நான் நைஜீரியாவில் இப்போது வசிக்கிறேன். நைஜீரியாவை பத்து முறைக்கு மேல் சுற்றிவிட்டேன் என்ற உரிமையில் இதை எழதுகிறேன்.நைஜீரியா உலகின் கச்சா எண்ணை உற்ப்பத்தியில் நான்காம் இடம். OPEC எனப்படும் எண்ணை உற்ப்பத்தி செய்யும் நாடுகளின் உறுப்பினர். இந்த எண்ணை வளத்தை முறையாக உபயோகபடுத்தியிருந்தால் நைஜீரியா முன்னேறிய நாடுகளின் வரிசையில் இருந்திருக்கும். ஆங்கிலேய காலனி ஆதிக்த்திலிருந்து விடுதலை அடைந்தபின் பல்வேறு ராணுவ ஆட்சியாளர்களால் சிதைந்து சின்னாபின்னமாயிருக்கிறது. இப்போது ஜனநாயக ஆட்சி நிலவுகிறது அது நீடித்தால் வளமாக வாய்ப்பு இருக்கிறது.
கச்சா எண்ணை உற்ப்பத்தி செய்தாலும் எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள் இல்லாததால் கச்சா எண்ணையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு மீண்டும் பெட்ரோலிய பொருட்களாக இறக்குமதி செய்வதால் தானிக்கு தீனி சரியாகிறது. எண்ணை சுத்திகரிப்பு ஆலை ஒன்றை இப்போது கட்டி வருகிறார்கள் பார்ப்போம் .இங்கு பெட்ரோலின் விலை நம் ஊர் மதிப்புபடி 23ரூ.
corruptionஇல் உலக வரிசையில் 3வது இடம் பிடிக்கிறது. லஞ்சம் வாங்குவது இங்கு சட்டபூர்வம். எந்தவித கூச்சமுமின்றி வாங்குகிறார்கள்.
வாழ்வதற்கான விலை(cost of Living) இந்தியாவைவிட மூன்று மடங்கு அதிகம். ஆனால் வாழ்கைதரம் இந்தியாவைவிட அதிகம். கார்கள் அதிகம் புழங்குகிறது. இங்கு வேலைகாரியிலிருந்து குப்பைகாரன் வரை அனைவரும் ஆங்கிலம் பேசுவார்கள்.
இங்கு கல்விதரம் என்னை பொறுத்தவரை இந்தியாவை விட தரம் என்றே சொல்வேன். மேலைநாடுகளில் இந்த கல்வியின் Accredition இந்தியாவை விட அதிகம். உதாரணம் இங்கு டாக்டர் பட்டம் பெற்ற ஒருவர் இங்கிலாந்தோ அமெரிக்காவோ சென்றால் அங்கு அப்படியே எடுத்துகொள்கிறார்கள். ஆனால் இந்தியாவில் டாக்டர் பட்டம் பெற்ற ஒருவர் இங்கிலாந்து சென்றால் அங்கு ஒரு தேர்வு எழதிதான் டக்டர் ஆக முடியும்.
இங்கு கச்சா எண்ணை உள்ள நைஜர் டெல்டா ஒரு காஷ்மீர். எண்ணை எடுக்கும் அயல் நாட்டு நிறுவனங்கள் (Shell,Mobil,Chevron,conoil...) எண்ணை எடுத்து தங்கள் நாட்டை செம்மை செய்கிறார்களே தவிர தங்கள் மாநிலங்களுக்கு ஒரு மண்ணும் செய்வதில்லை என்ற கோபத்தின் வெளிப்பாடே இங்கிருக்கும் தீவிரவாதம். இந்த தீவிரவாதத்தின் முக்கிய அங்கம் வெளிநாட்டவரை கடத்தி பணய தொகை பெறுவது. உலகில் தீவிரவாதம் அல்லது போர் நீடிப்பது சில நாடுகளுக்கு நல்லது. சமாதானத்தை தீவிரமாக விரும்பும் ஜப்பான்தான் துப்பாக்கி உற்பத்தியில் முதல் இடம். போகட்டும்.
இங்கு Armed Roberry என்பது சர்வ சாதாரணம். நவம்பர்,டிசம்பர் மாதங்களில் உச்சத்தில் இருக்கும். நானே மூன்று நான்கு முறை Armed Roberry பார்த்திருக்கிறேன், என்ன ஒன்று கேட்டதை மறுக்காமல் கொடுத்துவிட்டால் அவர்கள் நல்லவர்கள் இல்லை டுமீல்தான். சூடு வாங்கிய இந்தியர்களை எனக்கு தெரியும்.
மற்ற மேற்கு ஆப்பரிக்க நாடுகளைவிட இங்கு இந்தியர்கள் அதிகம்.இந்தியர்களுக்கு இவர்கள் வைத்திருக்கும் பெயர் Stingy Fellows(கஞ்ச கபோதிகள்). பின்னே இங்கு இவர்களை சுரண்டுவதற்கு வந்து விட்டு தானமா செய்ய முடியும். இங்கு தொழில் செய்து பணக்காரர்கள் ஆன இந்தியர்கள் பலர்.
நான் இருப்பது லேகோஸ்(Lagos) என்னும் இடம். நமது மும்பையை போல் வர்தக தலைநகரம். முன்பு நாட்டின் தலைநகரமாக இருந்தது இடநெருக்கடி காரணத்தால் 15 வருடங்களுக்கு முன்பு நாட்டின் மையத்தில் அபுஜாவிற்கு குடி பெயர்ந்தார்கள் ஆட்சியர்கள்.
இங்கு corruption என்பது 10 பில்லியன் டாலர்கள் என்பது சகஜம்.சுரண்டப்படும் பணம் சுவிஸ் வங்கியில் வருட கணக்கில் தூங்கி நாட்டிற்க்கும் பயன்படாமல்,சொந்தக்காரர்களுக்கும் பயன்படாமல் சுவிஸ்
மக்களை செழிக்க செய்கிறது.
இங்கு இந்தியர்களை அடுத்து படை எடுத்து சுரண்டுவது லெபனீஸ்.இவர்கள் வடக்கிலிருந்தும் இந்தியர்கள் தெற்க்கிலிருந்தும்
குத்தகை எடுத்து வர்தகம் (சுரண்டும் தொழில்) செய்கிறார்கள்.
நான் இருக்கும் இடத்தில் மழை மாதம் மும்மாரி பெய்கிறது. மற்றபடி சென்னையின் சுட சுட சீதோஷன நிலைதான்.
இங்கு ஆங்கிலம் தவிர மூன்று மொழிகள் பிரதானமாக பேசக்கூடியவர்கள். அவை யுரூபா,ஈபோ மற்றும் ஹவுஸா. ஹவுஸா பேசுபவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்(99.99%) வடக்கு பகுதியில் வசிக்கிறார்கள். ரொம்ப சோம்பேறிகள் மற்றும் இவர்கள் தான் எப்போதும் ஆட்சியாளர்கள். ஆதலால் சொகுசு பேர்
வழிகள். ஹவுஸா அல்ஹாஜிக்கள் கணக்கில்லாமல் பணம் மற்றும் மனைவிகள் வைத்திருப்பார்கள். நாற்பது ஐம்பது குழந்தைகள் பெற்று போடுவார்கள்.ஏழை
அல்ஹாஜிக்கள் பெற்ற பிள்ளைகளுக்கு தட்டை கொடுப்பார்கள் பிச்சை எடுப்பதற்கு.
ஈபோக்கள் கிழக்கு பிராந்தியர்கள் வர்த்தகத்தில் சிறந்தவர்கள். நம்ப ஊர் சேட்டுக்களை போன்று படிப்பில் அதிக ஆர்வமற்றவர்கள் வியாபாரம் தான் முழு மூச்சே. நைஜர் டெல்டா (எண்ணை கிணறுகள்) தங்களுக்கே சொந்தம் என்று பிரிவினைவாதம் பேசுபவர்கள்.
யுருபாக்கள் நம்போல்வார்கள் மெத்த படித்த மேதாவிக்கள் ஆதலால் ஆட்சியாளர்களாகவும் இல்லாமல் வியாபாரிகளாகவும் இல்லாத தூக்கு தூக்கிகள்.இவர்களில் 50% முஸ்லிம்கள் 50% கிறுஸ்துவர்கள். இவர்கள் மேற்க்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிப்பவர்கள்.
இங்கு மின்சாரம் ஒரு நாளில் 3 அல்லது 4 மணி நேரம் இருந்தால் நாம் பாக்யசாலிகள். ஜெனரேட்டர் வீட்டுக்கு வீடு எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். NEPA என்பது Nigerian Electric Power Authority இதை இவர்கள் Never Ending Problem Always என்பார்கள். NEPAவை அரசு PHCN (Power Holding Corporation of
Nigeria) தனியார் துறைக்கு விற்றது ஆனாலும் அதே பழைய குருடி கதவை திறடி கதைதான், இப்போது PHCNயை Problem Has Changed Name என்று குறிப்பிடுகிறார்கள்.
மின்சார கதைதான் தொலைபேசிக்கும், தண்ணீருக்கும், போக்குவரத்துக்கும் (நம்ம ஊர் நாய் வண்டிதான் இங்க பஸ்) மக்கள் லோல்படுகிறார்கள். தனியார்
கைபேசியில் MTN (நம்ம ஊருல கொஞ்ச காலமா அடி படுகிற தெனாப்பரிக்க நிறுவனம்) 70% சந்தையை ஆக்ரமித்துக்கொண்டு நம்ப ஊர் மதிப்புபடி நிமிடத்திற்க்கு 15ரூ இருந்து 20ரூ வரை பிடுங்குகிறார்கள். CDMAவும் உண்டு ஆனால் எல்லா ஊர்களிலும் இல்லை. காசு கொடுத்தாலும் சேவை ஒன்றும் பிரமாதம் இல்லை.
இங்கு தேர்தல்கள் எல்லாம் கூதல்தான். கள்ள ஓட்டு, வாக்கு சாவடியை கைபற்றுதல் போன்றவை நடந்தாலும் ஜிம்பாப்வேயின் ராபர்ட் முகாபே போல் அல்லாமல் தேர்தல் முடிவுகளை வெளியிட்டு ஜனநாயகத்தை காப்பவர்கள். ஜனநாயகம் இப்போது கொஞ்சம் தழைத்தோங்குகிறது. எண்ணையை விற்று நாட்டு நலனில் அக்கறை காட்டினால் நாடு முன்னேற ரொம்ப வாய்ப்பு உள்ளது.
வாழ்க நைஜீரியா வளமுடன்!!!( அப்பதான நாங்க வளமுடன் வாழ முடியும்.)