Wednesday, July 9, 2008

விஷ்ணுவின் தசாவதாரம்




விஷ்ணுவின் தசாவதாரம் டார்வின் தியரியோடு உரசிக் கொண்டு செல்வதாக படுகிறது. டார்வின் முதன் முதலில் உயிரினங்கள் தண்ணிரில் தோன்றி படிப்படியாக பரிணாம வளர்ச்சியடைததாக கூறுகிறார். விஷ்ணுவின் தசாவதாரத்தை எடுத்துக் கொண்டால்


1)மச்சம்- மீன் (தண்ணீரில் மட்டுமே வாழம்)
2)கூர்மம்- ஆமை(நீரிலும் நிலத்திலும் வாழம் உயிரினம்)
3)வராகம்- பன்றி(நிலத்தில் சேற்றில் வாழம் உயிரினம்)
4)நரசிம்மம்-நரன்+சிம்மம்( மனிதனும் அல்லாமல் மிருகமுமில்லாத நிலை)
5)வாமனம்-குள்ள மனிதன்(மிருகத்திலிருந்து வெளியே வந்த மனிதன்)
6)பரசுராம்- வேட்டையாடும் மனிதன்(Survival of the Fittest வேட்டையடி இனத்தை காத்தல்)
7)ராமர்- முழ மனிதன்( உதாரண புருஷன். இந்த அவதரத்திலும் குரங்கு மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் பரிணாம வளர்ச்சி முழமையடையவில்லை)
8)பலராமர்- விவசாயி
9)கிருஷ்ணர்- கள்ள மனிதன்(கள்ளம் குடி புகுந்து தவறு செய்யும் மனிதன்)
10)கல்கி-X Men(பரிணாம வளர்ச்சி மனிதனுக்கு மேலும் இன்னும் செல்லலாம் யார் கண்டது)
சரி இந்த அவதாரங்களை நம்புவதர்க்கு சில அடிப்படை ஆதாரம் சில இருக்கின்றன.
Ø மச்ச புராணத்தில் மச்சமாக அவதரித்த மகாவிஷ்னு ஊழியை(உலகொங்கும் சுனாமி என்று வைத்துக் கொள்வோம்) உருவாக்கி ஒரு முனிவரை (பெயர் தெரியவில்லை) கப்பல் தயாரிக்க செய்து அதில் தேவையான ஜீவராசிகளை ஏற்றி காப்பாற்ற செய்தார். இது பைபிள்ளில் வரும் நோவாஸ் ஆர்க்குக்குடன் ஒத்து போகிறது.
Ø தினமணியில் நான் பாடித்த செய்தி ஒன்று.”புராணங்கள் குறிப்பிடும் பாதாள லோகம் மெக்ஸிகோ!!” . வமனனாக வந்த பகவான் கேரளத்தின் நேர் பின்னால் இருக்கும் மெக்ஸிகோவிற்கு அனுப்பி விட்டார். கேரளத்தில் கொண்டாடப்படும் திருவோணத்தின் கதாநயகன் மகாபலி. மெக்ஸிகோ நாட்டிலும் மகாபலி உள்ளது.இந்தக்கதை அங்கே ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. மிகவும் தூரமான நாட்டில் இருந்து வந்த மன்னன் ஒருவன் அங்கே பனாமா கடற்கரையில் இறங்கினான் என்று அங்கே கதை ஒன்று வழக்கில் உள்ளது. அவன்தான் மகாபலி. அவனைத் தொடர்ந்து அங்கே சென்ற மயன் தனது கைவண்னத்தை காட்டியதன் பயனாகவே மெக்சிகோவில் கோயில்களும் பிரமிடுகளும் உருவாயின என்பது கள ஆய்வில் தெரியவந்தது. அதுதான் இன்றும் மயன் [மாயன்] நாகரீகமாக அங்கே பறைசாற்றி நிற்கிறது. மெக்ஸிகோநாடு ஸ்பெயின் நாட்டவரின் ஆதிக்கத்துக்கு வந்தபிறகு மயன் உருவாக்கிய கலைச்செல்வங்கள் அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ளன.
Ø மெக்ஸிகோநாட்டில் உள்ள மலைகளும் பள்ளத்தாக்குகளும் செடிகொடிகளும் மிருகங்களும் பறவைகளும் மக்களின் உடல் அமைப்புகளும் பயன்படுத்தும் பொருட்களும் எல்லாம் தற்போதைய கேரளநாட்டையே நினைவுறுத்துகின்றன. இதன் மூலம் மகாபலி மற்றும் மயன் ஆகியோர் முன்பு வாழ்ந்த நாடு கேரளம் என்றும் அங்கிருந்து அவர்கள் மெக்ஸிகோ சென்றதனால்தான் இருநாடுகளுக்கும் இடையே ஒற்றுமை காணப்படுகிறது என்றும் அறியமுடிகிறது.
Ø மெக்ஸிகோ நாட்டில் உள்ள நான்கு பக்கமும் படிகள் கொண்ட பிரமிடுகள் சூரியனுக்காக எழுப்ப பட்டவை. இந்தப்பிரமிடுகள் பற்றிய இலக்கணம் மயன் எழுதிய பன்னிருசாரம் என்ற நூலில் இடம்பெற்றுள்ளன. இந்த பிரமிடுகள் கேரள மாநிலத்தில் கண்ணனூர் கோழிக்கோடு மாவட்டங்களிலும் தமிழ்நாட்டில் கன்யாகுமரி தூத்துக்குடி மாவட்டங்களிலும் காணப்படுகின்ரன. இவற்றை காலசுவாமி என்று வணங்குகிறார்கள்.
Ø மேலும் மெக்சிகோ நாட்டில் தமிழர்கள் பயன்படுத்தும் அம்மி -குழவியை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் மண்பாண்டங்களையும் பயன்படுத்துவது கள ஆய்வில் தெரியவந்தது.அங்குள்ளவர்கள் நாகத்தை தெய்வமாக வழிபட்டதை அருங்காட்சியகத்தில் நடத்திய கள ஆய்வுகள் தெளிவுபடுத்தின. ஆகவே மெக்ஸிகன் நாட்டு மாயன் நாகரீகம் தமிழ்நாட்டு மயன் நாகரீகமே என்று கள ஆய்வில் நிரூபணமாகியுள்ளது
Ø ராமாவதார சுவடுகள் இந்தியா முழுதும் ஆங்காங்கே இருப்பதாக சரித்திர மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். மேலும் சேது அனையை நான் நம்புகிறேன்.
Ø கிருஷ்ணாவதாரத்தில் நடந்த மகாபாரத யுத்தகளம், குருஷேத்திரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது. ஆயுத பிரயோகங்களால் இன்றும் அங்கு Geiger Counterயை (கதிர் வீச்சை கண்டறியும் கருவி) கொண்டு சென்றால் இன்றும் அலறுமாம்.
Ø பரீஷீத் வம்சத்தில் வந்த பகீரதன் தன் முயற்சியால், கபிலரின் சாபத்தால் சாம்பலாய் போன தன் மூதாதயர்களை மீட்க்க கங்கையை பாதாளலோகத்திற்கு கொண்டு சென்ற கபிலரின் ஆரண்யம் தான் இன்று காலிஃபோர்னியா. இன்றும் Ash Island ,Horse Island(அசுவமேத யாகத்தினால் தானே குதிரை கபிலரின் ஆரண்யம் சென்றது) இருப்பதாக கூறுகிறார்கள்.

கல்கி அவதாரம் எப்போது என்று தெரியவில்லை, நாமும் இன்னும் கொஞ்சம் பரிணாம வளர்சியடைந்து பார்ப்போம்.

No comments: