
கருத்து சொல்ல வருகின்ற படத்தில் லாஜிக் இருக்க வேண்டும் என்று எதிர்பார்கின்றேன் நான். உதாரணமாக தசாவதாரத்தில் வைரஸ் பையோ வெப்பன் என்று ஏதோ கருத்து சொல்ல வருகிறார் கமல் இதில் லாஜிக் எதிர்பார்ப்பது தவறா. படம் முழவதும் கண்ணப்ப நாயனார் செய்தாது போல் நம் முகத்தில் காலை வைத்து கண்ணை மல்லிகை சரங்களால் சுற்றுகிறார். குரங்கின் கதவை மூட மறந்த பெண்ணில் ஆரம்பித்து பாட்டி கமல் எல்லார் முதுகிலும் ஏறி வைரஸ் குப்பியை பெருமாள் சிலையில் போடுவதிலிருந்து நாயுடு கமல் பைனாகுலரில் வைரஸை பார்ப்பது வரை படம் முழவதும் திரைகதையில் லாஜிக் சொதப்பல். எனக்கென்னமோ கமல் ஆரம்பத்தில் வேறு கதையை தேர்ந்தெடுத்து பிறகு தோல்விக்கு பயந்து வர்த்தக ரீதியில் வெற்றியடைய கதையை மாற்றியிருக்கலாம் என்று படுகிறது, காரணம் படம் ஆரம்பிப்பதற்குமுன் வந்த படங்களில் சாமியார் கமல், நீக்ரோ கமல் போன்ற சில கதாபாத்திரங்கள் விடுபட்டிருக்கிறது. கமலின் கருத்து படங்களான ஹேராம்,அன்பேசிவம், குருதி புனல் போன்ற படங்களின் திரைகதைகளில் லாஜிக் இருந்தது ஆனால் அது மிகவும் அறிவுபூர்வமாகி, பி மற்றும் சி சென்டர்களில் தோல்வியடைகிறது என்பது நிஜம். கமலின் தெனாலி, வசூல்ராஜா, பஞ்ச பாண்டவர், மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற சிரிப்பு படங்களுக்கு லாஜிக் தேவையில்லை ஏனெனில் லாஜிக் பார்த்தால் ஹாஸ்யம் தொலைந்துவிடும். அதே போல் கருத்து படங்களில் லாஜிக் இல்லை என்றால் சிரிப்பு படமாகிவிடும். குறிப்பாக நான் விரும்பும் கமல் கவனிப்பாரா.
No comments:
Post a Comment