
ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கும் ஐஃபோன் கடந்த வாரம் பெங்களூரில் மட்டும் பத்து லட்சம் ஃபோன்கள் விற்று தீர்த்ததாம் மேலும் ஆப்பிள் ஸ்டோர்ஸ் என்னும் வலைதளத்திலிருந்து டவுன்லோட் செய்யப்பட்டிருக்கும் அப்ளிகேஷன்கள்(ஃபோன் உபயோக ப்ரொக்ரம்கள்) மட்டும் கடந்த வாரம் மட்டும் ஒரு கோடியை தாண்டிவிட்டதாம். ஆப்பிளின் ஐஃபோன் என்பது கைபேசி மட்டுமல்ல அது ஒரு நடமாடும் கணினி, மீடியா பிளேயர்,இன்டர்நெட் மற்றும் என்னென்னவோ இருக்கிறது.
கைபேசிகளில் புதிய முயற்சி என்பது இன்றியமையாதது, ஆப்பிள் ஐஃபோனின் முயற்சிக்கு முன்பே லினிக்ஸ் தளத்தில் இயங்கும் கைபேசிகளின் முயற்சிகளளை ஆரம்பித்து விட்டது நோக்கியா. இதனால் என்ன பயனென்றால் லினிக்ஸ் ஒரு திறந்த பெட்டகம் அதாலால் கைபேசிகளில் புதிய அப்ளிகேஷன்கள் உலகத்திற்கு வரும்.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் நோக்கியா ஃபோன்கள் வருடத்திற்கு 1.2 பில்லியன்களாம், மொத்த உலக சந்தை 1.5 பில்லியன்கள். இது இன்னும் ஐந்து வருடங்களில் ஏழ பில்லியன்களாகும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ம் உலகம் எங்கேயோ போய்கிட்டு இருக்கு.
No comments:
Post a Comment