் சமூகம் என்னும் ஒரு நிறுவனத்தை எற்படுத்தி யேசுவை பற்றி போதித்தார். இதுவே படிப்படியாக முன்னேறி பள்ளிகள் கல்லூரிகள் கட்ட ஏதுவாகியது. சென்னை லயோலா கல்லூரி கடந்த 15 வருடமாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி பிரிவில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது.
கல்லூரி சார்ந்த தமிழ் படங்களில் முக்கால்வாசி படங்களில் லயோலா கல்லூரியில்தான் எடுக்கப்படுகிறது. சரத்குமார்,விஜய், சுர்யா, விக்ரம்,விஷால்,ஜெயம் ரவி போன்ற எண்ணற்ற தமிழ் சினிமா உலகின் வைரங்களை பட்டை தீட்டியது லயோலா கல்லூரிதான்.
நான் கல்லூரிக்கு அடியெடுத்து வைக்கும்போது ஏழாவது எட்டாவது படிக்கும் ஸ்கூல் பையன் போல் இருப்பேன் தவிர வெளி உலக அனுபவம் வேறு குறைச்சல். ஆதலால் முதல் ஒரு மாதம் வரை சிந்தாதரி பேட்டையில் உள்ள என் அண்ணண் வீட்டிற்கு சென்று (அப்போது அவன் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்த கல்லூரி தாதா). அங்கிருந்து அவனுடன் காலேஜ் செல்வேன் ராகிங்கிற்கு பயந்து.
முதல் ஆண்டில் முதல் நாள் என்னை டஸ்டர், சாக்பீஸ் மற்றும் அட்டண்டன்ஸ் ரிஜிஸ்ட்ர் எடுத்து வர சொன்னார் ஒரு விரிவுரையாளர் அன்றிலிருந்து அந்த பணி எனக்கிடப்பட்டு படிப்படியாக Class Monitor (இது அந்த மானங்கெட்ட மானிட்டர் அல்ல) ஆனேன். பல பேருக்கு proxy போட்டு Condonation Feeயிலிருந்து காப்பாற்றியிருக்கிறேன். Proxy போடுவதால் தினமும் சமோசா, டீ என்று காண்டினில் ஏக உபசாரம் நடக்கும்.இரண்டாமாண்டு படிக்கும் போது காலை உடைத்துக் கொண்டு 6 மாதம் கல்லூரிக்கே செல்லவில்லை. நான் காலேஜ் படிக்கும் காலத்தில் ஒரு புத்தகம் கூட விலை கொடுத்து வாங்கியது கிடையாது இதில் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களும் அடக்கம். ரஜஸ்தான் புத்தக வங்கி மற்றும் கல்லூரி நூலகத்திலிருந்து தான் புத்தகங்கள் எடுத்து படித்திருக்கிறேன்.
நான் என் டிப்பார்ட்மெண்டிற்காக கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன், மேலும் எங்கள் கல்லூரி கலாசார விழா மிகவும் பிரசித்தி அதன் Organizing Commiteயில் இருந்தேன். காலேஜ் கட் அடித்துவிட்டு சினிமா போயிருக்கிறேன், ஊர் சுற்றியிருக்கிறேன்…
அது ஒரு கனா காலம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment