
ஒரு நாள் கடைக்கு நாய் ஒன்று வந்தது. முதலில் கடைகாரர் அந்த நாயை விரட்டினார் பிறகு அதன் வாயில் ஒரு சீட்டை பார்த்தார் அதில் “நாயின் கழத்து பட்டையில் 100ரூபாய் உள்ளது அதை வைத்துக் கொண்டு 12 சோப்பும் 1 ஷாம்பூவையும் கொடுத்து உதவுங்கள்” என்றிருந்தது. கடைக்காரரும் சீட்டில் உள்ளதையும் மீதி சில்லரையையும் பையில் போட்டு கொடுத்தார். நாயும் கவ்விக் கொண்டு சென்றது. கடைக்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை, கடையை மூடிக்கொண்டு நாயின் பின்னலேயே சென்றார். நாய் ஒரு வீட்டின் முன் நின்றது காலால் கதவை தள்ளி பார்த்து, கதவு திறக்கவில்லை. பிறகு கதவை தன் தலையால் முட்டிவிட்டு காத்திருந்தது. சத்தம் கேட்டு நாயின் எஜமானன் வந்தான். நாயை முறைத்து பார்த்துவிட்டு அதை அடிக்க ஆரம்பித்தான். கடைக்காரருக்கு பயங்கர கோபம் , எஜமானனிடம் சென்று “இவ்வளவு அறிவார்ந்த நாயை போய் அடிக்கின்றீர்களே” என்று கேட்டார். அதற்கு அந்த எஜமானன் “இந்த அறிவுகெட்ட நாய் சாவியை மறந்து விட்டு சென்றிருக்கிறது, இந்த மாதம் மூன்றாவது முறையாக இதை செய்கிறது” என்றான்
கதையின் நீதீ: மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!
கதையின் நீதீ: மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா!
1 comment:
Facebookல் தோழி ஒருவர் தான் படித்ததில் மிகவும் பிடித்ததாக குறிபிட்டிருந்தார்.
மிகவும் அருமையான் உலக எதார்த்தத்தை உணர்த்தும் கதை.
Post a Comment