Wednesday, September 17, 2008

ஆர்கியோமெட்டலர்ஜி




மனிதன் பரிணாம வளர்சியடைய ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை, உலோகங்கள்ளின் பங்கு அளப்பரியமுடியாதவை. “மெட்டலர்ஜி” என்பது உலகின் இரண்டாவது மிக பழைமையான தொழில்.(முதல் என்ன என்பது உங்களுக்கே தெரியும்.). ஆர்கியோமெட்டலர்ஜி என்ற புதிய இயலில் இன்று பல ஆரய்சிகள் நடைபெறுகிறது.
தொல் பழங் காலத்தில் நமக்கு தங்கம், வெள்ளி, பித்தளை,வெண்கலம், ஈயம் போன்ற பல உலோகங்களை உற்பத்தி செய்யும் அறிவு இருந்திருக்கிறது. இதற்கு சாட்சியாக அடிக்கடி குறிப்பிடும் குதுப்மினாருக்கு அருகில் உள்ள, இன்றும் துருப்பிடிக்காத இரும்புக் கம்பம்.
கி.மு.8000-த்திலிருந்து தங்கமும், பித்தளையும் தோண்டி எடுக்கப் பட்டிருக்கின்றன. 6500-லிருந்து தாதுப் பொருள்களிலிருந்து தங்கமும், செம்பையும் பிரிக்கப்பட்டன. தற்செயலாக வெண்கலமும் கண்டுபிடிக்கப்பட்டு, அப்போதிலிருந்தே மணியோசை தொடங்கியிருக்கிறது. சிந்துவெளி நாகரிகத்தில் ஈயம் இருந்திருக்கிறது. தகரம் கி.மு.1000-த்திலுருந்து பயன்பட்டிருக்கிறது. கி.மு750-ல் பாதரஸமும், கி.மு.500-ல் வைரமும், சமஸ்கிருத பதிவுகளில் சொல்லப்பட்டிருக்கிறது. நம் இந்திய உலோகவியல் திறமைகளுக்குச் சாட்சியாக கி.பி 400-லிருந்து நிற்கிறது அந்த இரும்புக் கம்பம்.
மனித சரித்திரத்தில் கற்காலம், வெண்கல யுகம், இரும்பு யுகம் என்பது போல், நவீன அறிவியலின் சரித்திரத்தில் நான்கு ‘மணல் யுகங்கள்’ சொல்கிறார்கள்.
முதல் மணல் யுகத்தில், மணலை மனிதன் உருக்கி, கண்ணாடி செய்து, லென்ஸ் செய்து, டெலஸ்கோப் கண்டுபிடித்தபோது, வானில் கிரகங்கள்ளையும் நட்சத்திரங்களையும் பார்க்க ஆரம்பித்தான். அதிலிருந்து நவீன காஸ்மாலஜி துவங்கியது.
இரண்டாவது மணல் யுகம், அதே லென்ஸ்களைத் திருப்பிப் போட்டு மைக்ராஸ்கோப் செய்தபோது, நுட்பமான ஜந்துக்களையும், பாக்டீரியா போன்ற உயிர்களையும் கவனித்தான். அதிலிருந்து மாலிக்யூலர் பயாலஜிக்கு வித்திட்டு, உயிரின் ரகசியம் வரை வந்துவிட்டான்.
மூன்றாவது மணல் யுகம், சிலிக்கானிக் சில்லு புரட்சி. அதை வைத்துக்கொண்டு கம்யூட்டர் செய்து, மன வேகத்தை விரிவுபடுத்திக் கொண்டான்.
நான்காவது மணல் யுகம், ஃபைபர் ஆப்டிக் கண்ணாடி நூலிழைக்ளின் மூலம் இந்டர்நெட் செய்தி தகவல் வெள்ளம், அதனால் உலகத்தையே ஒரு கிராமமாக்கினான்.
சரி மனிதன் பரிணாம வளர்சியின் உச்சமா அல்லது மேலும் பரிணாம வளர்சியடைவானா என்று ஒரு ஆயிரம் வருடம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Thursday, September 11, 2008

Large Hardon Collider (LHC)




பிக் பேங் விதிப்படி விரிவடையும் பிரபஞ்சத்தைப்(Big Bang Theory of Expanding Universe) பற்றி கேள்வி பட்டிருக்கீற்களா. பிரபஞ்சம் உருவான கதைதான் இந்த விதி.
இந்த விதி பல விஞ்ஞனிகளால் பரவலாக ஒத்துக்கொள்ளப்பட்ட பிரபலமான விதி. இந்த விதி படி 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நேரத்தில் ஒன்றுமே இல்லை அப்படியென்றால் பிரபஞ்சமில்லை, கோள்கள்லில்லை எதுவுமே இல்லை. பிறகு எப்படி பிரபஞ்சம் பிறந்தது என்ற விளக்கம் தான் பிக் பாங் விதி. சரி இந்த விதி என்ன சொல்கிறது என்றால் ஒரு அணுவைப் போன்று ஒரு பருப்பொருள் விரிவடைந்து, விரிவடைந்து நாமிருக்கும் பிரபஞ்சம் உருவானதாக கூறுகிறது. பிரபஞ்சம் இன்னும் விரிவடைந்து கொண்டே போகிறது என்று கூறுகிறார்கள் விஞ்ஞனிகள். ஒரு பலூனில் பேனாவால் சில புள்ளிகள் வைத்து ஊதினால் என்னவாகும். புள்ளிகளின் இடைவெளி அதிகரிக்குமில்லையா அதைப்போல பிரபஞ்சத்தில் உள்ள வெளிகள்(Galaxies) விலகி போவதை ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். 1965ம் ஆண்டில் ஆர்னொ பென்சியாஸ் மற்றும் ராபர்ட் வில்சன் என்ற விண்வெளி விஞ்ஞானிகள் பிரபஞ்சம் விரிவடைவதால் அது வெளியிடும் சக்தி 270.425 செல்சியஸ் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
சரி இத்தனையும் எதற்காக என்றால் நேற்று சுவீடனிலுள்ள ஜெனீவாவில் ஒரு ஆராய்ச்சி நடந்திருக்கிறது. இது வரை மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய, மிகசக்திவய்ந்த, மிகவும் விலை உயர்ந்த எந்திரத்திற்கு Large Hardon Collider(LHC) என்று பெயர் (ஷங்கர் 2010ல் அதைவிட பெரிய எந்திரத்தை வெளியிடுகிறார் அதன் பெயர் சுப்பர் ஸ்டார் ரஜினி). இந்த Large Hardon Collider ஒரு பெரிய 27கி.மீ வட்ட வடிவு எந்திரம் முனைகள் மூடாமல் இருக்கும். இந்த எந்திரம் தயாரிக்க ஆன செலவு 5பில்லியன் பவுண்டுகளாம். மேலும் இதை இயக்க தேவைபடும் சக்தியின் மதிப்பு 30மில்லியன் டாலர்களாம். சரி இந்த கருவி என்ன செய்யும் என்றால். ப்ரோட்டான்களை உற்பத்தி செய்து ஒளியின் வேகத்தில் அதை செலுத்தும். செலுத்தி ப்ரோட்ன்களால் இரண்டு பக்கமும் அணுவை மோத செய்யும். இந்த ஆராய்சியினால் என்ன கண்டறிகிறார்கள் என்றால், நான் முன்பு சொன்னது போல் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு அணு விரிவடைய ஆரம்பித்த அந்த நொடியை இப்போது கொண்டு வந்திருக்கிறார்கள். நேற்று மெல்பர்ன் மாலை 5 மணிக்கு சரியாக இந்த இயந்திரத்தை இயக்கி ஆராய்ந்திருக்கிறார்கள். பிரபஞ்சத்தை பற்றி பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
Large Hardon Collider க்கு எதிர்ப்புக் கூட ஏராளமாக இருந்தது. LHC யால் ப்ரோட்டான் அணு பிளக்கும் 1/20 விநாடியில் பூமி பிளந்து அழியும் என்று ஒரு சாராரும். நுண்ணிய கருப்பு ஓட்டைகள் பிரபஞ்சத்தில் தோன்றும், LHC பிளக்கும் அணுவின் சக்தி 2 ட்ரில்லியன் செல்சியஸ் (ஆதாவது சூரியனின் மைய்ய பகுதி வெப்பத்தை விட ஒரு லட்சம் மடங்கு அதிகமாம்.) வெப்பம் வெளிபடும் இதனால் கடல்கள் பொங்கும் என்று மற்றொரு சாராரும் கூறுகிறார்கள். காசு செலவழித்து செய்யப்படும் இந்த ஆராய்ச்சியால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது என்றும் கூறுகிறார்கள். இதுவரை பூமி பிளக்கவில்லை, தப்பித்தோம். மேலே என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
நமக்கு இதெல்லாமா ஒரு கவலை மேலே படியுங்கள். நம்ம கமலை பத்தி.

மர்மயோகி




பிரமிட் சாய்மிரா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் “மர்ம யோகி” யின் கதை,திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் நடிப்பு நான் விரும்பும் கமல் (தலைவா தசாவதாரம் போல சொதப்பிடாத). இந்த படத்தின் பட்ஜட் 120கோடியாம். நான்கு மொழிகளில் தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் இந்தியில் தயாராகிரான் மர்மயோகி .திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார் (படத்துல குளிக்கிற ஸீன் இருக்கா) திரிஷா அம்மா அவங்க பாவாடை சட்டை போட்ட காலத்திலிருந்தே கமலின் ரசிகையாம், திரிஷா கமலுக்கு ஜோடியாக நடிப்பதில் அம்மாவிற்கு ரெட்டிப்பு சந்தோஷமாம். ஷ்ரேயா சரணும் இந்த படத்தில் நடிப்பது இப்போது புது செய்தி (மீண்டும் திரிஷாவுக்கு 40, ஷ்ரேயாவுக்கு 38 திரும்புகிறது). ஹேமமாலினியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
படம் 7வது நுற்றாண்டு கதையாம். இந்த படத்தில் Redone Camera என்னும் புதுவித கேமராவை உபயோகிக்க போகிறாராம் கமல். இதனால் படம் துல்லியமாக 4096x2304 ரெஸல்யூஷனில் படமெடுக்குமாம். மேலும் Harddiskல் பதிவு செய்யும் வசதியும் இதில் உண்டு என்பதால் ஃபிலிம் செலவு மிச்சம்.
படத்திற்கு இசை இசைஞானியல்ல இந்த முறை ஏ.ஆர்.ரகுமான். இது ஒரு பீரியட் படமாதலால் ஏ.ஆர்.ரகுமான் இசை ஆராய்சியில் இறங்கியுள்ளாராம். படத்தை பல அழகிய இடங்களில் படமாக்க உள்ளார்களாம், சுவீடனில் முக்கிய காட்சிகளை எடுக்கிறாராம் கமல் (தலைவா ஜெனீவா பக்கம் போய்டாதே அங்கதான் LHC இருக்கு).

Wednesday, September 10, 2008

அசாத்திய சக்தியுடனும், அசாதாரண வேகத்துடனும் எந்திரன் The Robot


நான் ஏற்கனவெ எழதியிருந்தது போல் வரி சலுகைகளுக்காக (ஏய்புக்காக என்று கூட வைத்துக் கொள்ளலாம்) ரோபோ எந்திரனாகியிருக்கிறான். இப்போது தமிழில் இதன் பெயர் எந்திரன் The Robot. மற்ற மொழிகளில் ரோபோ என்னும் பெயரையே வைத்துள்ளார்கள். ஆந்திரத்தில் வரிசலுகை இருந்திருந்தால் எந்திருடு The Robot ஆகியிருக்கும். இப்போது தெலுங்கில் அடி எழத்து என்ன தெரியுமா ரோபோ (தெலுங்கு ஜாங்கிரி எழத்தில் படிக்கவும்) SPEED: 1 TERA HZ, MEMORY: 1 ZETTA BYTE. அப்படியென்றால் என்ன எந்திரனை பற்றி என்ன சொல்ல வருகிறார்கள் என்று விளக்க முயல்கிறேன்.ஸீட்டாபைட் என்பது கணிணியில் உள்ள தகவல்களை சேமிக்கும் ஒரு குறியீட்டு சொல். உங்களுக்கே தெரியும் ஒரு கிலோ பைட் என்பது 1024 பைட், 1024 கிலோ பைட் ஒரு மெகா பைட், 1024 மெகா பைட் ஒரு கிகாபைட், டெரா பைட் வரை கூட தெரிந்திருக்கலாம் ஜீட்டா பைட் என்பது 1,180,591,620,717,411,303,424 பைட்டுக்களாம். உலகிலேயே 2006ல் 0.161 ஜீட்டா பைட் உள்ள கணிணிதான் நடைமுறையில் உள்ளதாம், 2010ல் இது 0.988 ஜீட்டா பைட் உள்ள கணிணி நடைமுறைக்கு வரலாம் என்று கூறுகிறார்கள் . ஹெர்ட்ஸ்(hertz Hz) என்பது அதிர்வலைகளை குறிக்கும். அப்படியென்றால் ஒரு நொடியில் எத்தனை அதிர்வலைகளை உண்டாக்கும் என்பது. இது கணிணியில் உள்ள ப்ராசசரின் வேகத்தை அளக்கும் ஒரு சொல். சாதாரணமாக் நாம் கிகா ஹெர்ட்ஸ்(Giga Hz) கேள்விபட்டிருப்போம். இப்போது டோஷிபா மடிகணிணியில் தற்சமயம் உள்ளது 4GHZ. டெரா ஹெர்ட்ஸ்(TERA HZ) என்றால் அதன் வேகம் நினைத்தே பார்க்க முடியாத வேகம்.
ஆகவே அசாத்திய சக்தியுடனும், அசாதாரண வேகத்துடனும் எந்திரமாக வரப்போவது யாரு நம்ம சூப்பர் ஸ்டாரு. நான் முன்பே இந்த பிளாக்கில் எழதியுள்ள ரஜினியால் என்ன செய்ய முடியுமை ஒரு முறை படித்து பாருங்கள், அவைகள் எந்திரனால் சாத்தியம் தானே!


நன்றி திரு.ராஜேந்தர்.


நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயை செய்து கருத்து கூறி ஊக்கம்ளியுங்கள்.

Tuesday, September 9, 2008

The Robot


எந்திரன் The Robot படபிடிப்பு நேற்று செப்டம்பர் 8ம் தேதி அமெரிக்காவில் தொடங்கியது.வரி சலுகைகளுக்காக The Robot எந்திரனாகியுருக்கிறான். ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் ரஜினியின் பாடல் காட்சி படமாக்கபட்டதாம். இது சூப்பர் ஸ்டாரும் ஷங்கரும் இணையும் இரண்டாவாது படம் ஆகவே எதிர்பார்ப்பும் அதிகம்.
இந்த படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் மற்றும் ஈராஸ் இண்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கிறது ஆகவே பிரம்மாண்டத்திற்கு குறைவிருக்காது.
படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான், அமெரிக்காவில் இரண்டு பாடல்கள் படமாக்குகிறார்களாம்.
படபிடிப்பு ரத்தினவேலு, கலை சாபு சிரில், பாடல்கள் வைரமுத்து மற்றும் ப.விஜய். நடனம் ராஜு சுந்தரம்(இயக்குனர்). உடைகள் வடிவமைப்பு மனிஷ் மல்ஹோத்ரா.
எந்திர மனிதனுக்கான உடைகள் வடிவமைப்பது Men in Black, Batman Returns படங்களுக்கு வடிவமைத்தவராம்.
எந்திரனின் தந்திர காட்சிகளுக்கு Predator, Jurassic Park, Pearl Harbour, Iron Man, Terminator போன்ற படங்களுக்கு வேலை செய்த ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டூடியோவில் செய்ய போகிறார்களாம்.
Crouching Tiger Hidden Dragon, Matrix,Kill Bill ஆகிய படங்களுக்கு சண்டை காட்சிகள் அமைத்த யென் வூ பிங் தான் எந்திரனின் சண்டை காட்சிகளை அமைக்கிறார்.
எல்லாம் சரி ஷங்கர் 201oல் வெளியாகும் எந்திரன் அதிருமா!

சுரண்டல்


சுரண்டலில்(Corruption) இந்தியா 2007 விட இந்த வருடம் முன்னேறியுள்ளதாம். Transparency International என்னும் ஒரு சர்வதேச தனியார் நிறுவனம் எடுத்த ஆய்வின் முடிவு இது. கம்மியாக சுரண்டுவதிலிருந்து அதிகமாக சுரண்டப்படும் வரிசையில் இந்தியா 74வது இடத்தை பிடிக்கிறது. அமெரிக்கா 20வது இடத்தில் உள்ளது.
டென்மார்க்,ஃபின்லாண்ட்,நியூசிலாண்ட்,சிங்கப்பூர் மற்றும் சுவீடன் பட்டியலில் முதல் ஐந்தெடத்தை பெறுகிறது.
The Transparency International (TI) என்னும் அரசு சாரா தன்னிச்சையான நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுரண்டலை உலகெங்கிலும் வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது. 1995ல் ஆரம்பிக்கபட்ட இந்த பட்டியல் ஆண்டாண்டுகளாக வெளியிடபட்டு இன்றுவரை தொடர்கிறது. இந்த ஆண்டு 180 நாடுகளின் சுரண்டல் பட்டியலிலிருந்து சில.
நம் அண்டை நாடுகளான பாக்கிஸ்தான் 140 வது இடத்திலும். சீனா 73வது இடத்திலும் இருக்கிறது.
இரான்,லிபியா மற்றும் நேபாள் முறையே 133,134,135வது இடத்தை பிடிக்கிறது. ரஷ்யா 145வது இடத்திலும்,ஸ்ரீலங்கா மற்றும் மாலத்தீவு 96 மற்றும் 90 வது இடத்திலும் இருக்கிறது. சிங்கப்பூருக்கு அடுத்து ஆசியாவில் கம்மியான இடத்தை பிடித்திருப்பது பூட்டான் 41வது இடம்.
லஞ்சம்,ஊழல் நம்ம நாட்டுக்கும் மேலை நாடுகளுக்கும் உள்ள வித்யாசம் நம்மவர்கள் அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகளுக்கே பணம் வாங்கிக் கொண்டு செய்கிறார்கள் மேலை நாடுகளில் அன்றாட கடமைகளுக்கு லஞ்சம் வாங்குவதில்லை, அசாதாரண வேலைகளுக்கு வாங்குகிறார்கள். இதனால் நம் நாட்டில் ஊழலும் லஞ்சமும் புரையோடி அடி வேர்வரை சென்றுவிட்டது. இந்தியா போய் இறங்கியவுடன் சுங்க அதிகாரிகள் காரணமேயில்லாமல் 100 டாலருக்கு பிச்சை எடுப்பார்கள். ம்ம்ம்ம்ம்ம்

சாரே ஜகான்ஸே அச்சா! வந்தே மாதரம்.

Monday, September 8, 2008

நியாயம்தானா… நீங்களே சொல்லுங்க!

குசேலன் படத்தை திரையிட்ட தமிழக திரையரங்கு உரிமையாளர்களில் ஒரு பகுதியினர் நேற்று சென்னையில் கூடி, பத்திரிகையாளர்களிடம் தங்கள் நஷ்டக் கணக்கைக் காட்டினர். அதையும் உங்களுக்கு அப்படியே தமிழில் தருகிறேன். இவற்றை முழுமையாக (தினத்தந்தி தவிர - அதிலும்கூட ஓரளவுக்குதான் கொடுத்திருந்தார்கள்) எந்தப் பத்திரிகையும் தரவில்லை.இந்த சந்திப்பில் நடந்தவற்றை திரட்டி இங்கே தருகிறேன்.
சங்கத்தின் தலைவர் பன்னீர், சுந்தர் திரையரங்க உரிமையாளர் கண்ணப்பன் உள்பட 12 திரையரங்கு உரிமையாளர்கள் கூறியதன் தொகுப்புதான் இங்கே தந்திருப்பது.
இவர்களின் தரப்பில் என்ன நியாயம் உள்ளது என நீங்களே சொல்லுங்கள், முழுதும் படித்துவிட்டு!
இன்னொன்று - இன்னும் ஒரு விரிவான கட்டுரையோடு குசேலன் சம்பந்தப்பட்ட பதிவுகளை நிறுத்திவிட்டு, அடுத்த கட்டத்தைப் பற்றிப் பார்ப்பது நண்பர்களுக்குப் புத்துணர்ச்சி தரும் என நினைக்கிறேன்.
ரஜினி சாரிடம் நாங்கள் பணம் கேட்கவில்லை!குசேலன் படத்தை ரஜினி சார் சொன்ன மாதிரி எங்களுக்கு வியாபாரம் செய்திருந்தால், இந்தப் படம் தமிழகத்தில் நன்றாகவே போயிருக்கும். தயாரிப்பாளர் பாலச்சந்தரும், இயக்குநர் வாசுவும் சேர்ந்து போட்ட திட்டத்தில் நாங்கள் மாட்டிக் கொண்டோம், என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
குசேலன் படம் தமிழகத்தையும் ஆந்திராவையும் தவிர பிற பகுதிகளில் சிறப்பாக ஓடிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். நீங்கள் மட்டும் ஏன் தொடர்ந்து நஷ்டம் என்கிறீர்கள்?குசேலன் படத்தில் எனது பங்கு 25 சதவீதம்தான் என ரஜினி கூறினார்.ஆனால் படப்பிடிப்பு முடிந்து படம் திரைக்கு வரும் நேரத்தில், இது ரஜினி படம், அவர் படம் முழுக்க வருகிறார் என இயக்குனர் வாசு தெரிவித்தார். அதற்கேற்ற மாதிரி பத்திரிகைச் செய்திகளும் இது ரஜினியின் படம் என்ற இமேஜைக் கொடுக்கும் விதத்தில் பெரிய அளவு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தின.படத்தை திரையிட நாங்கள் வாங்கும்போதும் வாசு இதையே கூறினார். எனவே அதை நம்பி அதிக விலை கொடுத்து வாங்கினோம். தமிழகம் முழுவதும் 375 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது. ஆனால் படம் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால் வசூல் குறைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது.எனவே இதைச் சரிகட்ட நாங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் கொடுத்த தொகையை சதவிகித கணக்கு வைத்து, ‘மினிமம் கியாரண்டி’ தொகையை டெபாசிட்டாக வைத்துக்கொண்டு, மீதித் தொகையை திருப்பித் தருமாரு கோருகிறோம். இதனால் யாருக்கும் நஷ்டம் ஏற்படாது. பாலச்சந்தர், விஜயகுமார், சாய்மிரா போன்றவர்களின் லாபத்தில் ஒரு பகுதி குறையும். இதைச் செய்துதான் தீர வேண்டும். ரஜினி தலையிட வேண்டும்!இந்த விஷயத்தில் தயாரிப்பாளர்களை விட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைத்தான் நாங்கள் அதிகம் நம்புகிறோம். இந்தப் படத்தில் தன்னுடைய பங்களிப்பு குறித்து அவர் ஏற்கெனவே தெளிவாகக் கூறியும், அதை எங்களிடம் தவறாகச் சொல்லி வியாபாரம் செய்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் மீதுதான் எங்கள் கோபமெல்லாம்.இது நல்ல படம்தான். ஆனால் தவறாக வியாபாரம் செய்யப்பட்ட படம். அதுதான் பிரச்சினையே!எனவே மனித நேயமிக்க சூப்பர்ஸ்டார் ரஜினி சார் இதில் தலையிட்டு எங்களுக்கு பணத்தை வாங்கித் தர வேண்டும்.
ரஜினி இந்தப் படத்தில் கவுரவ நடிகர்தானே… அப்படியே கதாநாயகனாக இருந்தாலும், அவரிடம் நீங்கள் எப்படி பணத்தைத் திருப்பித் தரக் கேட்பீர்கள்?நீங்கள் சொல்வதை நாங்கள் மறுக்கவில்லை. நாங்கள் இப்போதும் ரஜினி சாரிடம் பணம் கேட்கவில்லை. ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களிடம் எங்களால் நியாயமாகப் பணத்தைப் பெற முடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது.எனவேதான் ரஜினி சார் இதில் தலையிட வேண்டும் என்கிறோம். அவருக்கு எங்களைப் போன்றவர்களின் கஷ்டம் தெரியும்.பாபா படத்தில் நாங்கள் கேட்காமலே கூப்பிட்டுப் பணத்தைக் கொடுத்தார் ரஜினி. இப்போது சொல்கிறோம், பாபா தோல்விப் படமல்ல (அடப் பாவிகளா… இதை அப்போதே சொல்லியிருக்கலாமே!!). அதற்கே நஷ்ட ஈடு கொடுத்தவர் தான் ரஜினி. அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரின் காதுகளுக்கு இந்த விஷயம் போக வேண்டும், இந்த வியாபாரத்தில் நடந்த உண்மையான விஷயங்கள் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு.
திருப்பித் தராவிட்டால்… ரஜினி படத்தை வாங்க மாட்டீர்களா?படத்துக்கான நஷ்டத்தை திருப்பி தராவிட்டால் கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் தயாரிக்கும் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம். இதில் ரஜினி சார் மீது ஏன் பழிபோட வேண்டும். பொதுவாகவே அவர் படமென்றால் குறைந்தது 50 நாட்களுக்கு அரங்கு நிறைந்த காட்சிகள்தான். ஆனால் இந்தப் படத்தில் அது நடக்கவில்லையே.ஆனால் உண்மையைச் சொல்லி, இதில் பாதித் தொகைக்கு படத்தை விற்றிருந்தால்கூட எங்களுக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கும். படமும் நன்றாகப் போயிருக்கும்.இந்த விஷயத்தில் ரஜினிசார் தீர்க்கதரிசி. அவர் சரியாகச் சொன்னார், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில். நாங்கள்தான் பாலச்சந்தரின் வார்த்தைகளை நம்பிவிட்டோம்.இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் நன்றாகப் போகாததற்கு யார் காரணம், அதன் பின்னணி என்ன என்பதெல்லாம் எங்களுக்குத் தேவையில்லாத விஷயம். நாங்கள் வியாபாரிகள். நஷ்டத்தைத் தாங்க முடியாது, அதனால் அதைச் சரிகட்டச் சொல்கிறோம். இதற்கும் ரஜினி படங்களை நாங்கள் வாங்குவதற்கும் சம்பந்தமில்லை. நிச்சயம் அடுத்த படத்தை வாங்குவோம். ஆனால் விழிப்புடன் இருப்போம்.அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 23-ம் தேதி சென்னையில் அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் கலந்து ஆலோசிக்க உள்ளோம்.
இதே போன்ற நடவடிக்கைகளை அனைத்து நடிகர்கள் நடித்த படங்களுக்கும் எடுப்பீர்களா…?இந்தக் கேள்விக்கு சுந்தர் திரையரங்க உரிமையாளர் கண்ணப்பன் சொன்ன பதில்…பெரிய நஷ்டம் வந்தால் தவிர்க்க வேறு வழியில்லை.இப்போதும் வசூலான தொகையை வைத்துச் சொல்கிறோம், நியாயமான சதவிகிதத்தை அவர்கள் எடுத்துக் கொண்டு மீதியைக் கொடுத்தால் யாருகத்கும் நஷ்டமில்லை. பாலச்சந்தரிடம் ரஜினி சார் சம்பளம் பெறவில்லை என்று சொல்கிறார்கள். அப்படியிருக்க அவர்களுக்கு நஷ்டம் வர வாய்ப்பே இல்லையே.நல்ல மனிதர் ரஜினியின் பெயரை வைத்து நடத்தப்பட்ட சூதாட்டம் இது. இதில் அவர் பெயரைக் கெடுத்தது கூடவே இருப்பவர்கள்தான். எத்தனையோ நெருக்கடியான சூழலில் நாங்கள் ரஜினி சாருக்குக் கைகொடுத்தோம். அதையும் மறந்துவிடாதீர்கள்.இன்னொன்று எல்லோரிடமும் இப்படிக் கேட்க முடியாதுதான். கொடுக்கிறவரிடம்தானே கேட்க முடியும். அதுதான் ரஜினி சார் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. தனிப்பட்ட முறையின் எங்களுக்கு ரஜினிசார் மீது எந்த வருத்தமும் இல்லை. நாட்டுக்கொரு நல்லவன் பட நஷ்டத்தைக்கூட என்னைப் போன்ற சிலர் சமாளிக்க உதவியவர் ரஜினி.
ஒரு வியாபாரத்தில் லாப நஷ்டம் வருவது சகஜம்தானே… இதே ரஜினி படங்கள் பலவற்றில் கணிசமாக லாபம் பார்த்தீர்கள் அல்லவா?இந்தக் கேள்விக்கு யாருமே பதில் சொல்லத் தயாராக இல்லை!!பின்னர் பழனியப்பன் மட்டும், இப்போதைய சூழ்நிலையில் இந்த மாதிரிதான் வியாபாரம் செய்ய வேண்டி உள்ளது.
சரி… படத்தை நீங்கள் பிரமிட் சாய்மிராவிடம்தானே வாங்கினீர்கள்… அவர்களை விட்டுவிட்டு ரஜினியையும், பாலச்சந்தரையும் பிடித்துக் கொண்டிருப்பது ஏன்?ஒரு நிமிடம் அமைதி காத்த கண்ணப்பன்… அதான் சொன்னேனே, கொடுப்பவர்களிம்தான் கேட்க முடியும். இது எங்கள் கோரிக்கைதான். அதை மனிதாபிமான முறையில் ரஜினி பரிசீலிக்க வேண்டும்.
நியாயம்தானா…நீங்களே சொல்லுங்க!—————————————————————————————
இதில் ரஜினியின் நிலை என்ன?நடந்த நிகழ்வுகளைப் பார்த்து மிகுந்த அதிருப்திக்குள்ளான சூப்பர்ஸ்டார், முழுமையான கலெக்ஷன் ரிப்போர்ட்டை பிரமிட் சாய்மிராவிடம் கேட்டுள்ளாராம்.ஆனால் பிரமிட் சாய்மிரா இதில் பட்டும் படாமல் இருக்கிறது. காரணம் அவர்களுக்கு Break Even கிடைத்துவிட்டது என்பதே உண்மை. கேரளா மற்றும் வெளிநாட்டு உரிமைகளில் கணிசமான கோடிகள் வந்துள்ளன. ஆனால் ‘நாங்கள் செய்த வியாபாரத்தில் கிடைத்த லாபத்தை மற்றவர்களுக்கு ஏன் தரவேண்டும்?’ என்ற நினைப்பில் அமைதியாக இருக்கிறார்கள் சாய்மிரா நிறுவனத்தினர்.இந்த நிலையில் சாய்மிராவிடம் திரையரங்க உரிமையாளர்கள் போய் நின்றால், சாய்மிரா நஷ்டக் கணக்கோடு ரஜினியிடம்தான் வரப்போகிறது. காரணம் அவர்களிடம் நேர்மையான வியாபாரத்தை எதிர்பார்க்க முடியாது என பல திரையரங்க உரிமையாளர்கள் ஏற்கெனவே கூறியிருக்கிறார்கள். அவர்களுடன் போட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்த எத்தனையோ திரையரங்க உரிமையாளர்களைக் காட்ட முடியும்.ஆக லாபம் பார்த்தது பிரமிட் சாய்மிரா… லாபம் சம்பாதிக்கும் பொருளை (படத்தைத்) தந்தவர்கள் ரஜினியும் பாலச்சந்தரும். ஆனால் இடையில் நஷ்டப்பட்ட சிலர் தங்களிடம் அதிக விலைக்கு விற்ற சாய்மிராவை விட்டுவிட்டு, சிலரைக் காப்பாற்ற உதவிய ரஜினியின் பெயரை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.இன்னொன்று இந்தப் படத்தை மினிமம் கேரண்டி அடிப்படையில் வாங்கியிருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். இப்படி வாங்குவது அவரவர் சொந்த ரிஸ்க்கில் வாங்குவது போலத்தான். நஷ்டப்பட்டாலும் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. யாருக்கும் தடை போடவும் முடியாது.நான் முன்பே சொன்னது போல எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம்தானே…!


நன்றி:திரு.ராஜ்

எந்திரன்





ஷங்கரின் ரோபோ இப்போது எந்திரன் படபிடிப்பு ஆரம்பமாகிவிட்டது. டெர்மினேட்டர் கதையின் காபியாக கூட இருக்கலாம். ஆர்னால்ட் நடித்த கதாபாத்திரத்தில் ரஜினி, பையனின் அம்மா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாராய் (என்ன நினைச்சாலே அதிருதுல்ல) எது எப்படியோ இன்னும் ரெண்டு வருஷத்துல ஷங்கர் ரிலீஸ் பண்ணிடுவாரு. தமிழிலும் தெலுங்கிலும் தயராகும் இந்த படத்தின் படங்கள் உங்கள் பார்வைக்கு.