Thursday, July 17, 2008

பங்கு சந்தை



மும்பை பங்கு சந்தையில் கரடி புகுந்து விளையாடியிருக்கிறது, நேற்று 654 புள்ளிகள் குறைந்து சென்சக்ஸ்12,636 புள்ளிகளில் இருந்தது. இது கடந்த 15 மாதங்களில் மிக குறைவாம். இந்த சரிவால் முதளீடாளற்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு 1.8 லட்ச கோடிகளாம். இதனால் பண வீக்கம் அதிகமாகலாம் இதனால் வங்கிகளில் வரி விகிதம் உயர்த்தபடலாம் என்று கூறப்படுகிறது. இதனால் நான் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டு கடனின் தவணை உயர்த்தப்படலாம் அல்லது கட்டும் கால அளவு நீட்டிக்கபடலாம்.
போகட்டும் இதற்கு காரணமாக கூறப்படுவது ஜூலை 22ல் உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான ஓட்டெடுப்பு. இதற்கு காரணம் கம்யூனிஸ்ட் இடதுசாரிகள் காங்கிரஸ் அரசுக்கு தன் ஆதரவை விலக்கி கொண்டது இதற்கு காரணம் மன்மோகன் சிங் நியூக் எனப்படும் அணு ஒப்பந்தத்தில் தீவிரம் காட்டுவது இதற்கு காரணம் அமெரிக்க அதிபர் புஷ் தன் காலத்திலேயே அந்த ஒப்பந்தம் நிறைவேற வேண்டும் என நினைப்பது.
புஷின் நினைப்பு என் கடனின் தவணையை உயர்த்துகிறதல்லவா இதுதான் கேயாஸ் தியரி அல்லது பட்டர்ஃபிளை எஃபக்ட்.

No comments: