Wednesday, September 17, 2008

ஆர்கியோமெட்டலர்ஜி




மனிதன் பரிணாம வளர்சியடைய ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை, உலோகங்கள்ளின் பங்கு அளப்பரியமுடியாதவை. “மெட்டலர்ஜி” என்பது உலகின் இரண்டாவது மிக பழைமையான தொழில்.(முதல் என்ன என்பது உங்களுக்கே தெரியும்.). ஆர்கியோமெட்டலர்ஜி என்ற புதிய இயலில் இன்று பல ஆரய்சிகள் நடைபெறுகிறது.
தொல் பழங் காலத்தில் நமக்கு தங்கம், வெள்ளி, பித்தளை,வெண்கலம், ஈயம் போன்ற பல உலோகங்களை உற்பத்தி செய்யும் அறிவு இருந்திருக்கிறது. இதற்கு சாட்சியாக அடிக்கடி குறிப்பிடும் குதுப்மினாருக்கு அருகில் உள்ள, இன்றும் துருப்பிடிக்காத இரும்புக் கம்பம்.
கி.மு.8000-த்திலிருந்து தங்கமும், பித்தளையும் தோண்டி எடுக்கப் பட்டிருக்கின்றன. 6500-லிருந்து தாதுப் பொருள்களிலிருந்து தங்கமும், செம்பையும் பிரிக்கப்பட்டன. தற்செயலாக வெண்கலமும் கண்டுபிடிக்கப்பட்டு, அப்போதிலிருந்தே மணியோசை தொடங்கியிருக்கிறது. சிந்துவெளி நாகரிகத்தில் ஈயம் இருந்திருக்கிறது. தகரம் கி.மு.1000-த்திலுருந்து பயன்பட்டிருக்கிறது. கி.மு750-ல் பாதரஸமும், கி.மு.500-ல் வைரமும், சமஸ்கிருத பதிவுகளில் சொல்லப்பட்டிருக்கிறது. நம் இந்திய உலோகவியல் திறமைகளுக்குச் சாட்சியாக கி.பி 400-லிருந்து நிற்கிறது அந்த இரும்புக் கம்பம்.
மனித சரித்திரத்தில் கற்காலம், வெண்கல யுகம், இரும்பு யுகம் என்பது போல், நவீன அறிவியலின் சரித்திரத்தில் நான்கு ‘மணல் யுகங்கள்’ சொல்கிறார்கள்.
முதல் மணல் யுகத்தில், மணலை மனிதன் உருக்கி, கண்ணாடி செய்து, லென்ஸ் செய்து, டெலஸ்கோப் கண்டுபிடித்தபோது, வானில் கிரகங்கள்ளையும் நட்சத்திரங்களையும் பார்க்க ஆரம்பித்தான். அதிலிருந்து நவீன காஸ்மாலஜி துவங்கியது.
இரண்டாவது மணல் யுகம், அதே லென்ஸ்களைத் திருப்பிப் போட்டு மைக்ராஸ்கோப் செய்தபோது, நுட்பமான ஜந்துக்களையும், பாக்டீரியா போன்ற உயிர்களையும் கவனித்தான். அதிலிருந்து மாலிக்யூலர் பயாலஜிக்கு வித்திட்டு, உயிரின் ரகசியம் வரை வந்துவிட்டான்.
மூன்றாவது மணல் யுகம், சிலிக்கானிக் சில்லு புரட்சி. அதை வைத்துக்கொண்டு கம்யூட்டர் செய்து, மன வேகத்தை விரிவுபடுத்திக் கொண்டான்.
நான்காவது மணல் யுகம், ஃபைபர் ஆப்டிக் கண்ணாடி நூலிழைக்ளின் மூலம் இந்டர்நெட் செய்தி தகவல் வெள்ளம், அதனால் உலகத்தையே ஒரு கிராமமாக்கினான்.
சரி மனிதன் பரிணாம வளர்சியின் உச்சமா அல்லது மேலும் பரிணாம வளர்சியடைவானா என்று ஒரு ஆயிரம் வருடம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Thursday, September 11, 2008

Large Hardon Collider (LHC)




பிக் பேங் விதிப்படி விரிவடையும் பிரபஞ்சத்தைப்(Big Bang Theory of Expanding Universe) பற்றி கேள்வி பட்டிருக்கீற்களா. பிரபஞ்சம் உருவான கதைதான் இந்த விதி.
இந்த விதி பல விஞ்ஞனிகளால் பரவலாக ஒத்துக்கொள்ளப்பட்ட பிரபலமான விதி. இந்த விதி படி 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நேரத்தில் ஒன்றுமே இல்லை அப்படியென்றால் பிரபஞ்சமில்லை, கோள்கள்லில்லை எதுவுமே இல்லை. பிறகு எப்படி பிரபஞ்சம் பிறந்தது என்ற விளக்கம் தான் பிக் பாங் விதி. சரி இந்த விதி என்ன சொல்கிறது என்றால் ஒரு அணுவைப் போன்று ஒரு பருப்பொருள் விரிவடைந்து, விரிவடைந்து நாமிருக்கும் பிரபஞ்சம் உருவானதாக கூறுகிறது. பிரபஞ்சம் இன்னும் விரிவடைந்து கொண்டே போகிறது என்று கூறுகிறார்கள் விஞ்ஞனிகள். ஒரு பலூனில் பேனாவால் சில புள்ளிகள் வைத்து ஊதினால் என்னவாகும். புள்ளிகளின் இடைவெளி அதிகரிக்குமில்லையா அதைப்போல பிரபஞ்சத்தில் உள்ள வெளிகள்(Galaxies) விலகி போவதை ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். 1965ம் ஆண்டில் ஆர்னொ பென்சியாஸ் மற்றும் ராபர்ட் வில்சன் என்ற விண்வெளி விஞ்ஞானிகள் பிரபஞ்சம் விரிவடைவதால் அது வெளியிடும் சக்தி 270.425 செல்சியஸ் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
சரி இத்தனையும் எதற்காக என்றால் நேற்று சுவீடனிலுள்ள ஜெனீவாவில் ஒரு ஆராய்ச்சி நடந்திருக்கிறது. இது வரை மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய, மிகசக்திவய்ந்த, மிகவும் விலை உயர்ந்த எந்திரத்திற்கு Large Hardon Collider(LHC) என்று பெயர் (ஷங்கர் 2010ல் அதைவிட பெரிய எந்திரத்தை வெளியிடுகிறார் அதன் பெயர் சுப்பர் ஸ்டார் ரஜினி). இந்த Large Hardon Collider ஒரு பெரிய 27கி.மீ வட்ட வடிவு எந்திரம் முனைகள் மூடாமல் இருக்கும். இந்த எந்திரம் தயாரிக்க ஆன செலவு 5பில்லியன் பவுண்டுகளாம். மேலும் இதை இயக்க தேவைபடும் சக்தியின் மதிப்பு 30மில்லியன் டாலர்களாம். சரி இந்த கருவி என்ன செய்யும் என்றால். ப்ரோட்டான்களை உற்பத்தி செய்து ஒளியின் வேகத்தில் அதை செலுத்தும். செலுத்தி ப்ரோட்ன்களால் இரண்டு பக்கமும் அணுவை மோத செய்யும். இந்த ஆராய்சியினால் என்ன கண்டறிகிறார்கள் என்றால், நான் முன்பு சொன்னது போல் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு அணு விரிவடைய ஆரம்பித்த அந்த நொடியை இப்போது கொண்டு வந்திருக்கிறார்கள். நேற்று மெல்பர்ன் மாலை 5 மணிக்கு சரியாக இந்த இயந்திரத்தை இயக்கி ஆராய்ந்திருக்கிறார்கள். பிரபஞ்சத்தை பற்றி பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
Large Hardon Collider க்கு எதிர்ப்புக் கூட ஏராளமாக இருந்தது. LHC யால் ப்ரோட்டான் அணு பிளக்கும் 1/20 விநாடியில் பூமி பிளந்து அழியும் என்று ஒரு சாராரும். நுண்ணிய கருப்பு ஓட்டைகள் பிரபஞ்சத்தில் தோன்றும், LHC பிளக்கும் அணுவின் சக்தி 2 ட்ரில்லியன் செல்சியஸ் (ஆதாவது சூரியனின் மைய்ய பகுதி வெப்பத்தை விட ஒரு லட்சம் மடங்கு அதிகமாம்.) வெப்பம் வெளிபடும் இதனால் கடல்கள் பொங்கும் என்று மற்றொரு சாராரும் கூறுகிறார்கள். காசு செலவழித்து செய்யப்படும் இந்த ஆராய்ச்சியால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது என்றும் கூறுகிறார்கள். இதுவரை பூமி பிளக்கவில்லை, தப்பித்தோம். மேலே என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
நமக்கு இதெல்லாமா ஒரு கவலை மேலே படியுங்கள். நம்ம கமலை பத்தி.

மர்மயோகி




பிரமிட் சாய்மிரா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் “மர்ம யோகி” யின் கதை,திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் நடிப்பு நான் விரும்பும் கமல் (தலைவா தசாவதாரம் போல சொதப்பிடாத). இந்த படத்தின் பட்ஜட் 120கோடியாம். நான்கு மொழிகளில் தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் இந்தியில் தயாராகிரான் மர்மயோகி .திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார் (படத்துல குளிக்கிற ஸீன் இருக்கா) திரிஷா அம்மா அவங்க பாவாடை சட்டை போட்ட காலத்திலிருந்தே கமலின் ரசிகையாம், திரிஷா கமலுக்கு ஜோடியாக நடிப்பதில் அம்மாவிற்கு ரெட்டிப்பு சந்தோஷமாம். ஷ்ரேயா சரணும் இந்த படத்தில் நடிப்பது இப்போது புது செய்தி (மீண்டும் திரிஷாவுக்கு 40, ஷ்ரேயாவுக்கு 38 திரும்புகிறது). ஹேமமாலினியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
படம் 7வது நுற்றாண்டு கதையாம். இந்த படத்தில் Redone Camera என்னும் புதுவித கேமராவை உபயோகிக்க போகிறாராம் கமல். இதனால் படம் துல்லியமாக 4096x2304 ரெஸல்யூஷனில் படமெடுக்குமாம். மேலும் Harddiskல் பதிவு செய்யும் வசதியும் இதில் உண்டு என்பதால் ஃபிலிம் செலவு மிச்சம்.
படத்திற்கு இசை இசைஞானியல்ல இந்த முறை ஏ.ஆர்.ரகுமான். இது ஒரு பீரியட் படமாதலால் ஏ.ஆர்.ரகுமான் இசை ஆராய்சியில் இறங்கியுள்ளாராம். படத்தை பல அழகிய இடங்களில் படமாக்க உள்ளார்களாம், சுவீடனில் முக்கிய காட்சிகளை எடுக்கிறாராம் கமல் (தலைவா ஜெனீவா பக்கம் போய்டாதே அங்கதான் LHC இருக்கு).

Wednesday, September 10, 2008

அசாத்திய சக்தியுடனும், அசாதாரண வேகத்துடனும் எந்திரன் The Robot


நான் ஏற்கனவெ எழதியிருந்தது போல் வரி சலுகைகளுக்காக (ஏய்புக்காக என்று கூட வைத்துக் கொள்ளலாம்) ரோபோ எந்திரனாகியிருக்கிறான். இப்போது தமிழில் இதன் பெயர் எந்திரன் The Robot. மற்ற மொழிகளில் ரோபோ என்னும் பெயரையே வைத்துள்ளார்கள். ஆந்திரத்தில் வரிசலுகை இருந்திருந்தால் எந்திருடு The Robot ஆகியிருக்கும். இப்போது தெலுங்கில் அடி எழத்து என்ன தெரியுமா ரோபோ (தெலுங்கு ஜாங்கிரி எழத்தில் படிக்கவும்) SPEED: 1 TERA HZ, MEMORY: 1 ZETTA BYTE. அப்படியென்றால் என்ன எந்திரனை பற்றி என்ன சொல்ல வருகிறார்கள் என்று விளக்க முயல்கிறேன்.ஸீட்டாபைட் என்பது கணிணியில் உள்ள தகவல்களை சேமிக்கும் ஒரு குறியீட்டு சொல். உங்களுக்கே தெரியும் ஒரு கிலோ பைட் என்பது 1024 பைட், 1024 கிலோ பைட் ஒரு மெகா பைட், 1024 மெகா பைட் ஒரு கிகாபைட், டெரா பைட் வரை கூட தெரிந்திருக்கலாம் ஜீட்டா பைட் என்பது 1,180,591,620,717,411,303,424 பைட்டுக்களாம். உலகிலேயே 2006ல் 0.161 ஜீட்டா பைட் உள்ள கணிணிதான் நடைமுறையில் உள்ளதாம், 2010ல் இது 0.988 ஜீட்டா பைட் உள்ள கணிணி நடைமுறைக்கு வரலாம் என்று கூறுகிறார்கள் . ஹெர்ட்ஸ்(hertz Hz) என்பது அதிர்வலைகளை குறிக்கும். அப்படியென்றால் ஒரு நொடியில் எத்தனை அதிர்வலைகளை உண்டாக்கும் என்பது. இது கணிணியில் உள்ள ப்ராசசரின் வேகத்தை அளக்கும் ஒரு சொல். சாதாரணமாக் நாம் கிகா ஹெர்ட்ஸ்(Giga Hz) கேள்விபட்டிருப்போம். இப்போது டோஷிபா மடிகணிணியில் தற்சமயம் உள்ளது 4GHZ. டெரா ஹெர்ட்ஸ்(TERA HZ) என்றால் அதன் வேகம் நினைத்தே பார்க்க முடியாத வேகம்.
ஆகவே அசாத்திய சக்தியுடனும், அசாதாரண வேகத்துடனும் எந்திரமாக வரப்போவது யாரு நம்ம சூப்பர் ஸ்டாரு. நான் முன்பே இந்த பிளாக்கில் எழதியுள்ள ரஜினியால் என்ன செய்ய முடியுமை ஒரு முறை படித்து பாருங்கள், அவைகள் எந்திரனால் சாத்தியம் தானே!


நன்றி திரு.ராஜேந்தர்.


நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயை செய்து கருத்து கூறி ஊக்கம்ளியுங்கள்.

Tuesday, September 9, 2008

The Robot


எந்திரன் The Robot படபிடிப்பு நேற்று செப்டம்பர் 8ம் தேதி அமெரிக்காவில் தொடங்கியது.வரி சலுகைகளுக்காக The Robot எந்திரனாகியுருக்கிறான். ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் ரஜினியின் பாடல் காட்சி படமாக்கபட்டதாம். இது சூப்பர் ஸ்டாரும் ஷங்கரும் இணையும் இரண்டாவாது படம் ஆகவே எதிர்பார்ப்பும் அதிகம்.
இந்த படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் மற்றும் ஈராஸ் இண்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கிறது ஆகவே பிரம்மாண்டத்திற்கு குறைவிருக்காது.
படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான், அமெரிக்காவில் இரண்டு பாடல்கள் படமாக்குகிறார்களாம்.
படபிடிப்பு ரத்தினவேலு, கலை சாபு சிரில், பாடல்கள் வைரமுத்து மற்றும் ப.விஜய். நடனம் ராஜு சுந்தரம்(இயக்குனர்). உடைகள் வடிவமைப்பு மனிஷ் மல்ஹோத்ரா.
எந்திர மனிதனுக்கான உடைகள் வடிவமைப்பது Men in Black, Batman Returns படங்களுக்கு வடிவமைத்தவராம்.
எந்திரனின் தந்திர காட்சிகளுக்கு Predator, Jurassic Park, Pearl Harbour, Iron Man, Terminator போன்ற படங்களுக்கு வேலை செய்த ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டூடியோவில் செய்ய போகிறார்களாம்.
Crouching Tiger Hidden Dragon, Matrix,Kill Bill ஆகிய படங்களுக்கு சண்டை காட்சிகள் அமைத்த யென் வூ பிங் தான் எந்திரனின் சண்டை காட்சிகளை அமைக்கிறார்.
எல்லாம் சரி ஷங்கர் 201oல் வெளியாகும் எந்திரன் அதிருமா!

சுரண்டல்


சுரண்டலில்(Corruption) இந்தியா 2007 விட இந்த வருடம் முன்னேறியுள்ளதாம். Transparency International என்னும் ஒரு சர்வதேச தனியார் நிறுவனம் எடுத்த ஆய்வின் முடிவு இது. கம்மியாக சுரண்டுவதிலிருந்து அதிகமாக சுரண்டப்படும் வரிசையில் இந்தியா 74வது இடத்தை பிடிக்கிறது. அமெரிக்கா 20வது இடத்தில் உள்ளது.
டென்மார்க்,ஃபின்லாண்ட்,நியூசிலாண்ட்,சிங்கப்பூர் மற்றும் சுவீடன் பட்டியலில் முதல் ஐந்தெடத்தை பெறுகிறது.
The Transparency International (TI) என்னும் அரசு சாரா தன்னிச்சையான நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுரண்டலை உலகெங்கிலும் வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது. 1995ல் ஆரம்பிக்கபட்ட இந்த பட்டியல் ஆண்டாண்டுகளாக வெளியிடபட்டு இன்றுவரை தொடர்கிறது. இந்த ஆண்டு 180 நாடுகளின் சுரண்டல் பட்டியலிலிருந்து சில.
நம் அண்டை நாடுகளான பாக்கிஸ்தான் 140 வது இடத்திலும். சீனா 73வது இடத்திலும் இருக்கிறது.
இரான்,லிபியா மற்றும் நேபாள் முறையே 133,134,135வது இடத்தை பிடிக்கிறது. ரஷ்யா 145வது இடத்திலும்,ஸ்ரீலங்கா மற்றும் மாலத்தீவு 96 மற்றும் 90 வது இடத்திலும் இருக்கிறது. சிங்கப்பூருக்கு அடுத்து ஆசியாவில் கம்மியான இடத்தை பிடித்திருப்பது பூட்டான் 41வது இடம்.
லஞ்சம்,ஊழல் நம்ம நாட்டுக்கும் மேலை நாடுகளுக்கும் உள்ள வித்யாசம் நம்மவர்கள் அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகளுக்கே பணம் வாங்கிக் கொண்டு செய்கிறார்கள் மேலை நாடுகளில் அன்றாட கடமைகளுக்கு லஞ்சம் வாங்குவதில்லை, அசாதாரண வேலைகளுக்கு வாங்குகிறார்கள். இதனால் நம் நாட்டில் ஊழலும் லஞ்சமும் புரையோடி அடி வேர்வரை சென்றுவிட்டது. இந்தியா போய் இறங்கியவுடன் சுங்க அதிகாரிகள் காரணமேயில்லாமல் 100 டாலருக்கு பிச்சை எடுப்பார்கள். ம்ம்ம்ம்ம்ம்

சாரே ஜகான்ஸே அச்சா! வந்தே மாதரம்.

Monday, September 8, 2008

நியாயம்தானா… நீங்களே சொல்லுங்க!

குசேலன் படத்தை திரையிட்ட தமிழக திரையரங்கு உரிமையாளர்களில் ஒரு பகுதியினர் நேற்று சென்னையில் கூடி, பத்திரிகையாளர்களிடம் தங்கள் நஷ்டக் கணக்கைக் காட்டினர். அதையும் உங்களுக்கு அப்படியே தமிழில் தருகிறேன். இவற்றை முழுமையாக (தினத்தந்தி தவிர - அதிலும்கூட ஓரளவுக்குதான் கொடுத்திருந்தார்கள்) எந்தப் பத்திரிகையும் தரவில்லை.இந்த சந்திப்பில் நடந்தவற்றை திரட்டி இங்கே தருகிறேன்.
சங்கத்தின் தலைவர் பன்னீர், சுந்தர் திரையரங்க உரிமையாளர் கண்ணப்பன் உள்பட 12 திரையரங்கு உரிமையாளர்கள் கூறியதன் தொகுப்புதான் இங்கே தந்திருப்பது.
இவர்களின் தரப்பில் என்ன நியாயம் உள்ளது என நீங்களே சொல்லுங்கள், முழுதும் படித்துவிட்டு!
இன்னொன்று - இன்னும் ஒரு விரிவான கட்டுரையோடு குசேலன் சம்பந்தப்பட்ட பதிவுகளை நிறுத்திவிட்டு, அடுத்த கட்டத்தைப் பற்றிப் பார்ப்பது நண்பர்களுக்குப் புத்துணர்ச்சி தரும் என நினைக்கிறேன்.
ரஜினி சாரிடம் நாங்கள் பணம் கேட்கவில்லை!குசேலன் படத்தை ரஜினி சார் சொன்ன மாதிரி எங்களுக்கு வியாபாரம் செய்திருந்தால், இந்தப் படம் தமிழகத்தில் நன்றாகவே போயிருக்கும். தயாரிப்பாளர் பாலச்சந்தரும், இயக்குநர் வாசுவும் சேர்ந்து போட்ட திட்டத்தில் நாங்கள் மாட்டிக் கொண்டோம், என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
குசேலன் படம் தமிழகத்தையும் ஆந்திராவையும் தவிர பிற பகுதிகளில் சிறப்பாக ஓடிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். நீங்கள் மட்டும் ஏன் தொடர்ந்து நஷ்டம் என்கிறீர்கள்?குசேலன் படத்தில் எனது பங்கு 25 சதவீதம்தான் என ரஜினி கூறினார்.ஆனால் படப்பிடிப்பு முடிந்து படம் திரைக்கு வரும் நேரத்தில், இது ரஜினி படம், அவர் படம் முழுக்க வருகிறார் என இயக்குனர் வாசு தெரிவித்தார். அதற்கேற்ற மாதிரி பத்திரிகைச் செய்திகளும் இது ரஜினியின் படம் என்ற இமேஜைக் கொடுக்கும் விதத்தில் பெரிய அளவு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தின.படத்தை திரையிட நாங்கள் வாங்கும்போதும் வாசு இதையே கூறினார். எனவே அதை நம்பி அதிக விலை கொடுத்து வாங்கினோம். தமிழகம் முழுவதும் 375 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது. ஆனால் படம் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால் வசூல் குறைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது.எனவே இதைச் சரிகட்ட நாங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் கொடுத்த தொகையை சதவிகித கணக்கு வைத்து, ‘மினிமம் கியாரண்டி’ தொகையை டெபாசிட்டாக வைத்துக்கொண்டு, மீதித் தொகையை திருப்பித் தருமாரு கோருகிறோம். இதனால் யாருக்கும் நஷ்டம் ஏற்படாது. பாலச்சந்தர், விஜயகுமார், சாய்மிரா போன்றவர்களின் லாபத்தில் ஒரு பகுதி குறையும். இதைச் செய்துதான் தீர வேண்டும். ரஜினி தலையிட வேண்டும்!இந்த விஷயத்தில் தயாரிப்பாளர்களை விட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைத்தான் நாங்கள் அதிகம் நம்புகிறோம். இந்தப் படத்தில் தன்னுடைய பங்களிப்பு குறித்து அவர் ஏற்கெனவே தெளிவாகக் கூறியும், அதை எங்களிடம் தவறாகச் சொல்லி வியாபாரம் செய்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் மீதுதான் எங்கள் கோபமெல்லாம்.இது நல்ல படம்தான். ஆனால் தவறாக வியாபாரம் செய்யப்பட்ட படம். அதுதான் பிரச்சினையே!எனவே மனித நேயமிக்க சூப்பர்ஸ்டார் ரஜினி சார் இதில் தலையிட்டு எங்களுக்கு பணத்தை வாங்கித் தர வேண்டும்.
ரஜினி இந்தப் படத்தில் கவுரவ நடிகர்தானே… அப்படியே கதாநாயகனாக இருந்தாலும், அவரிடம் நீங்கள் எப்படி பணத்தைத் திருப்பித் தரக் கேட்பீர்கள்?நீங்கள் சொல்வதை நாங்கள் மறுக்கவில்லை. நாங்கள் இப்போதும் ரஜினி சாரிடம் பணம் கேட்கவில்லை. ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களிடம் எங்களால் நியாயமாகப் பணத்தைப் பெற முடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது.எனவேதான் ரஜினி சார் இதில் தலையிட வேண்டும் என்கிறோம். அவருக்கு எங்களைப் போன்றவர்களின் கஷ்டம் தெரியும்.பாபா படத்தில் நாங்கள் கேட்காமலே கூப்பிட்டுப் பணத்தைக் கொடுத்தார் ரஜினி. இப்போது சொல்கிறோம், பாபா தோல்விப் படமல்ல (அடப் பாவிகளா… இதை அப்போதே சொல்லியிருக்கலாமே!!). அதற்கே நஷ்ட ஈடு கொடுத்தவர் தான் ரஜினி. அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரின் காதுகளுக்கு இந்த விஷயம் போக வேண்டும், இந்த வியாபாரத்தில் நடந்த உண்மையான விஷயங்கள் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு.
திருப்பித் தராவிட்டால்… ரஜினி படத்தை வாங்க மாட்டீர்களா?படத்துக்கான நஷ்டத்தை திருப்பி தராவிட்டால் கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் தயாரிக்கும் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம். இதில் ரஜினி சார் மீது ஏன் பழிபோட வேண்டும். பொதுவாகவே அவர் படமென்றால் குறைந்தது 50 நாட்களுக்கு அரங்கு நிறைந்த காட்சிகள்தான். ஆனால் இந்தப் படத்தில் அது நடக்கவில்லையே.ஆனால் உண்மையைச் சொல்லி, இதில் பாதித் தொகைக்கு படத்தை விற்றிருந்தால்கூட எங்களுக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கும். படமும் நன்றாகப் போயிருக்கும்.இந்த விஷயத்தில் ரஜினிசார் தீர்க்கதரிசி. அவர் சரியாகச் சொன்னார், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில். நாங்கள்தான் பாலச்சந்தரின் வார்த்தைகளை நம்பிவிட்டோம்.இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் நன்றாகப் போகாததற்கு யார் காரணம், அதன் பின்னணி என்ன என்பதெல்லாம் எங்களுக்குத் தேவையில்லாத விஷயம். நாங்கள் வியாபாரிகள். நஷ்டத்தைத் தாங்க முடியாது, அதனால் அதைச் சரிகட்டச் சொல்கிறோம். இதற்கும் ரஜினி படங்களை நாங்கள் வாங்குவதற்கும் சம்பந்தமில்லை. நிச்சயம் அடுத்த படத்தை வாங்குவோம். ஆனால் விழிப்புடன் இருப்போம்.அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 23-ம் தேதி சென்னையில் அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் கலந்து ஆலோசிக்க உள்ளோம்.
இதே போன்ற நடவடிக்கைகளை அனைத்து நடிகர்கள் நடித்த படங்களுக்கும் எடுப்பீர்களா…?இந்தக் கேள்விக்கு சுந்தர் திரையரங்க உரிமையாளர் கண்ணப்பன் சொன்ன பதில்…பெரிய நஷ்டம் வந்தால் தவிர்க்க வேறு வழியில்லை.இப்போதும் வசூலான தொகையை வைத்துச் சொல்கிறோம், நியாயமான சதவிகிதத்தை அவர்கள் எடுத்துக் கொண்டு மீதியைக் கொடுத்தால் யாருகத்கும் நஷ்டமில்லை. பாலச்சந்தரிடம் ரஜினி சார் சம்பளம் பெறவில்லை என்று சொல்கிறார்கள். அப்படியிருக்க அவர்களுக்கு நஷ்டம் வர வாய்ப்பே இல்லையே.நல்ல மனிதர் ரஜினியின் பெயரை வைத்து நடத்தப்பட்ட சூதாட்டம் இது. இதில் அவர் பெயரைக் கெடுத்தது கூடவே இருப்பவர்கள்தான். எத்தனையோ நெருக்கடியான சூழலில் நாங்கள் ரஜினி சாருக்குக் கைகொடுத்தோம். அதையும் மறந்துவிடாதீர்கள்.இன்னொன்று எல்லோரிடமும் இப்படிக் கேட்க முடியாதுதான். கொடுக்கிறவரிடம்தானே கேட்க முடியும். அதுதான் ரஜினி சார் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. தனிப்பட்ட முறையின் எங்களுக்கு ரஜினிசார் மீது எந்த வருத்தமும் இல்லை. நாட்டுக்கொரு நல்லவன் பட நஷ்டத்தைக்கூட என்னைப் போன்ற சிலர் சமாளிக்க உதவியவர் ரஜினி.
ஒரு வியாபாரத்தில் லாப நஷ்டம் வருவது சகஜம்தானே… இதே ரஜினி படங்கள் பலவற்றில் கணிசமாக லாபம் பார்த்தீர்கள் அல்லவா?இந்தக் கேள்விக்கு யாருமே பதில் சொல்லத் தயாராக இல்லை!!பின்னர் பழனியப்பன் மட்டும், இப்போதைய சூழ்நிலையில் இந்த மாதிரிதான் வியாபாரம் செய்ய வேண்டி உள்ளது.
சரி… படத்தை நீங்கள் பிரமிட் சாய்மிராவிடம்தானே வாங்கினீர்கள்… அவர்களை விட்டுவிட்டு ரஜினியையும், பாலச்சந்தரையும் பிடித்துக் கொண்டிருப்பது ஏன்?ஒரு நிமிடம் அமைதி காத்த கண்ணப்பன்… அதான் சொன்னேனே, கொடுப்பவர்களிம்தான் கேட்க முடியும். இது எங்கள் கோரிக்கைதான். அதை மனிதாபிமான முறையில் ரஜினி பரிசீலிக்க வேண்டும்.
நியாயம்தானா…நீங்களே சொல்லுங்க!—————————————————————————————
இதில் ரஜினியின் நிலை என்ன?நடந்த நிகழ்வுகளைப் பார்த்து மிகுந்த அதிருப்திக்குள்ளான சூப்பர்ஸ்டார், முழுமையான கலெக்ஷன் ரிப்போர்ட்டை பிரமிட் சாய்மிராவிடம் கேட்டுள்ளாராம்.ஆனால் பிரமிட் சாய்மிரா இதில் பட்டும் படாமல் இருக்கிறது. காரணம் அவர்களுக்கு Break Even கிடைத்துவிட்டது என்பதே உண்மை. கேரளா மற்றும் வெளிநாட்டு உரிமைகளில் கணிசமான கோடிகள் வந்துள்ளன. ஆனால் ‘நாங்கள் செய்த வியாபாரத்தில் கிடைத்த லாபத்தை மற்றவர்களுக்கு ஏன் தரவேண்டும்?’ என்ற நினைப்பில் அமைதியாக இருக்கிறார்கள் சாய்மிரா நிறுவனத்தினர்.இந்த நிலையில் சாய்மிராவிடம் திரையரங்க உரிமையாளர்கள் போய் நின்றால், சாய்மிரா நஷ்டக் கணக்கோடு ரஜினியிடம்தான் வரப்போகிறது. காரணம் அவர்களிடம் நேர்மையான வியாபாரத்தை எதிர்பார்க்க முடியாது என பல திரையரங்க உரிமையாளர்கள் ஏற்கெனவே கூறியிருக்கிறார்கள். அவர்களுடன் போட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்த எத்தனையோ திரையரங்க உரிமையாளர்களைக் காட்ட முடியும்.ஆக லாபம் பார்த்தது பிரமிட் சாய்மிரா… லாபம் சம்பாதிக்கும் பொருளை (படத்தைத்) தந்தவர்கள் ரஜினியும் பாலச்சந்தரும். ஆனால் இடையில் நஷ்டப்பட்ட சிலர் தங்களிடம் அதிக விலைக்கு விற்ற சாய்மிராவை விட்டுவிட்டு, சிலரைக் காப்பாற்ற உதவிய ரஜினியின் பெயரை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.இன்னொன்று இந்தப் படத்தை மினிமம் கேரண்டி அடிப்படையில் வாங்கியிருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். இப்படி வாங்குவது அவரவர் சொந்த ரிஸ்க்கில் வாங்குவது போலத்தான். நஷ்டப்பட்டாலும் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. யாருக்கும் தடை போடவும் முடியாது.நான் முன்பே சொன்னது போல எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம்தானே…!


நன்றி:திரு.ராஜ்

எந்திரன்





ஷங்கரின் ரோபோ இப்போது எந்திரன் படபிடிப்பு ஆரம்பமாகிவிட்டது. டெர்மினேட்டர் கதையின் காபியாக கூட இருக்கலாம். ஆர்னால்ட் நடித்த கதாபாத்திரத்தில் ரஜினி, பையனின் அம்மா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாராய் (என்ன நினைச்சாலே அதிருதுல்ல) எது எப்படியோ இன்னும் ரெண்டு வருஷத்துல ஷங்கர் ரிலீஸ் பண்ணிடுவாரு. தமிழிலும் தெலுங்கிலும் தயராகும் இந்த படத்தின் படங்கள் உங்கள் பார்வைக்கு.

Monday, August 11, 2008

அது ஒரு கனா காலம்!




லயோலா கல்லூரி எங்கள் குடும்ப கல்லூரி.என் அண்ணண் என் ஒன்று விட்ட அண்ணண்கள்(என் சித்தப்பா பசங்கள் மூவர்) பிறகு நான் எல்லோரும் லயோலைட்ஸ். இதில் ஒரு அண்ணண் தவிர மீதி அனைவரும் கணிதம் தான் படித்தோம்.
லயோலா என்னும் பெயர் புனிதர் இக்னீஷியஸின் குடும்ப பெயர். 1491ல் ஸ்பெயினில் பிறந்த இக்னீஷியஸ் அரசரின் பாதுகாவலராக பணிபுரிந்தார். ஒரு போரில் அடிபட்டு எதிரி சிறையில் இருந்த போது யேசுவிடம் ஞானம் ஏற்பட்டு `The Spiritual Exercises' என்னும் புத்தகத்தை எழதினார். புனிதர் ஃபாரான்ஸிஸ் சேவியருடன் 1540 இந்தியா வந்து யேசுவின் சமூகம் என்னும் ஒரு நிறுவனத்தை எற்படுத்தி யேசுவை பற்றி போதித்தார். இதுவே படிப்படியாக முன்னேறி பள்ளிகள் கல்லூரிகள் கட்ட ஏதுவாகியது. சென்னை லயோலா கல்லூரி கடந்த 15 வருடமாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி பிரிவில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது.

கல்லூரி சார்ந்த தமிழ் படங்களில் முக்கால்வாசி படங்களில் லயோலா கல்லூரியில்தான் எடுக்கப்படுகிறது. சரத்குமார்,விஜய், சுர்யா, விக்ரம்,விஷால்,ஜெயம் ரவி போன்ற எண்ணற்ற தமிழ் சினிமா உலகின் வைரங்களை பட்டை தீட்டியது லயோலா கல்லூரிதான்.
நான் கல்லூரிக்கு அடியெடுத்து வைக்கும்போது ஏழாவது எட்டாவது படிக்கும் ஸ்கூல் பையன் போல் இருப்பேன் தவிர வெளி உலக அனுபவம் வேறு குறைச்சல். ஆதலால் முதல் ஒரு மாதம் வரை சிந்தாதரி பேட்டையில் உள்ள என் அண்ணண் வீட்டிற்கு சென்று (அப்போது அவன் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்த கல்லூரி தாதா). அங்கிருந்து அவனுடன் காலேஜ் செல்வேன் ராகிங்கிற்கு பயந்து.
முதல் ஆண்டில் முதல் நாள் என்னை டஸ்டர், சாக்பீஸ் மற்றும் அட்டண்டன்ஸ் ரிஜிஸ்ட்ர் எடுத்து வர சொன்னார் ஒரு விரிவுரையாளர் அன்றிலிருந்து அந்த பணி எனக்கிடப்பட்டு படிப்படியாக Class Monitor (இது அந்த மானங்கெட்ட மானிட்டர் அல்ல) ஆனேன். பல பேருக்கு proxy போட்டு Condonation Feeயிலிருந்து காப்பாற்றியிருக்கிறேன். Proxy போடுவதால் தினமும் சமோசா, டீ என்று காண்டினில் ஏக உபசாரம் நடக்கும்.இரண்டாமாண்டு படிக்கும் போது காலை உடைத்துக் கொண்டு 6 மாதம் கல்லூரிக்கே செல்லவில்லை. நான் காலேஜ் படிக்கும் காலத்தில் ஒரு புத்தகம் கூட விலை கொடுத்து வாங்கியது கிடையாது இதில் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களும் அடக்கம். ரஜஸ்தான் புத்தக வங்கி மற்றும் கல்லூரி நூலகத்திலிருந்து தான் புத்தகங்கள் எடுத்து படித்திருக்கிறேன்.
நான் என் டிப்பார்ட்மெண்டிற்காக கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன், மேலும் எங்கள் கல்லூரி கலாசார விழா மிகவும் பிரசித்தி அதன் Organizing Commiteயில் இருந்தேன். காலேஜ் கட் அடித்துவிட்டு சினிமா போயிருக்கிறேன், ஊர் சுற்றியிருக்கிறேன்…

அது ஒரு கனா காலம்!

Tuesday, August 5, 2008

அதிகாரமும் பொறுப்பும்



“The Incredibles” என்னும் கார்ட்டூன் படத்தில் ஒரு காட்சி திருமதி இன்கிரெடிபிள் தன் கணவனை தேடி செல்கையில் தனது மகன் டாஷ் மகள் வயலடையும் ஒரு குகையில் விட்டு செல்கிறாள். நல்ல அம்மாவாக வயலட்டிடம் பாதுகாப்பாக இருக்கும்படியும் டாஷை பார்த்து கொள்ளும் பொறுப்பையும் கொடுத்துவிட்டு அவளுக்கு எந்த அதிகாரமும் கொடுக்காமல் செல்கிறாள். டாஷ் அம்மா சென்றதும் குகையை சுற்றி பார்க்க கொள்ளிகட்டையுடன் செல்கிறான். வயலட் எவ்வளவு கதறி பார்த்தும் அவள் பேச்சுக்கு மதிப்பில்லை. கடைசியில் எதிரிகளிடம் இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள். பிறகு இன்கிரெடிபிள் குடும்பம் தப்பிக்கிறது அது வேறு கதை.
இந்த போக்கை இந்திய நிறுவனங்களிட்ம் அதிகம் பார்கிறேன். அவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு பொறுப்புக்கு ஏற்ற அதிகாரம் கொடுப்பதில்லை. உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில் ஒருவர் வியாபார துறைக்கு தலைவர், அவரது பொறுப்பு அவருக்கிடப்பட்ட வியாபார இலக்கை அடைவது. இதற்கு தேவையான அதிகாரம் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் ஆர்டர்களை பரிசீலித்து பார்த்து பொருட்களை அனுப்ப வேண்டும், தன் கீழ் வேலை செய்யும் ஊழியர்களை உற்சாகபடுத்தி, தேவையாதை அளித்து வியாபாரத்தை பெருக்க வேண்டும். இதில் எந்த அதிகாரமுமே அவரிடம் இல்லை. இதனால் முடிவு எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்களிடம் அவப்பெயர் ,அவர் கீழ் வேலை செய்யும் ஊழியர்களிடம் அவமதிப்பு. இதற்கு காரணம் முதளாளிகளின் சந்தேகம், பயம். அதிகாரமில்லை ஆனால் இலக்கை மட்டும் அடைய வேண்டும். இதற்கு மேலைநாடுகளில் NAG Syndrome (No Authority Gauntlet) என்கிறார்கள்.
பொறுப்புக்கேற்ற அதிகாரம் இல்லை என்றால் அதன் விளைவுகள் அவமானம், மனச்சோர்வு, நம்பிக்கையில்லா நிலை, உற்சாகமின்மை மற்றும் எதேதோ, இதனால் நிறுவனங்களில் நல்ல அதிகாரிகள் வேலையை விட்டு செல்லும் நிலை ஏற்படுகிறது. இது நிறுவனங்களுக்கு நல்லதா என்று முதளாளிகள் சிந்திக்க வேண்டும்.
“பொறுப்புக்கேற்ற” “அதிகாரம்” இல்லை என்றால் அது “அநீதி”!!!

Saturday, July 26, 2008

போன்ஸாய் பழங்கள்



நேற்று ஒரு செய்தி படித்தேன், சந்திரசேகர் என்னும் 17 வயது சிறுவன்(!) சென்னை IITயில் M.Tech பட்டம் பெற்றிருக்கிறான். 2 வருடங்களுக்கு முன்னால் 15 வயதில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறான். பையனின் மேதமையை அறிந்த குடும்ப நண்பரால் 11 வயதில் Microsoft Certified Engineer மற்றும் CISCO வில் Associate பெற்றான் இதை தவிர அந்த வயதில் Technology Information Forecasting and Assessment Council Center of Relevance and Excellence in network engineeringல் இயக்குனர் பட்டம். எல்லாம் சரி இந்த மேதாவிலாஸமெல்லாம் இயற்கையிலேயே சரியா. அந்த சிறுவன் சிறு வயதிலேயே தன் குழந்தைதன்மையை இழந்துவிட்டதாக எனக்கு படுகிறது. இந்த காலங்களில் குழந்தைகளின் மண்டைக்குள் நிறைய திணிக்கிறோம். என் மகனை பள்ளியில் LKG சேர்க்க அந்த மூன்று வயது குழந்தைக்கு தெரிந்திருக்க வேண்டியது என்ன தெரியுமா ஆங்கிலத்தில் பெரிய A-Z, சிறிய a-z அதுவும் சேர்த்து சாய்த்து எழத வேண்டும்(Cursive Writing)., கணித்தில் 0-100, இது தவிர இந்தி வேறு. எனக்கு இந்தி சுத்தமாக வராது. இன்னும் கொஞ்சம் காலம் முன்னால் பிறந்திருந்தால் திராவிட கட்சிகளுடன் சேர்ந்து இந்தி எழத்துக்களுக்கு தார் பூசியிருப்பேன். சரி இதை விட கொடுமை என்னவென்றால் குழந்தைகள் நுழைவு தேர்வு எழத தயார் செய்ய ஒரு பள்ளியிருக்கிறது. அதில் ஒன்றாரை வயது குழந்தை பாடம் படிக்க வருகிறது. தவழ ஆரம்பித்தவுடன் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள்(என்னையும் சேர்த்துதான் வேறுவழி! பள்ளியில் இடம் கிடைக்க வேண்டுமே). இதை தவிர பள்ளிகள் விடுமுறை விட்டிருக்கும் போது கூட குழந்தைகளை கோடை பயிற்சி மையங்களுக்கு அனுப்பி படிக்க செய்கிறோம். இதற்கெல்லாம் காரணம் என்னவென்று யோசித்தால் நமது பேராசைகளுக்காக அல்லது சமுதாய கட்டாயத்திற்க்காக நம் குழந்தைகளின் குழந்தை பருவத்தை பலிகொடுக்கிறோம் (கொடுக்கிறோமா அல்லது வாங்குகிறோமா தெரியவில்லை). இது நியாயமா!.
ஆண்டாள் நோன்பிருந்து திருப்பாவை பாடியபோது அவளுக்கு வயது ஐந்தாம். மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தினமாலையில் ஒரு பாடல்

அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்க்கும் தன்மையளாய் –பிஞ்சாய்
பழத்தாளை ஆண்டாளை பத்தியுடன் நாளும்
வாழ்த்தாய் மனமே மகிழ்ந்து.

எல்லாக் குழந்தைகளும் பிஞ்சிலேயே பழத்தால் என்னவாகும் போன்ஸாய் மரங்களைப் போல் போன்ஸாய் பழங்களையா உருவாக்குகிறோம் என்று யோசிக்க வேண்டாமா! எனினும் சந்திரசேகருக்கு என் வாழ்த்துக்கள்.

Tuesday, July 22, 2008

ஒரு நாயின் கதை


ஒரு நாள் கடைக்கு நாய் ஒன்று வந்தது. முதலில் கடைகாரர் அந்த நாயை விரட்டினார் பிறகு அதன் வாயில் ஒரு சீட்டை பார்த்தார் அதில் “நாயின் கழத்து பட்டையில் 100ரூபாய் உள்ளது அதை வைத்துக் கொண்டு 12 சோப்பும் 1 ஷாம்பூவையும் கொடுத்து உதவுங்கள்” என்றிருந்தது. கடைக்காரரும் சீட்டில் உள்ளதையும் மீதி சில்லரையையும் பையில் போட்டு கொடுத்தார். நாயும் கவ்விக் கொண்டு சென்றது. கடைக்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை, கடையை மூடிக்கொண்டு நாயின் பின்னலேயே சென்றார். நாய் ஒரு வீட்டின் முன் நின்றது காலால் கதவை தள்ளி பார்த்து, கதவு திறக்கவில்லை. பிறகு கதவை தன் தலையால் முட்டிவிட்டு காத்திருந்தது. சத்தம் கேட்டு நாயின் எஜமானன் வந்தான். நாயை முறைத்து பார்த்துவிட்டு அதை அடிக்க ஆரம்பித்தான். கடைக்காரருக்கு பயங்கர கோபம் , எஜமானனிடம் சென்று “இவ்வளவு அறிவார்ந்த நாயை போய் அடிக்கின்றீர்களே” என்று கேட்டார். அதற்கு அந்த எஜமானன் “இந்த அறிவுகெட்ட நாய் சாவியை மறந்து விட்டு சென்றிருக்கிறது, இந்த மாதம் மூன்றாவது முறையாக இதை செய்கிறது” என்றான்
கதையின் நீதீ: மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!

Monday, July 21, 2008

வீர வைணவர்கள்



கி.பி 1311 டில்லியை ஆண்டுகொண்டிருந்த முகலாய மன்னன் அலாவுதின் கில்ஜி மாலிக் கஃபூர் தலைமயில் ஒரு படையை அனுப்பினான், பாண்டிய நாட்டை ஆக்ரமிப்பதற்காக. வந்த படை பாண்டிய நாட்டை துவம்சம் செய்தது. மீண்டும் ஏழாண்டுகள் கழித்து கி.பி1318 ல் வந்த முகலாய படை பாண்டிய நாட்டை சூரையாடியது. மீண்டும் ஐந்தாண்டுகள் கழித்து கி.பி 1323 வந்த படையை தலைமை தாங்கி நடத்தி வந்தது உலூப் கான்.( இவன் பின்னாளில் முகமது பின் துக்ளக் என்னும் பெயரில் டில்லியில் அரசாண்டான்) இந்த படையின் நோக்கம் திருவரங்கத்தை துவம்சம் செய்வது, கோயிலில் இருக்கும் மூலவர் மற்றும் உற்சவ விக்ரகங்களை சிதைப்பது. இந்த படை தற்போது திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரத்தில் முகாமிட்டிருந்தது. மறு நாள் திருவரங்கத்தை முற்றுகையிட திட்டம். அப்போது திருவரங்கத்தில் நம்பெருமாளுக்கு உற்சவம் நடந்து கொண்டிருந்தது. முற்றுகை திட்டம் திருவரங்கத்தில் உள்ள வைணவ பெரியவர்களுக்கு தெரிந்தது. இருப்பது ஒரு இரவு அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும். பிள்ளைலோகாச்சாரியர், தேசிகர், சுதர்சன பட்டர் தலைமயில் கூட்டம் கூட்டப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது, அதன்படி பிள்ளைலோகாசாரியர் தலைமயில் ஒரு குழு மூலவருக்கு முன்னால் கல்லால் கட்டடம் எழப்பிவிட்டு உற்சவ விக்ரகத்தை எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி செல்ல வேண்டும், சுதர்சன பட்டர் தலைமயிலான குழு வடக்கில் சென்று முகலாய படையை தடுத்து நிறுத்தி நேரம் பெற்று தர வேண்டும், தேசிகர் ஓலைசுவடிகளையும் சுதர்சன பட்டரின் இரு புதல்வர்களையும் காப்பாற்ற வேண்டும்.
சுதர்சன பட்டர் தலைமயில் 12,000 வைணவர்கள் திருவரங்கத்தின் வடக்கே சென்று காவல் காத்தனர். பிள்ளைலோகாசாரியர் மூலவருக்கு கல்திரை சமர்ப்பித்துவிட்டு உற்சவ மூர்த்தியை ஒரு பல்லக்கில் வைத்து தெற்க்கு நோக்கி பயணித்தார். முகலாய படையெடுப்பில் அன்று திருவரங்கத்தை காக்கும் பொருட்டு சுதர்சன பட்டர் உட்பட 12,000 வைணவர்கள் கொல்லப்பட்டனர். பிள்ளைலோகாசாரியர் உற்சவ மூர்த்தியை எடுத்து செல்கையில் ஜோதிஷ்குடி என்னும் ஊரில் தன் இன்னுயிர் நீத்தார் அப்போது அவருக்கு வயது 118 . தேசிகர் அரும்பாடுபட்டு ஓலை சுவடிகளையும் சுதர்சன பட்டரின் இரு புதல்வர்களையும் காப்பாற்றினார். உற்சவ மூர்த்தி திருமாலிருஞ்சோலை வழியாக குமுளி, இன்றைய காலிக்கட் சென்று மேலக்கோட்டையில் சிறிது காலம் இருந்துவிட்டு திருமலையில் தஞ்சம் அடைந்தார். பிறகு 57 ஆண்டுகளுக்கு பிறகு கி.பி 1370ல் மீண்டும் திருவரங்கம் வந்தடைந்தார். அந்த 57 ஆண்டுகள் வைணவ சம்பிரதாயத்தின் இருண்ட காலம். வைணவர்களின் தலைநகராக கருதப்படும் திருவரங்கத்தை காப்பாற்றி கொடுத்த 12,000 வைணவர்களும் வீர வைணவர்கள்தானே!.

Saturday, July 19, 2008

கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜம்


திருவல்லிகேணி ஹனுமந்த ராயன் தெருவில் வசித்த என் நண்பனின் பக்கத்து வீடுதான் கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜத்தின் வீடு. அவருடைய பேரன்களுடன் நான் கிரிகெட் விளையாடியிருக்கிறேன். அவர் கணிதத்திற்காக எத்தனையோ செய்திருக்கிறார். அவரது மேதாவிலாஸத்திற்கு அவர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சிறு நிகழ்ச்சி.
அவர் இங்கிலாந்தில் நோயுற்று ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார். அவரை பார்க்க, ராமானுஜத்தை இங்கிலாந்திற்கு அழைத்து வந்த இன்னொரு கணித மேதையான ஹார்டி(கம்பருக்கு சடையப்ப வள்ளல் போல் ராமனுஜத்திற்கு இவர்) வருகிறார்.
ஆஸ்பத்திரியில் ஒரு நோயாளியை பார்க்க போனால் நாம் என்ன செய்வோம்? நலம் விசாரிப்போம். ஹார்டி என்ன செய்த்தார் தெரியுமா, ராமானுஜத்தை பார்த்த உடனேயே, “ நான் ஒரு டாக்சியில் வந்தேன் அந்த டாக்சியின் நம்பர் 1729 , எனக்கு ஏனோ அந்த நம்பர் பிடிக்கவில்லை” என்று கூறுகிறார்! என்ன ஒரு அற்புதமான நலம் விசாரிப்பு! அத்ற்கு நாமாக இருந்தால் ,” போயா நீயும் உன் டாக்சி நம்பரும். இங்க ஊசிபோட்டு கையெல்லாம் வீங்கி கிடக்கு என்கிற ரீதியில் ஏதாவது சொல்வோம்.
ஆனால் ராமானுஜம் உடனே , உடனே என்றால் உடனே- “ ஏன் ஹார்டி அப்படி சொல்கிறீர்கள்? அது ஒரு அற்புதமான எண். It is that smallest number which can be presented in two different ways as addition of two cubes : ( 10 to-the-power 3 + 9 to-the-power 3 ) and ( 12 to-the-power 3 + 1 to-the-power 3 ).” என்று கூறினாராம்.
ராமானுஜம் 33 வருடங்களே இவ்வுலகில் வாழ்ந்தார், அவர் கணிததிற்கு செய்திருப்பது ஏராளம். theory of numbers, theory of division ( partition ) and the theory of continuous fractions, இன்னும் பல சூத்திர்ங்களை நமக்கு அளித்துள்ளார். அவர் விட்டு சென்ற குறிப்புகளை இன்றும் ஆராய்சி செய்கிறார்களாம். உலகமே போற்றும் ஒருவர் வாழ்ந்த ஊரில் நான் வாழ்ந்திருக்கிறேன் என்று மிகவும் பெருமை அடைகிறேன்.

Friday, July 18, 2008

ஜென்


ஜென் தத்துவங்களை கடைபிடிக்க எண்ணி பல முறை தோற்றிருக்கிறேன். அதை யாராலும் கடைபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஜென் தத்துவம் உன் வாழ்க்கையை இப்போது இந்த நொடி இந்த விநாடி வாழ்ந்து பார் என்பது அப்படியென்றால் சாப்பிடும் போது சாப்பிடு, படிக்கும் போது படி. சாப்பிடும் போது படிக்காதே என்பது தானே. The Zen And The Art Of Motorcycle Reparing என்று ஜென் தத்துவத்தை விளக்கும் ஒரு புத்தகம் கிடைத்தால் படித்து பாருங்கள். ஜென் என்ற ஒரு விஷயத்திற்க்கும் வெற்றிக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு. ஜென் சித்தாந்தம் விளக்க ஒரு சின்ன கதை.
ஒரு ஜென் குரு இருந்தார் அவர் இறக்கும் சமயம் வந்தது. அவர் ஒரு பிரசித்தி பெற்ற குரு என்பதால் நிறைய சிஷ்யர்கள் அவருக்கு இருந்தனர்.சுற்றியிருந்த சிஷ்யர்கள் ஆர்வத்துடன் நின்று கொண்டிருந்தனர், அவர் சாவதற்காக அல்ல ,கடைசி நேரத்தில் ஏதாவது முக்கியமான செய்தி சொல்லமாட்டாரா என்றுதான். அவர் ஒன்றும் சொல்லவில்லை நேரம் சென்று கொண்டுருந்தது ஆனால் உயிர் பிரியவில்லை. வெளியூர் சென்றிறுந்த பிரியமான மாணவன் ஒருவன் குருவின் உயிர் பிரிவதை ஞானதிருஷ்டியால் பார்த்துவிட்டு குருவிற்கு பிடித்த திராட்சை பழத்தை வாங்கிகொண்டு விரைந்து வந்தானாம்.
வந்த சிஷ்யன் குருவை வணங்கிவிட்டு அவருக்கு பழத்தை கொடுத்தானாம். குருவும் அதை வாங்கி சுவைத்து சாப்பிட ஆரம்பித்தார். குழமியிருந்த சிஷ்யர்களுக்கு பொறுமையில்லை, குரு கடைசியாக செய்தியேதும் சொல்லாமல் போய்விடுவாரோ என்பதால்.ஒரு சிஷ்யன் தைரியத்தை வரவழைத்து கொண்டு கேட்டே விட்டான்.
“குருவே, கடைசியாக நீங்கள் எங்களுக்கு ஏதேனும் சொல்லவீர்களா..”
குரு சொன்னாராம்:” திராட்சை இனிப்பாக இருக்கிறது..”
இதுதான் கதை. என்ன தலையும் புரியலை வாலும் புரியலை என்கிறீர்களா. சிந்தித்து பாருங்கள் அதுதான் ஜென்!.

Thursday, July 17, 2008

கைபேசி


ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கும் ஐஃபோன் கடந்த வாரம் பெங்களூரில் மட்டும் பத்து லட்சம் ஃபோன்கள் விற்று தீர்த்ததாம் மேலும் ஆப்பிள் ஸ்டோர்ஸ் என்னும் வலைதளத்திலிருந்து டவுன்லோட் செய்யப்பட்டிருக்கும் அப்ளிகேஷன்கள்(ஃபோன் உபயோக ப்ரொக்ரம்கள்) மட்டும் கடந்த வாரம் மட்டும் ஒரு கோடியை தாண்டிவிட்டதாம். ஆப்பிளின் ஐஃபோன் என்பது கைபேசி மட்டுமல்ல அது ஒரு நடமாடும் கணினி, மீடியா பிளேயர்,இன்டர்நெட் மற்றும் என்னென்னவோ இருக்கிறது.
கைபேசிகளில் புதிய முயற்சி என்பது இன்றியமையாதது, ஆப்பிள் ஐஃபோனின் முயற்சிக்கு முன்பே லினிக்ஸ் தளத்தில் இயங்கும் கைபேசிகளின் முயற்சிகளளை ஆரம்பித்து விட்டது நோக்கியா. இதனால் என்ன பயனென்றால் லினிக்ஸ் ஒரு திறந்த பெட்டகம் அதாலால் கைபேசிகளில் புதிய அப்ளிகேஷன்கள் உலகத்திற்கு வரும்.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் நோக்கியா ஃபோன்கள் வருடத்திற்கு 1.2 பில்லியன்களாம், மொத்த உலக சந்தை 1.5 பில்லியன்கள். இது இன்னும் ஐந்து வருடங்களில் ஏழ பில்லியன்களாகும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ம் உலகம் எங்கேயோ போய்கிட்டு இருக்கு.

பங்கு சந்தை



மும்பை பங்கு சந்தையில் கரடி புகுந்து விளையாடியிருக்கிறது, நேற்று 654 புள்ளிகள் குறைந்து சென்சக்ஸ்12,636 புள்ளிகளில் இருந்தது. இது கடந்த 15 மாதங்களில் மிக குறைவாம். இந்த சரிவால் முதளீடாளற்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு 1.8 லட்ச கோடிகளாம். இதனால் பண வீக்கம் அதிகமாகலாம் இதனால் வங்கிகளில் வரி விகிதம் உயர்த்தபடலாம் என்று கூறப்படுகிறது. இதனால் நான் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டு கடனின் தவணை உயர்த்தப்படலாம் அல்லது கட்டும் கால அளவு நீட்டிக்கபடலாம்.
போகட்டும் இதற்கு காரணமாக கூறப்படுவது ஜூலை 22ல் உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான ஓட்டெடுப்பு. இதற்கு காரணம் கம்யூனிஸ்ட் இடதுசாரிகள் காங்கிரஸ் அரசுக்கு தன் ஆதரவை விலக்கி கொண்டது இதற்கு காரணம் மன்மோகன் சிங் நியூக் எனப்படும் அணு ஒப்பந்தத்தில் தீவிரம் காட்டுவது இதற்கு காரணம் அமெரிக்க அதிபர் புஷ் தன் காலத்திலேயே அந்த ஒப்பந்தம் நிறைவேற வேண்டும் என நினைப்பது.
புஷின் நினைப்பு என் கடனின் தவணையை உயர்த்துகிறதல்லவா இதுதான் கேயாஸ் தியரி அல்லது பட்டர்ஃபிளை எஃபக்ட்.

Wednesday, July 16, 2008

அலுவலக மொழிகள்




சில அலுவலக மொழிகளும் அதன் அர்த்தங்களும் நம் நினைவில் எப்போதும் வைத்துகொள்ள வேண்டியவை

1)”நாம் கூட்டாக செய்யலாம்” என்றால் அதன் அர்த்தம்
“நீங்கள் செய்யப்போகிறீர்கள்”
2)”நீங்கள் பிரமாதமாக வேலை செய்கிறீர்கள்” என்றால் அதன் அர்த்தம் “உங்கள் தலையில் மேலும் வேலையை கட்ட போகிறோம்“
3)”நாங்கள் அந்த வேலையைதான் செய்து கொண்டிருக்கிறோம்” என்றால் அதன் அர்த்தம் “இன்னும் அந்த வேலையை ஆரம்பிக்கவில்லை”
4)”நாளை முதல் வேலை அது தான்” என்றால் அதன் அர்த்தம் “நாளை அந்த வேலை முடியாது”
5)”பேசி ஒரு முடிவுக்கு வரலாம் நான் கருத்துக்களை வரவேற்பவன்” என்றால் அதன் அர்த்தம் “நான் ஏற்கனவே ஒரு முடிவிக்கு வந்துவிட்டேன் “
6)”நாங்கள் கொடுத்த தகவலில் சிறு தவறு உள்ளது” என்றால் அதன் அர்த்தம் “ அந்த தகவல் பொய்”
7)”கூட்டம் கூட்டி முடிவிற்கு வரலாம்” என்றால் அதன் அர்த்தம் “எனக்கு இப்போது நேரமில்லை, பிறகு பார்க்கலாம்”
8)”நம்மால் அதை செய்ய முடியும்” என்றால் அதன் அர்த்தம் “கண்டிப்பாக முடியாது”
9)”நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம், கொஞ்சம் கால அவகாசம் தேவை” என்றால் அதன் அர்த்தம் “எங்கேயோ சொதப்பல்”
10)”ஒரு சிறு கருத்து வேறுபாடு” என்றால் அதன் அர்த்தம் “பயங்கரமாக சண்டை போட்டோம்”
11)”என்னிடம் ஏன் முதலிலேயே சொல்லவில்லை” என்றால் அதன் அர்த்தம் “சொல்லியிருந்தாலும் ஒரு பெரிய வித்யாசமும் இருக்க போவதில்லை”
12)”நாம் உண்மையான காரணம் கண்டுபிடிக்க வேண்டும்” என்றால் அதன் அர்த்தம் “உன்னுடைய தவறு என்ன என்று நான் சொல்கிறேன்”
13)”குடும்பம் தான் முக்கியம், விடுமுறையில் செல்லலாம் ஆனால் வேலை பாதிக்காமல் பார்த்துக்கொள்” என்றால் அதன் அர்த்தம் “உங்களுக்கே தெரியும்”
14)”நாம் ஒரு குழ” என்றால் அதன் அர்த்தம் “என் மேல் பழி போடாதே”
15)”நல்ல கேள்வி” என்றால் அதன் அர்த்தம் “எனக்கு அதற்கு விடை தெரியாது”
16)”வாழ்த்துக்கள்,” என்றால் அதன் அர்த்தம் “ஏதோ பிரச்சனை காத்திருக்கிறது”

Tuesday, July 15, 2008

குசேலன்






குசேலன் படபிடிப்பு முடிந்து பூசணிக்காயும் உடைத்தாயிற்று, இசை வெளியீட்டு விழாவும் சென்னை லீமெரிடியனில் இனிதே நடந்தேரியது. “கதா பரையும்போள்” என்ற மாலையாள படத்தின் காப்பிதான் “குசேலன்” தெலுங்கில் “கதாதாநாயகுடு”. பி.வாசு சொந்தமாக கதை பண்ணி ரொம்ப காலமாயிற்று, எல்லாம் சுட்ட பழம் தான். சந்திரமுகியில் சொதப்பியிருப்பது போல் சொதப்பாமல் இருந்திருந்தால் சரி. கதா பரையும்போளில் மம்முட்டி பதினாறு நிமிடங்கள் வந்த கதாபாத்திரத்தில் ரஜினி ஒரு அரை படமாவது வருவார் என்று நினைக்கிறேன். கதை எனக்கு தெரிந்தவரை மகாபாரத கதைதான், வியாசருக்குதான் ராயல்டி கொடுக்க வேண்டும். குசேலனை மன்னிக்கவும் கதா பரையும்போளை இந்தியிலும் கன்னடத்திலும் தயாரிக்க போகிறார்கள். ரஜினியின் மன்னிக்கவும் மம்முட்டியின் கதாபாத்திரத்தை இந்தியில் ஷாருக்கானும் கன்னடத்தில் ரமேஷ் அரவிந்தும் செய்யப்போகிறார்கள். குருவான பாலசந்தருக்காக குரு தட்சணையாக (தட்சணை வாங்கிகொண்டுதான்) இந்த படத்தில் நடித்து கொடுத்திருக்கிறார் ரஜினி. பாலசந்தருக்கு கமலும் ரஜினியும் சிஷ்யர்கள் ஆயினும் குருவிற்கு தெரியும் யாரிடம் குரு தட்சணை கேட்டால் காசு பேறும் என்று. பாதி படம் வருகிற ரஜினிக்கு தான் விளம்பரங்கள். முழ படமும் வருகிற பசுபதிக்கு இருட்டடிப்பு அந்த கடுப்பில் இருப்பதாக தகவல்.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி இந்த படம் “ Box Office Hit”
உங்கள் பார்வைக்கு சில படங்கள் மேலே.

லாஜிக்



கருத்து சொல்ல வருகின்ற படத்தில் லாஜிக் இருக்க வேண்டும் என்று எதிர்பார்கின்றேன் நான். உதாரணமாக தசாவதாரத்தில் வைரஸ் பையோ வெப்பன் என்று ஏதோ கருத்து சொல்ல வருகிறார் கமல் இதில் லாஜிக் எதிர்பார்ப்பது தவறா. படம் முழவதும் கண்ணப்ப நாயனார் செய்தாது போல் நம் முகத்தில் காலை வைத்து கண்ணை மல்லிகை சரங்களால் சுற்றுகிறார். குரங்கின் கதவை மூட மறந்த பெண்ணில் ஆரம்பித்து பாட்டி கமல் எல்லார் முதுகிலும் ஏறி வைரஸ் குப்பியை பெருமாள் சிலையில் போடுவதிலிருந்து நாயுடு கமல் பைனாகுலரில் வைரஸை பார்ப்பது வரை படம் முழவதும் திரைகதையில் லாஜிக் சொதப்பல். எனக்கென்னமோ கமல் ஆரம்பத்தில் வேறு கதையை தேர்ந்தெடுத்து பிறகு தோல்விக்கு பயந்து வர்த்தக ரீதியில் வெற்றியடைய கதையை மாற்றியிருக்கலாம் என்று படுகிறது, காரணம் படம் ஆரம்பிப்பதற்குமுன் வந்த படங்களில் சாமியார் கமல், நீக்ரோ கமல் போன்ற சில கதாபாத்திரங்கள் விடுபட்டிருக்கிறது. கமலின் கருத்து படங்களான ஹேராம்,அன்பேசிவம், குருதி புனல் போன்ற படங்களின் திரைகதைகளில் லாஜிக் இருந்தது ஆனால் அது மிகவும் அறிவுபூர்வமாகி, பி மற்றும் சி சென்டர்களில் தோல்வியடைகிறது என்பது நிஜம். கமலின் தெனாலி, வசூல்ராஜா, பஞ்ச பாண்டவர், மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற சிரிப்பு படங்களுக்கு லாஜிக் தேவையில்லை ஏனெனில் லாஜிக் பார்த்தால் ஹாஸ்யம் தொலைந்துவிடும். அதே போல் கருத்து படங்களில் லாஜிக் இல்லை என்றால் சிரிப்பு படமாகிவிடும். குறிப்பாக நான் விரும்பும் கமல் கவனிப்பாரா.

Monday, July 14, 2008

சூனியம்


Witch Craft (Malignant Super Natural Power) என்றால் மாய மந்திரம் செய்வது சுருங்க சொன்னால் சூனியம் செய்வது. Witch என்றால் சூனியகாரி Wizard என்றால் சூனியகாரன். பல முறை ஹாரி போட்டர் பார்த்திருந்தாலும் ஒரு மருத்துவ இதழை(Medical Journal) படித்த பிற்பாடுதான் எனக்கு இது தெரியும். சூனியகாரி அல்லது சூனியகாரன் மனித உருவம் அல்லாது சிறுத்தை, வெளவால் போன்ற உருவம் எடுத்து மனித ரத்தத்தை குடித்து கொல்வார்கள் என்பது உலக ஐதீகம். Witch Hunting மக்கள் தங்கள் மற்றும் தங்கள் சமுதாயத்தை காப்பதன் பொருட்டு இந்த சூனிய காரர்களை வேட்டையாடுவதேயாகும். இது இன்றும் இந்த ஊரில் உள்ளதாக கூறுகிறார்கள். நான் படித்த கட்டுரை Medico Legal Perspective of Witch Hunting என்ற தலைப்பில் வந்திருக்கிறது. இதில் இரண்டு Case Report க்கள் எழதியிருந்தார்கள்.ஒன்றில் சூனியவேட்டை என்ற பெயரில் 27 பேரையும் மற்றொன்றில் 8 பெயரையும் போட்டுதள்ளியிருக்கிறார்கள். இந்த அறிவற்ற செயலை கட்டுரையை எழதிய மனோதத்துவ நிபுணர் கண்டிக்கிறார். உலகெங்கிலும் இது போன்ற அக்கிரமங்கள் நடக்கலாம். எப்படியோ நமக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால் போட்டு தள்ளிவிட்டு சூனியகாரன் என்று முத்திரை குத்திவிட்டால் ஆயிற்று. நம்மை யாரும் சூனியகாரன் என்று போட்டு தள்ளாமல் இருந்தால் சரிதான்.

வைரஸ்



லத்தின் மொழியில் வைரஸ் என்றால் “விஷம்” என்று அர்த்தம். வைரஸ் ஒரு நுண்ணுயிர். வைரஸ் பாக்டீரியாவிற்கே நுண்ணுயிர்தான். பாக்டீரியாவை மைக்ரோஸ்கோப் மூலம் பார்க்கமுடியும் ஆனால் வைரஸை பார்க்க எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் வேண்டும்(கமல் மட்டும் தசாவதாரத்தில் பைனாகுலரிலேயே பார்ப்பார், என்ன கொடுமை சார் இது). வைரஸ் பாக்டீரியாவையும் தாக்குமாம். வைரஸ் தாக்கிய பாக்டீரியாவிற்க்கு ‘பாக்டீரியோஃபேஜ்’ என்று பெயராம். வைரஸ் உயிரினமே அல்ல என்று ஒரு சாரார் கூறுகின்றனர் ஏனெனில் வைரஸ்களுக்கு செல் அமைப்புகள் கிடையாது. ஆனால் வைரஸுக்கு ஜீன்கள் உண்டு. “ஆன்டிபயாடிக்ஸால்” வைரஸை ஒன்றும் செய்யமுடியாது நமது உடம்பின் எதிர்ப்பு சக்திதான் வைரஸுடன் போராடி வெளியேற்றுகிறது. வைரஸில் DNA வைரஸ்,RNA வைரஸ் என்று வகைகள் உண்டு. DNA வைரஸை விட RNA வைரஸ் கொஞ்சம் பயங்கரமானது. DNA வைரஸ் சளி(Flu), அக்கி(Herpes) , சின்னம்மை(Chickenpox) போன்ற நோய்களை ஏற்படுத்தி தடயங்களை விட்டு செல்லும். ஆனால் RNA வைரஸால் Aids, Hepatitis-B என்ற மஞ்சள்காமாலை, Avian Flu போன்ற பயங்கர நோய்க்ள் தாக்கும்.
சரி கம்யூட்டர் வைரஸ் என்பது நுண்ணுயிர் அல்ல. சில சில்மிஷிகள் ஜாலிக்காக சில ப்ரொக்ராம்கள் எழதி பரப்பி விடுகின்றார்காள். இதனால் டேட்டா லாஸ் களால் ஏற்படும் நஷ்டம் மட்டும் ஆண்டொன்றிற்கு 500பில்லியன் டாலருக்கு மேல் என்று கூறுகிறார்கள்.
Anti Virusகள்(Macafee, Norton, Panda போன்றவை) சந்தையில் எராளமாக கிடைக்கிறது. நம் கம்யூட்டரில் ஊடுருவும் கண்டரிந்து அழிக்கும். எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு, Anti Virus நிறுவனங்களே வைரஸ்களை தயாரித்து அனுப்பி அதை அழிப்பது போல் அழிப்பார்களோ என்று, ஏனெனில் அவர்களும் பிழைக்க வேண்டுமே.
நானும் கூட SSIயில் கம்யூட்டர் படிக்கும் போது ஒரு வைரஸ் எழதினேன். C++ல் Mainக்குள் Mainயை அழைத்தால் Loopல் மெமரியை ஏகமாக ஆக்ரமித்து Networkயை திணரச்செய்யும் என்று யோசனை சொன்னான் என் நண்பன். பல முறை செய்து பார்த்தும் Networkகிற்கு ஒன்றுமாகவில்லை. ஒரு வேளை Anti Virus போட்டிருப்பார்களோ.

Saturday, July 12, 2008

ரஜினியை பற்றி சில உண்மைகள்


உங்களுக்கு ரஜினியை பற்றி தெரிய வேண்டுமா, இதோ சில உண்மைகள்.
1)ரஜினி வெங்காயத்தை அழ வைப்பார்.
2)ரஜினியால் நம் கம்யூட்டரில் உள்ள குப்பை 3)தொட்டியையே(Recycle Bin) அழிக்க முடியும்.
4)ரஜினி மழையால் பனி மனிதன் செய்வார்.
5)ரஜினியால் மீனை மூழ்கடிக்க முடியும்.
6)ரஜினி ஒரு அறைக்குள் நுழைந்தால் அவர் விளக்கை போடவில்லை, இருட்டை அகற்றுகிறார்.
7)ரஜினி கண்ணாடியை பார்த்தால் கண்ணாடி சுக்கல் சுக்கலாக உடையும், கண்ணாடியும் ஒன்றும் முட்டாளில்லை ரஜினிக்கும் ரஜினிக்கும் இடையில் வருவதற்கு.
8)பிரெட் ஃபவ்ரெ என்பவர் கால்பந்தை 50 கஜம் எறிந்து சாதனை புரிந்தார். ரஜினி பிரெட் ஃபவ்ரெவை 50 கஜதிற்கு மேலும் எறிவார்.
9)பை(Pi) யின் கடைசி எண் ரஜினி .அவர்தான் எல்லாவற்றிற்கும் முடிவு.
10)ரஜினியால் ஒரே நேரத்தில் 1,854 வேலைகள் செய்ய முடியும்.
11)ரஜினியின் நாட்காட்டியில் மார்ச்31 க்கு அடுத்து ஏப்ரல் 2, ரஜினியை யாரும் முட்டாளாக்க முடியாது நாட்காட்டி உட்பட.
12)கூகிளில் ரஜினியின் பெயரை தப்பாக டைப் செய்தால், நீங்கள் ரஜினியையா குறிப்பிடுகிறீர்கள்? சந்தர்பம் இருக்கும் போதே ஓடிவிடுங்கள் என்று பதில் வரும்.
13)ரஜினியால் ஒற்றை சக்கரம் உள்ள ஒரு சைக்கிளில் வீலிங் செய்ய முடியும்.
14)ஒரு முறை ரஜினியின் காலில் நாக பாம்பு கொத்தியது 5 நாட்களுக்கு பிறகு தாளமுடியாத வலியால், பாம்பு இறந்தது.
15)ரஜினியால் ஒரே பறவையால் இரண்டு கல்லை கொல்ல முடியும்.
16)டி.வியில் ஒரு முறை அதிர்ஷ்ட சக்கரம் சுற்றும் நிகழ்சியில் சக்கரம் சுற்றினார் ரஜினி. நிகழ்ச்சி முடியும் வரை சக்கரம் நிற்கவில்லை.
17)பிரபல பூச்சி கொல்லி நிறுவனம் கூட 99.9% தான் கொல்லும் என்று கூறுவார்கள். ஆனால் ரஜினியால் 100% எதையும் கொல்ல முடியும்.
18)ரஜினி Cordless phoneஆல் கழத்தை நெறித்து கொல்ல முடியும்.
ஆவிகள் ரஜினியால் உருவானவையே, ஏனெனில் மரணத்தை விட ரஜினி வேகமாய் கொல்வதால்.
19)ரஜினி நினைத்திருந்தால் இந்தியாவில் என்ன உலகத்தில் உள்ள நதிகளையும் ஒன்று சேர்ப்பார், என்ன இன்னும் நினைக்கவில்லை.
20)ரஜினியின் 20 நிமிடம் நமக்கு 60 நிமிடம்.
21)ரஜினி ஒருமுறை வானத்தை நோக்கி விரல்களால் சுட்டார். இரண்டு விமானங்கள் கீழே விழந்து உடைந்தது.
22)ஒவ்வொரு சாதனையாளருக்கு பின்னால் ஒரு பெண் இருப்பது போல் ஒவ்வொரு இறந்த மனிதனுக்கு பின்னாலும் இருப்பது ரஜினி.
23)ரஜினி கார் ஓட்டும் உரிமம் வங்கியபோது அவரது வயது 16 விநாடி.
24)யாராவது “ இந்த உலகத்தில் யாரும் ஒழங்கானவர்கள் இல்லை” என்று கூறினால் ரஜினி தன்னை இழிவுபடுத்துவதாக எடுத்துக்கொள்வார்.
25)ரஜினி மனித உயிர்களை மதிப்பவர், யாரும் அவரை குறுக்கிடாதவரை.

காபி


காபி எனக்கு ரொம்ப பிடிக்கும். என் சிறு வயதிலிருந்தே இந்த காபி குடிக்கும் பழக்கம் என்னை தொற்றிகொண்டது. முன்பு சென்னையில் இந்தியா காபி போர்டு என்று பி.ஆர்.அர் சன்ஸ் பக்கத்தில் இருந்தது. அதிலிருந்து காபி கொட்டை உருட்டை(A), தட்டை(B) இரண்டையும் ஏதோ ஒரு விகிதாசாரத்தில் அரைத்து கலந்து காபி போட்டுகொண்டிருந்தார்கள். மணம், சுவை அற்புதமாக இருக்கும். இப்போது ஏதோ காடையிலிருந்து பொடி வாங்கி காபி போடுகிறார்கள் (விளக்கெண்ணை போல இருக்கிறது). மேலும் காபி பொடியுடன் சிக்கிரி என்று ஒரு வேர் சேர்த்து(தங்கத்துடன் செம்பை சேர்ப்பது போல) காபியின் சுவையையே மாற்றி விட்டார்கள். பீருக்கு கசப்பு சுவை கிடையாது அதற்கு செயற்கையாக Hopkins என்ற ஒருவிதையை அரைத்து சேர்ப்பார்களாம்(ராஜ் சார் சரிதானே). ஆனால் காபிக்கென்று இயற்கையிலேயே ஒரு அலாதியான கசப்பு சுவை உண்டு. நவீன யுகத்தில் பல்வேறு வகையான காபிகள் வந்துவிட்டன. Espresso, Espresso Lungo, Espresso Americano, Latte, Cappuccino, Macchiato ,Ristretto, Doppio, Espresso Corretto ,Espresso con Panna ,Flat white, Mocha, Cafe Freddo என்று சில வகைகள். இவை. ஒவ்வொரு வகைக்கும் ரெசிப்பிக்கள் உள்ளன. இந்த வகை காபிகளுக்கு 10ரூ இருந்து 300ரூ வரை வசூலிக்கிறார்கள்.
என்ன இருந்து என்ன நான் இருக்கும் ஊரில் காபி கொட்டையும் கிடையாது, பாலும் கிடையாது(ஏன் பசுவே கிடையாது அடித்து தின்றுவிடுவார்கள்).இங்கு எல்லாம் திடீர் காபிபொடியும்(Instant Coffee powder), பால் பொடியும் தான் அதைக் குடித்துவிட்டு “பேஷ் பேஷ் காபி ரொம்ப நன்னாயிருக்கு “ என்று சொல்ல வேண்டியதுதான்.

Thursday, July 10, 2008

ரெப்

நான் ஒரு ரெப் அப்படின்னா பிரதிநிதி சாதரண பிரதிநிதி இல்லை மருத்துவ பிரதிநிதி. ரெப்புக்களின் அடையாளம் கையில பை, கழுத்துல டை, வாயில பொய். எங்களை கண்டால் பேஷண்ட்ஸ் எல்லரும் அலறுவாங்க (வந்துட்டன்யா பைய தூக்கிகிட்டு).
கல்லூரி முடித்து இரெண்டு மாதம் ஒரு ஃபிரிலான்ஸருக்கு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்,பிறகு எட்டு மாதம் மேக்ஸ்வொர்த் என்னும் நவீன காய்கறிகடையில் காய்கறி விற்றேன் பிறகு பென்சில் விற்றேன் எல்லாம் முடிந்தபின் கெடில்லா ஃபார்மாவில் மருத்துவ பிரதிநிதியாக சேர்ந்து இன்று வரை அப்படிதான் இருக்கிறேன். கெடில்லா ஃபார்மாவில் ஒரு பிரிவிற்க்கு லெசாந்தே(Le sante’ ஃபெரிஞ்ச் பெயர் நல்ல ஆரோக்யம் என்று அர்த்தமாம்) என்று பெயர் அதில் சரியாக முட்டாள்கள் தினத்தன்று (Apr1) அறிவாளியாக சேர்ந்தேன். சேர்ந்தவுடன் அகமதாபாத்தில் 15 நாட்கள் பயிற்சி. அது ஒரு நரகம். முதன் முதலாக உடற்கூறு(Anotomy), உறுப்புக்களின் வேலை(Physiology), நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மருந்துக்களின் உபயோகம், மருந்து உடம்புக்கு என்ன செய்யும்(Pharmacokinetics), உடம்பு மருந்துக்கு என்ன செய்யும்(Pharmacodynamics) என்று ராப்பகலாக மண்டைக்குள் திணித்தார்கள். இதுதவிர மருத்துவர்களிடம் அட்டையை எப்படி உபயோகிப்பது என்று சொல்லி முடித்தார்கள். இதில் முக்கியான விஷயம் என்னவென்றால் சொந்த புத்தியெல்லாம் இங்கு உபயோகிக்க கூடாது. அவர்கள் காகிதத்தில் அச்சுஅடித்து கொடுப்பதை வரி பிசகாமல் அப்படியே பேச வேண்டும்(Verbatim). எல்லாம் கற்றுக் கொண்டு(!) சென்னை வந்து சேர்ந்தேன். சென்னை என்னை போட வெண்ணை என்றது.
சென்னையில் என் பிரிவிற்கு நான் தான் முதல் ரெப் பிறகு அடுத்தடுத்து எட்டு பேர் வந்து சேர்ந்தார்கள். இதில் ஒரு பெண்ணும் அடக்கம். நிறுவனம் முதன்முறையாக எங்கள் பிரிவை அறிமுகம்(launch) செய்வதால் மேலிடத்தில் ஒரு மட்டமான ஒரு திட்டம் போட்டார்கள்(Intelligent Strategy) அதன்படி மருத்துவர்களிடம் சென்று தேங்காய் உடைக்க செய்ய வேண்டும்.
தினமும் காலை கடைக்கு சென்று தேங்காய் வாங்கி வந்து வீட்டில் அம்மா, அப்பா தங்கை உதவியால் தேங்காயின் கண்ணை நோண்டி தண்ணீரை வெளியேற்றி உள்ளுக்குள் ஒரு காகிதம்(We Seek Your Support For The New Division, Lesante) சொருகி, மீண்டும் தேங்காயின் கண்ணை நார்களால் மூடி, கண் கட்டு வித்தை செய்ய வேண்டும்.இது ஒரு வாரம் நன்றாக சென்றது. என் பொது மேலாளர் சென்னையை சுற்றி பார்க்க வந்துவிட்டு 2 மருத்துவரை காண வேண்டி சென்றோம் தேங்காயுடன். எல்லம் பேசி முடித்து தேங்காய் படலம் வந்தது. மருத்துவர் தேங்காய் உடைக்க மறுத்தார். அவரை இம்சித்த GM தேங்காய் உடைத்தால் தான் ஆயிற்று என்று ஒரே பிடிவாதம். மருத்துவரும் தேங்காய் உடைத்தார். அவருடைய மேஜையெல்லம் ஒரே இளநீர்.
இப்படியே ஒரு வருடம் ஒடியது. ரெப் வேலையின் நெளிவு சுளிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்தது.ஒரே மருத்துவரை எத்தனை முறை பார்ப்பது ஆதலால் மணியடிக்க ஆரம்பித்த காலம். மணியடிப்பது என்றால் ஒரு கதை. மேல்லோகத்தில் சிவனும் பார்வதியும் பேசிக்கொண்டிருந்தார்களாம் எந்த துறையை சார்ந்தவர்கள் ஒரு நாளில் அதிகம் பொய் சொல்கிறார்கள் என்று. மருத்துவர்களா,வக்கீல்களா, ரெப்புக்களா… என்று. அவர்கள் தீர்மானித்து பொய் சொன்னால் மணியடிப்பது போன்று ஏற்பாடு செய்தார்கள். மருத்துவர்கள் மணி விட்டு விட்டு அடித்தது ,வக்கீல்கள் மணி அவர்கள் வாதாடும் போது அடித்தது ஆனால் ரெப்புக்கள் மணி மட்டும் அடிக்கவில்லை, கடவுள்களுக்கு ஒரே ஆச்சரியம் ரெப்புக்கள் நல்லவர்கள் என்று முடிவு கட்டும் போது இரவு பத்து மணிக்கு ரெப்புக்களின் மணி ஓங்கி ஒங்கி ஒலித்ததாம் பார்த்தல் அவர்கள் Daily Report எழதிக்கொண்டிருந்தார்கள். இதுதான் மணியடிப்பதின் கதை.
என் கல்லூரி நண்பர்களைவிட அப்போது நான் தான் அதிகம் சம்பாதித்துக்கொண்டிருந்தேன். அவர்கள் கணினியில் ஏதோ செய்துக்கொண்டு சொற்ப்பமாக சம்பாதித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அள்ளி அள்ளி செலவு செய்வேன் பந்தாவிற்காக. ஐந்து வருடம் கழித்து பார்க்கிறேன் நான் அதே ரெப்பாக தான் இருந்தேன் அவர்கள் அனைவரும் அமெரிக்க, லண்டன், துபாய் என்று கல்யாணமாகி ஐக்கியமாகிவிட்டாற்கள்.
திருவல்லிக்கேணி, மாம்பலம் ஏரியாக்களில் தன் ரெப்புக்கள் அதிகம் ஏனென்றால் அங்குதான் மேன்ஷன்கள் அதிகம். தினமும் 5 கால்கள் பார்த்துவிட்டு மீதி கால்களுக்கு மணியடித்துவிட்டு சக ரெப் ஊழிய மேன்ஷன்களில் ஒரே ஆட்டம் தான்.
என் வீட்டிற்கு கீழேயே ஒரு ரெப் குடிவந்தான் அவன் எப்போதும் ஒன்று குறிப்பிடுவான் “ரெப் பாடைகளுக்கு கல்யாணமே ஆகாது மாமே..”. இது உண்மைதான் எத்தனையோ ரெப்புக்களை பார்த்திருக்கிறேன் கல்யாணம் தடைப்பட்டு முதிர்கன்னர்களாக ஆனபின் தான் கல்யாணம் நடந்திருக்கிறது. சீக்கிரம் நடந்திருந்தால் அது உறவுக்கரப் பெண்ணாயிருக்கும். தெய்வாதீனமாக என் மாமனார் வீடு குக்கிராமத்தில் இருந்ததால் அப்பாவியான ஒரு பெண்ணிற்க்கு ரெப்பான என்னை கட்டிவைத்தார்கள்.
கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்பது போல் ரெப்பாக வேலைக்கு சேர்ந்தவன் ரெப்பாக தான் ஓய்வு பெறுவான். எனக்கு ரெப்பாகவே ஓய்வு பெற்ற பல தாத்தாக்களை தெரியும்(இவர்கள் யூனியன் தாதாக்கள் எப்போ இவர்களை பார்த்தாலும் Supscription கட்டியாச்சா என்று கேட்ப்பார்கள்).
எப்படியோ சாதா ரெப்பிலிருந்து பதவி உயர்வு பெற்று பெற்று வேறு கம்பெனிகள் மாறி இப்போது நைஜீரியாவில் சூப்பர் ரெப்பாக மன்னிக்கவும் Sales and Marketing Controller ஆக ஒரு தனித்துவமான மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
ரெப்ஸ் வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடவில்லை இன்னுமும் நிறைய இருக்கிறது நேரம் கிடைக்கும் போது மேலே சொல்கிறேன் .
வாழ்க ரெப்ஸ்…

நவீன ஓவியங்கள்



என் நண்பன் சுரேஷ் சென்னை ஓவியக்கல்லூரியில் படித்தான். அது முடித்தப்பின் சோழமண்டலம் எனப்படும் மகாபலிபுரத்தில் உள்ள பயிற்சிக்கூடத்தில் சேர்ந்து கோணல்மாணாலாக சிற்ப்பங்கள் மற்றும் புரியாத ஓவியம் வரைவது என்று பயிற்சி பெற்றான். இப்போது அமெரிக்காவில் அனிமேஷன் செய்து கொண்டிருக்கிறான். எனக்கு என்றுமே நவீன ஓவியங்கள் புரிவதில்லை. நவீன ஓவியங்களை வீட்டு வரவேற்ப்பரையில் மாட்டி வைத்து அழகு பார்க்கிறார்கள். மாட்டி வைத்திருக்கும் சொந்தக்காரருக்கு அந்த ஓவியங்களின் அர்த்தங்கள் விளங்குவதில்லை. நானும் இரண்டு நவீன ஓவியங்களை என் வரவேற்ப்பரையில் மாட்டி வைத்திருக்கிரேன் பந்தாவிற்க்காக. நவீன ஓவியங்கள் புரியவில்லை என்றாலும் ரசிக்கலாம்.
நவீன ஓவியத்தை ரசிக்க சில தகுதிகள் வேண்டும். முதலில், இதற்கு என்ன அர்த்தம் என்று சித்திரக்காரரிடம் கேட்கக் கூடாது.
நவீன ஓவியத்தை புதுக்கவிதைக்கு ஒப்பிடலாம். படித்துப் பார்க்கிறோம். பிடித்திருந்தால் நல்ல கவிதை என்கிறோம். பிடிக்கவில்லை என்றால், அந்தக் கவிதை நமக்குள் சிறகடிப்பை ஏற்படுத்தவில்லை என்றுதான் அர்த்தம். இதுபோல்தன் நவீன ஓவியமும்.
இதை ரசிக்க உங்களுக்கு ஒரு கலை விமர்சகரின் உதவி தேவையில்லை. அவரிடம் சென்றால், the linear rhythm of his line juxtapose with the organizational schema of variantly rich polychrome shades and strokes are of orchestration of colors are markedly original என்பார் தேவையா நமக்கு.
மேலே உள்ள நவீன ஓவியத்தின் பெயர் திரொளபதி. ஏதாவது விளங்குதா. மற்ற ஒரு ஓவியத்திற்க்கு என்ன பெயர் என்று யாராவது சொல்ல வேண்டுமா என்ன.
ஒரு முறை பிகாசோ கட்டம் கட்டமாக நவீன ஓவியம் வரைந்திருந்தாராம், அதை பார்க்க வந்த நண்பர் ஒருவர் அதில் கட்டடங்கள், சிங்கம், பறவை, மனிதமுகம் மற்றும் ஏதேதோ தெரிவதாக சொன்னாராம். அதற்க்கு பிக்காசோ சொன்னது “அதெல்லாமா தெரியுது இதுல”….

Wednesday, July 9, 2008

விஷ்ணுவின் தசாவதாரம்




விஷ்ணுவின் தசாவதாரம் டார்வின் தியரியோடு உரசிக் கொண்டு செல்வதாக படுகிறது. டார்வின் முதன் முதலில் உயிரினங்கள் தண்ணிரில் தோன்றி படிப்படியாக பரிணாம வளர்ச்சியடைததாக கூறுகிறார். விஷ்ணுவின் தசாவதாரத்தை எடுத்துக் கொண்டால்


1)மச்சம்- மீன் (தண்ணீரில் மட்டுமே வாழம்)
2)கூர்மம்- ஆமை(நீரிலும் நிலத்திலும் வாழம் உயிரினம்)
3)வராகம்- பன்றி(நிலத்தில் சேற்றில் வாழம் உயிரினம்)
4)நரசிம்மம்-நரன்+சிம்மம்( மனிதனும் அல்லாமல் மிருகமுமில்லாத நிலை)
5)வாமனம்-குள்ள மனிதன்(மிருகத்திலிருந்து வெளியே வந்த மனிதன்)
6)பரசுராம்- வேட்டையாடும் மனிதன்(Survival of the Fittest வேட்டையடி இனத்தை காத்தல்)
7)ராமர்- முழ மனிதன்( உதாரண புருஷன். இந்த அவதரத்திலும் குரங்கு மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் பரிணாம வளர்ச்சி முழமையடையவில்லை)
8)பலராமர்- விவசாயி
9)கிருஷ்ணர்- கள்ள மனிதன்(கள்ளம் குடி புகுந்து தவறு செய்யும் மனிதன்)
10)கல்கி-X Men(பரிணாம வளர்ச்சி மனிதனுக்கு மேலும் இன்னும் செல்லலாம் யார் கண்டது)
சரி இந்த அவதாரங்களை நம்புவதர்க்கு சில அடிப்படை ஆதாரம் சில இருக்கின்றன.
Ø மச்ச புராணத்தில் மச்சமாக அவதரித்த மகாவிஷ்னு ஊழியை(உலகொங்கும் சுனாமி என்று வைத்துக் கொள்வோம்) உருவாக்கி ஒரு முனிவரை (பெயர் தெரியவில்லை) கப்பல் தயாரிக்க செய்து அதில் தேவையான ஜீவராசிகளை ஏற்றி காப்பாற்ற செய்தார். இது பைபிள்ளில் வரும் நோவாஸ் ஆர்க்குக்குடன் ஒத்து போகிறது.
Ø தினமணியில் நான் பாடித்த செய்தி ஒன்று.”புராணங்கள் குறிப்பிடும் பாதாள லோகம் மெக்ஸிகோ!!” . வமனனாக வந்த பகவான் கேரளத்தின் நேர் பின்னால் இருக்கும் மெக்ஸிகோவிற்கு அனுப்பி விட்டார். கேரளத்தில் கொண்டாடப்படும் திருவோணத்தின் கதாநயகன் மகாபலி. மெக்ஸிகோ நாட்டிலும் மகாபலி உள்ளது.இந்தக்கதை அங்கே ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. மிகவும் தூரமான நாட்டில் இருந்து வந்த மன்னன் ஒருவன் அங்கே பனாமா கடற்கரையில் இறங்கினான் என்று அங்கே கதை ஒன்று வழக்கில் உள்ளது. அவன்தான் மகாபலி. அவனைத் தொடர்ந்து அங்கே சென்ற மயன் தனது கைவண்னத்தை காட்டியதன் பயனாகவே மெக்சிகோவில் கோயில்களும் பிரமிடுகளும் உருவாயின என்பது கள ஆய்வில் தெரியவந்தது. அதுதான் இன்றும் மயன் [மாயன்] நாகரீகமாக அங்கே பறைசாற்றி நிற்கிறது. மெக்ஸிகோநாடு ஸ்பெயின் நாட்டவரின் ஆதிக்கத்துக்கு வந்தபிறகு மயன் உருவாக்கிய கலைச்செல்வங்கள் அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ளன.
Ø மெக்ஸிகோநாட்டில் உள்ள மலைகளும் பள்ளத்தாக்குகளும் செடிகொடிகளும் மிருகங்களும் பறவைகளும் மக்களின் உடல் அமைப்புகளும் பயன்படுத்தும் பொருட்களும் எல்லாம் தற்போதைய கேரளநாட்டையே நினைவுறுத்துகின்றன. இதன் மூலம் மகாபலி மற்றும் மயன் ஆகியோர் முன்பு வாழ்ந்த நாடு கேரளம் என்றும் அங்கிருந்து அவர்கள் மெக்ஸிகோ சென்றதனால்தான் இருநாடுகளுக்கும் இடையே ஒற்றுமை காணப்படுகிறது என்றும் அறியமுடிகிறது.
Ø மெக்ஸிகோ நாட்டில் உள்ள நான்கு பக்கமும் படிகள் கொண்ட பிரமிடுகள் சூரியனுக்காக எழுப்ப பட்டவை. இந்தப்பிரமிடுகள் பற்றிய இலக்கணம் மயன் எழுதிய பன்னிருசாரம் என்ற நூலில் இடம்பெற்றுள்ளன. இந்த பிரமிடுகள் கேரள மாநிலத்தில் கண்ணனூர் கோழிக்கோடு மாவட்டங்களிலும் தமிழ்நாட்டில் கன்யாகுமரி தூத்துக்குடி மாவட்டங்களிலும் காணப்படுகின்ரன. இவற்றை காலசுவாமி என்று வணங்குகிறார்கள்.
Ø மேலும் மெக்சிகோ நாட்டில் தமிழர்கள் பயன்படுத்தும் அம்மி -குழவியை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் மண்பாண்டங்களையும் பயன்படுத்துவது கள ஆய்வில் தெரியவந்தது.அங்குள்ளவர்கள் நாகத்தை தெய்வமாக வழிபட்டதை அருங்காட்சியகத்தில் நடத்திய கள ஆய்வுகள் தெளிவுபடுத்தின. ஆகவே மெக்ஸிகன் நாட்டு மாயன் நாகரீகம் தமிழ்நாட்டு மயன் நாகரீகமே என்று கள ஆய்வில் நிரூபணமாகியுள்ளது
Ø ராமாவதார சுவடுகள் இந்தியா முழுதும் ஆங்காங்கே இருப்பதாக சரித்திர மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். மேலும் சேது அனையை நான் நம்புகிறேன்.
Ø கிருஷ்ணாவதாரத்தில் நடந்த மகாபாரத யுத்தகளம், குருஷேத்திரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது. ஆயுத பிரயோகங்களால் இன்றும் அங்கு Geiger Counterயை (கதிர் வீச்சை கண்டறியும் கருவி) கொண்டு சென்றால் இன்றும் அலறுமாம்.
Ø பரீஷீத் வம்சத்தில் வந்த பகீரதன் தன் முயற்சியால், கபிலரின் சாபத்தால் சாம்பலாய் போன தன் மூதாதயர்களை மீட்க்க கங்கையை பாதாளலோகத்திற்கு கொண்டு சென்ற கபிலரின் ஆரண்யம் தான் இன்று காலிஃபோர்னியா. இன்றும் Ash Island ,Horse Island(அசுவமேத யாகத்தினால் தானே குதிரை கபிலரின் ஆரண்யம் சென்றது) இருப்பதாக கூறுகிறார்கள்.

கல்கி அவதாரம் எப்போது என்று தெரியவில்லை, நாமும் இன்னும் கொஞ்சம் பரிணாம வளர்சியடைந்து பார்ப்போம்.

Tuesday, July 8, 2008

தசாவதாரம்

நான் கமலின் தீவிர ரசிகன். கமலின் புதிய முயற்சிகளுக்கு
என் ஆதரவு எப்போதும் உண்டு. ஆனால் கமல்
தசாவதாரத்தில் பயங்கரமாக சொதப்பிவிட்டார். "தசா"
அவதாரத்தில் கமலின் தேவையற்ற ஐந்து அவதாரம். Sliding
Door என்ற ஆங்கிலப்படத்தின் நகலை 12Bயில் ஜீவா எடுத்த
படத்தின் அடிப்படை "கேயாஸ் தியரி". 12ம் நூற்றாண்டில்
கடலில் போட்ட ரங்கநாதரால் 25 டிசம்பர் 2004ல் வந்த சுனாமி
கேயாஸ் தியரியின் அடிப்படை என்றாலும் திரைக்கதையில்
அதன் சாயல் கூட தெரியவில்லை. கமலின் பத்து
வேடங்களில் பிளச்சர், பாட்டி, கலிப்புல்லா,ஜப்பானியர் ம்ற்றும்
புஷ் ஆகிய கதாபாத்திரத்தின் ஒப்பனைகள் Maskல் வரும் ஜிம்
கேரியை போல் அசிங்கமாக இருந்தது. மற்ற கமல்கள்
தேவலாம். ஒப்பனையின் அளவின் மிகுதியால் கமலின் Facial
Expressions கொஞ்சம் கூட இல்லாமல் செத்த பிணம் போல
வந்து சென்றிருக்கிறார். என்னால் ஜீரணிக்க முடியாத விஷயம் பெருமாள் சிலையை தூக்கிப்போட்டு பந்தாடியது.
பாடல்களும் கை கொடுக்கவில்லை கமலுக்கு என்ன ஈகோவோ நம்ம ஊருல இல்லாத இசையமைப்பாளரா , ஹிமேஷை போட்டிருக்கிறர். அவர் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவிற்க்கு கூட வரவில்லை.
ஜாக்கிசான் பாவம் படத்தை பார்த்துவிட்டு வேற வழியில்லாமல்
பாடாவதி படத்தை சூப்பர் ன்னு சொல்லியிருப்பாரோ. இனிமே
மல்லிகா ஷெராவத்தை கண்டால் ஓடி ஒளிஞ்சிப்பார். பாவம்
மல்லிகா ஷெராவத் தசாவதாரத்தால் ஹாலிவுட்
வாய்ப்புக்களை இழக்கிறார். "Oscar" என்பது "Ascar"
ஆனதுபோல் "தசாவதாரம்" "புஸ்ஸாவதாரம்" ஆனது பரிதாபம்.
கடவுள்னு ஒருத்தர் இருந்தே ஆகணும் ரவிசந்தரனை காப்பாத்திட்டார். ஹேராம், குருதிபுனல் கொடுத்த கமலா இது. இந்த கிறுக்கல் மூலம் நைஜீரியாவிலிருந்து ஒரு தும்மல் தும்மிவிட்டேன் அது ஆழ்வார்பேட்டையில் ஒரு இடி இடிக்கட்டும். அதுதானே
பட்டர்பிளை எஃபக்ட். "தசாவதாரம்" "ரசவாதம்".

நைஜீரியா

நான் நைஜீரியாவில் இப்போது வசிக்கிறேன். நைஜீரியாவை பத்து முறைக்கு மேல் சுற்றிவிட்டேன் என்ற உரிமையில் இதை எழதுகிறேன்.நைஜீரியா உலகின் கச்சா எண்ணை உற்ப்பத்தியில் நான்காம் இடம். OPEC எனப்படும் எண்ணை உற்ப்பத்தி செய்யும் நாடுகளின் உறுப்பினர். இந்த எண்ணை வளத்தை முறையாக உபயோகபடுத்தியிருந்தால் நைஜீரியா முன்னேறிய நாடுகளின் வரிசையில் இருந்திருக்கும். ஆங்கிலேய காலனி ஆதிக்த்திலிருந்து விடுதலை அடைந்தபின் பல்வேறு ராணுவ ஆட்சியாளர்களால் சிதைந்து சின்னாபின்னமாயிருக்கிறது. இப்போது ஜனநாயக ஆட்சி நிலவுகிறது அது நீடித்தால் வளமாக வாய்ப்பு இருக்கிறது.
கச்சா எண்ணை உற்ப்பத்தி செய்தாலும் எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள் இல்லாததால் கச்சா எண்ணையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு மீண்டும் பெட்ரோலிய பொருட்களாக இறக்குமதி செய்வதால் தானிக்கு தீனி சரியாகிறது. எண்ணை சுத்திகரிப்பு ஆலை ஒன்றை இப்போது கட்டி வருகிறார்கள் பார்ப்போம் .இங்கு பெட்ரோலின் விலை நம் ஊர் மதிப்புபடி 23ரூ.
corruptionஇல் உலக வரிசையில் 3வது இடம் பிடிக்கிறது. லஞ்சம் வாங்குவது இங்கு சட்டபூர்வம். எந்தவித கூச்சமுமின்றி வாங்குகிறார்கள்.
வாழ்வதற்கான விலை(cost of Living) இந்தியாவைவிட மூன்று மடங்கு அதிகம். ஆனால் வாழ்கைதரம் இந்தியாவைவிட அதிகம். கார்கள் அதிகம் புழங்குகிறது. இங்கு வேலைகாரியிலிருந்து குப்பைகாரன் வரை அனைவரும் ஆங்கிலம் பேசுவார்கள்.
இங்கு கல்விதரம் என்னை பொறுத்தவரை இந்தியாவை விட தரம் என்றே சொல்வேன். மேலைநாடுகளில் இந்த கல்வியின் Accredition இந்தியாவை விட அதிகம். உதாரணம் இங்கு டாக்டர் பட்டம் பெற்ற ஒருவர் இங்கிலாந்தோ அமெரிக்காவோ சென்றால் அங்கு அப்படியே எடுத்துகொள்கிறார்கள். ஆனால் இந்தியாவில் டாக்டர் பட்டம் பெற்ற ஒருவர் இங்கிலாந்து சென்றால் அங்கு ஒரு தேர்வு எழதிதான் டக்டர் ஆக முடியும்.
இங்கு கச்சா எண்ணை உள்ள நைஜர் டெல்டா ஒரு காஷ்மீர். எண்ணை எடுக்கும் அயல் நாட்டு நிறுவனங்கள் (Shell,Mobil,Chevron,conoil...) எண்ணை எடுத்து தங்கள் நாட்டை செம்மை செய்கிறார்களே தவிர தங்கள் மாநிலங்களுக்கு ஒரு மண்ணும் செய்வதில்லை என்ற கோபத்தின் வெளிப்பாடே இங்கிருக்கும் தீவிரவாதம். இந்த தீவிரவாதத்தின் முக்கிய அங்கம் வெளிநாட்டவரை கடத்தி பணய தொகை பெறுவது. உலகில் தீவிரவாதம் அல்லது போர் நீடிப்பது சில நாடுகளுக்கு நல்லது. சமாதானத்தை தீவிரமாக விரும்பும் ஜப்பான்தான் துப்பாக்கி உற்பத்தியில் முதல் இடம். போகட்டும்.
இங்கு Armed Roberry என்பது சர்வ சாதாரணம். நவம்பர்,டிசம்பர் மாதங்களில் உச்சத்தில் இருக்கும். நானே மூன்று நான்கு முறை Armed Roberry பார்த்திருக்கிறேன், என்ன ஒன்று கேட்டதை மறுக்காமல் கொடுத்துவிட்டால் அவர்கள் நல்லவர்கள் இல்லை டுமீல்தான். சூடு வாங்கிய இந்தியர்களை எனக்கு தெரியும்.
மற்ற மேற்கு ஆப்பரிக்க நாடுகளைவிட இங்கு இந்தியர்கள் அதிகம்.இந்தியர்களுக்கு இவர்கள் வைத்திருக்கும் பெயர் Stingy Fellows(கஞ்ச கபோதிகள்). பின்னே இங்கு இவர்களை சுரண்டுவதற்கு வந்து விட்டு தானமா செய்ய முடியும். இங்கு தொழில் செய்து பணக்காரர்கள் ஆன இந்தியர்கள் பலர்.
நான் இருப்பது லேகோஸ்(Lagos) என்னும் இடம். நமது மும்பையை போல் வர்தக தலைநகரம். முன்பு நாட்டின் தலைநகரமாக இருந்தது இடநெருக்கடி காரணத்தால் 15 வருடங்களுக்கு முன்பு நாட்டின் மையத்தில் அபுஜாவிற்கு குடி பெயர்ந்தார்கள் ஆட்சியர்கள்.
இங்கு corruption என்பது 10 பில்லியன் டாலர்கள் என்பது சகஜம்.சுரண்டப்படும் பணம் சுவிஸ் வங்கியில் வருட கணக்கில் தூங்கி நாட்டிற்க்கும் பயன்படாமல்,சொந்தக்காரர்களுக்கும் பயன்படாமல் சுவிஸ்
மக்களை செழிக்க செய்கிறது.
இங்கு இந்தியர்களை அடுத்து படை எடுத்து சுரண்டுவது லெபனீஸ்.இவர்கள் வடக்கிலிருந்தும் இந்தியர்கள் தெற்க்கிலிருந்தும்
குத்தகை எடுத்து வர்தகம் (சுரண்டும் தொழில்) செய்கிறார்கள்.
நான் இருக்கும் இடத்தில் மழை மாதம் மும்மாரி பெய்கிறது. மற்றபடி சென்னையின் சுட சுட சீதோஷன நிலைதான்.
இங்கு ஆங்கிலம் தவிர மூன்று மொழிகள் பிரதானமாக பேசக்கூடியவர்கள். அவை யுரூபா,ஈபோ மற்றும் ஹவுஸா. ஹவுஸா பேசுபவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்(99.99%) வடக்கு பகுதியில் வசிக்கிறார்கள். ரொம்ப சோம்பேறிகள் மற்றும் இவர்கள் தான் எப்போதும் ஆட்சியாளர்கள். ஆதலால் சொகுசு பேர்
வழிகள். ஹவுஸா அல்ஹாஜிக்கள் கணக்கில்லாமல் பணம் மற்றும் மனைவிகள் வைத்திருப்பார்கள். நாற்பது ஐம்பது குழந்தைகள் பெற்று போடுவார்கள்.ஏழை
அல்ஹாஜிக்கள் பெற்ற பிள்ளைகளுக்கு தட்டை கொடுப்பார்கள் பிச்சை எடுப்பதற்கு.
ஈபோக்கள் கிழக்கு பிராந்தியர்கள் வர்த்தகத்தில் சிறந்தவர்கள். நம்ப ஊர் சேட்டுக்களை போன்று படிப்பில் அதிக ஆர்வமற்றவர்கள் வியாபாரம் தான் முழு மூச்சே. நைஜர் டெல்டா (எண்ணை கிணறுகள்) தங்களுக்கே சொந்தம் என்று பிரிவினைவாதம் பேசுபவர்கள்.
யுருபாக்கள் நம்போல்வார்கள் மெத்த படித்த மேதாவிக்கள் ஆதலால் ஆட்சியாளர்களாகவும் இல்லாமல் வியாபாரிகளாகவும் இல்லாத தூக்கு தூக்கிகள்.இவர்களில் 50% முஸ்லிம்கள் 50% கிறுஸ்துவர்கள். இவர்கள் மேற்க்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிப்பவர்கள்.
இங்கு மின்சாரம் ஒரு நாளில் 3 அல்லது 4 மணி நேரம் இருந்தால் நாம் பாக்யசாலிகள். ஜெனரேட்டர் வீட்டுக்கு வீடு எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். NEPA என்பது Nigerian Electric Power Authority இதை இவர்கள் Never Ending Problem Always என்பார்கள். NEPAவை அரசு PHCN (Power Holding Corporation of
Nigeria) தனியார் துறைக்கு விற்றது ஆனாலும் அதே பழைய குருடி கதவை திறடி கதைதான், இப்போது PHCNயை Problem Has Changed Name என்று குறிப்பிடுகிறார்கள்.
மின்சார கதைதான் தொலைபேசிக்கும், தண்ணீருக்கும், போக்குவரத்துக்கும் (நம்ம ஊர் நாய் வண்டிதான் இங்க பஸ்) மக்கள் லோல்படுகிறார்கள். தனியார்
கைபேசியில் MTN (நம்ம ஊருல கொஞ்ச காலமா அடி படுகிற தெனாப்பரிக்க நிறுவனம்) 70% சந்தையை ஆக்ரமித்துக்கொண்டு நம்ப ஊர் மதிப்புபடி நிமிடத்திற்க்கு 15ரூ இருந்து 20ரூ வரை பிடுங்குகிறார்கள். CDMAவும் உண்டு ஆனால் எல்லா ஊர்களிலும் இல்லை. காசு கொடுத்தாலும் சேவை ஒன்றும் பிரமாதம் இல்லை.
இங்கு தேர்தல்கள் எல்லாம் கூதல்தான். கள்ள ஓட்டு, வாக்கு சாவடியை கைபற்றுதல் போன்றவை நடந்தாலும் ஜிம்பாப்வேயின் ராபர்ட் முகாபே போல் அல்லாமல் தேர்தல் முடிவுகளை வெளியிட்டு ஜனநாயகத்தை காப்பவர்கள். ஜனநாயகம் இப்போது கொஞ்சம் தழைத்தோங்குகிறது. எண்ணையை விற்று நாட்டு நலனில் அக்கறை காட்டினால் நாடு முன்னேற ரொம்ப வாய்ப்பு உள்ளது.
வாழ்க நைஜீரியா வளமுடன்!!!( அப்பதான நாங்க வளமுடன் வாழ முடியும்.)

Monday, July 7, 2008

ஜெயமோகனின் எழுத்துக்கள்

'தொப்பி''எங்களூரில் காந்தாராவ், கிருஷ்ணா போன்ற தெலுங்கு நடிகர்களுக்குத்தான் செல்வாக்கு. குலசேகரத்தில் இரண்டே தியேட்டர்கள்; ஒன்றில் மலையாளப் படம் என்பதால், எம்.ஜி.ஆர். வேறு வழியில்லாமல் ரசிக்கப்பட்டார். செல்லப் பெயர் தொப்பி. அவர் முதுமையை மறைக்க முகத்தின் மீது பச்சைப் பப்படம் ஒட்டுவதாக கணியான் சங்கரன் சொல்லி எங்க ளூரில் பரவலாக நம்பப்பட்டது. ஆகவே, பச்சைப் பப்படம் என்ற பேரும் சில இடங்களில் புழக்கத்தில்இருந்தது.அவர் இரு லேகியங்களைத் தவறாமல் உண்பதுண்டாம். ஒன்று, தங்க பஸ்பம்; நிறம் மங்காமல்இருப்பதற்காக. இன்னொன்று, சிட்டுக்குருவி லேகியம்; வீரியத்துக்காக! ஆண் சிட்டுக் குருவிகள் எந் நேரமும் பெண் புடைசூழ இருக்குமாம். ஆயிரக்கணக்கில் ஆண் சிட்டுக் குருவிகளைக்கொண்டு செய்யப்படும் சிட்டுக் குருவி லேகியம் சாப்பிடுவதால், எம்.ஜி.ஆர். வெளிப்புறப் படப்பிடிப்பில் இருந்தால் அவரை மொய்க்கும் பெண் சிட்டுக் குருவிகளை விரட்ட தலைக்கு மேல் வலையைக் கட்டி ஜஸ்டின் தலைமையில் ஒரு குழு தயாராக இருக்குமாம். வதந்திதான்.லேகியத்தின் பலன்களை நாம் சினிமாவிலும் பார்க்கலாம். எம்.ஜி.ஆர். காதல் காட்சிகளில் மூன்று வகை நடிப்புகளை வெளிப் படுத்துவார். நெளிந்து நின்று கீழு தட்டைக் கடித்து அரைப் புன்னகை யுடன் மேலும் கீழும் பார்ப்பது... கதாநாயகியின் பின்னால் வந்து நின்று அவள் இரு புஜங்களிலும் பிடித்து சரேலென்று ஒரு பக்கமாக விலக்கி கேமராவைப் பார்த்து உதட்டைச் சுழிப்பது. இடையை ஒசித்து ஒசித்துச் செல்லும் (ஷாட் முடிந்த பின் சரோஜாதேவிக்கு இடுப்பில் எண்ணெய் போட்டு சுளுக்கு எடுப்பார்களாமே!) கதா நாயகிக்குப் பின்னால் துள்ளி ஓடுவது... இதைத் தவிரவும் பல சிட்டுக் குருவித்தனங்கள்!எம்.ஜி.ஆர். தமிழ்ப் பண்பாடு தவறுவதில்லை. (இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை) பாட்டில் கதாநாயகியைப் புல் தரையிலும் மணலிலும் போட்டு புரட்டி எடுத்து, மெல்லிசான சேலை உடுத்திருந்தாளென்றால் மழையில் நனையவைத்து, கேமரா பக்கவாட்டில் இருக்கிற தென்றால் முந்தானையைப் பிடித்து இழுத்து, உதட்டைக் கடித்தபடி பின்னால் துள்ளி ஓடி இடை பிடித்து இழுத்து அணைத்து, அவள் கால்கள் நடுவே காலை நுழைத்து ராமன் வில்லை வளைப்பது போல வளைத்து, அவளைப் பூச்செடி களுக்குப் பின்னால் இட்டுச் சென்று, இரு பூக்களை ஒன்றோ டொன்று உரசவைத்து, பாறை மேல் படுக்கவைத்து, மேலேறிப் படுத்து நாஸ்தி செய்தாலும், பாட்டு இல்லாதபோது பண்பாக 'அதெல்லாம் கையானத்துக்கு அப்பம். நீ இப்ப வீத்துக்கு போ!' என்றுதானே அவர் சொல்கிறார்.எம்.ஜி.ஆர். படத்தில் பாடல்கள் அர்த்தமுள்ளவை. 'ஆண்ட வன் உலகத்தின் முதலாளி... அவனுக்கு நானொரு தொழி லாளி!' அப்படியென்றால் ஏமாற்றலாம். கூலி கேட்டு வையலாம். போஸ்டர் ஒட்டி நாறடிக்கலாம். இது இப்போ தைய சிந்தை. அன்றெல்லாம் பாட்டு புரிவதில்லை. 'தம்பீ நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று...' காஞ்சி என்றால் என்ன? தொடுவட்டியில் வாங்கின சாணித்தாள் பாட்டுப் புத்தகத்தில் பொதுவாகப் பிழைகள் அதிகம். ஆகவே, உள்ளூர் தமிழறிஞரான நான் அதைக் 'கஞ்சியிலே' என்று திருத்தினேன். அப்படியானால் 'படித்தேன்' தவறுதானே? குடித்தேன் என்று ஆக்கியபோது, சுமாராக வந்தது. தேவாசீர்வாதம் புலவர், ''அது செரிதேண்டே மக்கா..! கஞ்சித் தலைவன்னுகூட ஒரு பழைய படம் வந்திட்டுண்டு. ஏழைகளுக்கு அமிருதம்லா கஞ்சி? பதார்த்தகுண சிந்தாமணியிலே என்ன சொல்லியுருக்குண்ணாக்க...'' என்றார்.எம்.ஜி.யாரின் பேச்சு வேறு எங்களுக்குப் புரிவதில்லை. தீப்பொறி ஆறுமுகம் மேடையில் சொல்லும் நகைச்சுவை ஒன்று உண்டு. ஆசிரியர்கள் போராட்டம் நடந்தபோது, அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த எம்.ஜி.ஆர். சொன்னாராம்... 'உங்களுக்கெல்லாம் பைப்பு இருக்கு. பம்பு இல்லை.' ஆசிரியர்கள் திக்பிரமை அடித்துப்போய், பேச்சுவார்த்தை முறிந்தே போயிற்று. தலைவர் சொன்னது, 'படிப்பு இருக்கிறது, பண்பு இல்லை' என்று. அதேபோல காதல் வசனங்கள்... ''கமலா, நீ என்னைத் தப்பா புழிஞ்சுக்கிட்டே (அடிப்பாவி) என்னைக் கயமை அய்க்குது. எங்கம்மாவுக்கு நான் ஒரு சத்தியம் செஞ்சு குதித்திருக்கேன்.'' பொன்மொழிகளும் சிக்க லானவை... 'தேய்ஞ்சு செஞ்சா தவழு. தேயாம செஞ்சா தப்பு!' தப்புக்கு தவழ வேண்டாம், பெஞ்சு மேல் ஏறினால் போதுமா? 'அம்மா அப்பி சொல்லாதீங்கம்மா! தை செஞ்சு அப்பி சொல்லாதீங்க. உங்க மகன் ஒருநாளும் அப்பி செய்ய மாட்டான்.' எங்களூரில் அப்பி என் றால், சின்னப்பிள்ளை கொல்லைக் குப் போவது என்றொரு பொருள் உண்டு.ஆனால், ஒரு ஆச்சர்யம் எனக்கு காத்திருந்தது. இருபதாண்டுகளுக் குப் பின்னால் என்னால் இப்போது ஒரு பழந்தமிழ்ப் படத்தைக்கூடப் பத்து நிமிடம் பார்க்க முடியவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். படங்களை பெரும்பாலும் கடைசி வரை பார்க்க முடிகிறது, அம்புலிமாமா கதை படிக்கும் ஆர்வத்துடன்! திரைக்கதை பற்றிக் கற்ற பின், இந்த இரண்டாண்டுகளில் கச்சிதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்ட படங்கள் என்று கணிசமான எம்.ஜி.ஆர். படங்களைப் பற்றி எண்ணத் தோன்றுகிறது. தமிழில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த வணிகத் திரைக்கதை 'எங்க வீட்டுப் பிள்ளை' தான்!''திலகம்''...சிவாஜியை எங்களூரில் ஆசாரிமார் தவிர்த்துப் பிறருக்குப் பிடிக்காது. வேறு யாருக்காவது பிடித்திருந்தாலும் மதிப்பான நாயர், நாடார் பட்டங்களை இழக்க விரும்பாமல் அமைதி காத்தார்கள். பொதுவாக முக்கியக் கட்டங்களில் பாடித் தொலைக்கிறவர் என்ற குற்றச்சாட்டு பரவல். தங்கை கல்யாணமாகிப் போகும் நேரம் வாசலில் டாக்ஸி காத்திருக்க, விருந்தினர் பஸ்ஸைப் பிடிக்கும் அவசரத்தில் நிற்க, பாசம் பீறிட அவர் பாடுவார். நெஞ்சடைக்கப் பாடாமல் சாக மாட்டார். அன்றெல்லாம் சிவாஜிக்கு காஸ்ட்யூம் அமைக்கும்போதே கக்குவதற்கு கால் லிட்டர் சிவப்பு மையும் தயாராக வைத்திருப்பார்கள்.சிவாஜி படங்களின் நகைச் சுவையின் உச்சம் சண்டைக் காட்சிகள்தான். 'அவன்தான் மனிதன்' என்ற படத்தில் அவர் சண்டைக் காட்சியில் நடித்த போது, நாக்கைக் கடித்தபடி கையை வெடுக் வெடுக் என்று முன்னால் நீட்டிப் பின்னால் இழுப்பார். 'வைக்கோலு பிடுங்கு கான்' என்று அப்பி தாமோதரன் சொல்ல, அது சிவாஜி பட சண்டைக்கான சொல் ஆகியது. 'சுண்டன் படம் எப்பிடி மச்சினா? நாலு வைக்கோலு இருக்குலே... அதுகொள்ளாம், சிரிக்கவகையுண்டு! பின்ன கடசீ ஸீனிலெ மசி துப்பி சாவுதாரு. அங்கினயும் மனசு தெறந்து சிரிக்கிலாம். ஒருமாதிரி கொள்ளாம் கேட்டியா?'...உச்சம் 'திரிசூலம்'. அதில் மூன்று நடிப்பு. இரு கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க நகைச்சுவை. கிழ சிவாஜிக்குப் பக்கவாட்டில் பார்த்தால் தலைகீழ் தேங்காய்மூடி போலத் தெரியும் தாடி. அவர் கே.ஆர்.விஜயாவை பிரிந்திருப்பார். பிரிவுத் துயர் தாங்காமல் தினம் இரண்டு லார்ஜ் ஏற்றிக்கொண்டு (சிவாஜி காங்கிரஸ்காரர் ஆதலினால் படத்தில் இக்காட்சியைக் காட்ட மாட்டார்கள். ஊகம்தான்!) சாட்டையால் தன்னைத்தானே பளார் பளார் என அடிப்பார். அப்போது எதிர் பார்க்கப்படுவது போலவே உதடுகள் துடிக்கும், கன்னம் அதிரும்...உச்சகட்ட நடிப்பு... 'பகைவர் களே ஓடுங்கள், புலிகள் இரண்டு வருகின்றன...' என்ற வரிக்கு சின்ன சிவாஜி காட்டும் சைகைதான். தமிழ் நடிப்புலகில் அதற்கு ஈடு இணை ஏதுமில்லை. 'தென்னாட்டு மார்லன் பிராண்டோ' என்று சிவாஜியை இதன் பொருட்டே சொன்னார்கள் என்று நினைக்கிறேன்.'

முதல் பதிவு

வணக்கம்,

என் கிறுக்கல்களை பதிவு செய்யும் எண்ணமே இந்த பிளாக்.

பாலா

முகவுரை

மனதி லுறுதி வேண்டும். வாக்கினி லேயினிமை வேண்டும்