Thursday, July 10, 2008

நவீன ஓவியங்கள்



என் நண்பன் சுரேஷ் சென்னை ஓவியக்கல்லூரியில் படித்தான். அது முடித்தப்பின் சோழமண்டலம் எனப்படும் மகாபலிபுரத்தில் உள்ள பயிற்சிக்கூடத்தில் சேர்ந்து கோணல்மாணாலாக சிற்ப்பங்கள் மற்றும் புரியாத ஓவியம் வரைவது என்று பயிற்சி பெற்றான். இப்போது அமெரிக்காவில் அனிமேஷன் செய்து கொண்டிருக்கிறான். எனக்கு என்றுமே நவீன ஓவியங்கள் புரிவதில்லை. நவீன ஓவியங்களை வீட்டு வரவேற்ப்பரையில் மாட்டி வைத்து அழகு பார்க்கிறார்கள். மாட்டி வைத்திருக்கும் சொந்தக்காரருக்கு அந்த ஓவியங்களின் அர்த்தங்கள் விளங்குவதில்லை. நானும் இரண்டு நவீன ஓவியங்களை என் வரவேற்ப்பரையில் மாட்டி வைத்திருக்கிரேன் பந்தாவிற்க்காக. நவீன ஓவியங்கள் புரியவில்லை என்றாலும் ரசிக்கலாம்.
நவீன ஓவியத்தை ரசிக்க சில தகுதிகள் வேண்டும். முதலில், இதற்கு என்ன அர்த்தம் என்று சித்திரக்காரரிடம் கேட்கக் கூடாது.
நவீன ஓவியத்தை புதுக்கவிதைக்கு ஒப்பிடலாம். படித்துப் பார்க்கிறோம். பிடித்திருந்தால் நல்ல கவிதை என்கிறோம். பிடிக்கவில்லை என்றால், அந்தக் கவிதை நமக்குள் சிறகடிப்பை ஏற்படுத்தவில்லை என்றுதான் அர்த்தம். இதுபோல்தன் நவீன ஓவியமும்.
இதை ரசிக்க உங்களுக்கு ஒரு கலை விமர்சகரின் உதவி தேவையில்லை. அவரிடம் சென்றால், the linear rhythm of his line juxtapose with the organizational schema of variantly rich polychrome shades and strokes are of orchestration of colors are markedly original என்பார் தேவையா நமக்கு.
மேலே உள்ள நவீன ஓவியத்தின் பெயர் திரொளபதி. ஏதாவது விளங்குதா. மற்ற ஒரு ஓவியத்திற்க்கு என்ன பெயர் என்று யாராவது சொல்ல வேண்டுமா என்ன.
ஒரு முறை பிகாசோ கட்டம் கட்டமாக நவீன ஓவியம் வரைந்திருந்தாராம், அதை பார்க்க வந்த நண்பர் ஒருவர் அதில் கட்டடங்கள், சிங்கம், பறவை, மனிதமுகம் மற்றும் ஏதேதோ தெரிவதாக சொன்னாராம். அதற்க்கு பிக்காசோ சொன்னது “அதெல்லாமா தெரியுது இதுல”….

No comments: